செவ்வாய் கிழமையில் மறந்தும் இவ்வாறான பொருட்களை மட்டும் வாங்கி விடாதீர்கள். பண கஷ்டமும், நஷ்டமும் ஏற்படும்

chevvai
- Advertisement -

நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அவ்வாறு செவ்வாய்க்கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருப்பது செவ்வாய் கிரகத்திற்கு தான். செவ்வாய் பகவான் செம்மை நிறம் உடையவர். இவர் மனிதனின் இரத்தத்திற்கு சமந்மானவராகவும், மனிதனுக்கு ஆற்றல், வலிமை, சக்தியை கொடுப்பவராகவும் செவ்வாய் பகவான் திகழ்கிறார். செவ்வாய் பகவானின் அருள் மட்டும் கிடைத்து விட்டால் மனிதனுக்கு வீடு, மணை, கார் போன்றவை வாங்கும் யோகம் எளிதாக கிடைத்துவிடும். ஆகவே செவ்வாய் பகவானின் அருள் எப்பொழுதும் நமக்கு கிடைக்க வேண்டும். அவரின் கடைக்கண் பார்வை கிடைத்து விட்டால் போதும். நாம் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். ஆகவே செவ்வாய்க்கிழமை ஒரு சில பொருள்களை வாங்கிக் கொண்டு வந்தால் செவ்வாய் பகவானின் அருள் குறைந்து கொண்டே செல்லும். எனவே இதனை கவனமாக கையாளவேண்டும். வாருங்கள் செவ்வாய்க்கிழமையில் வாங்க கூடாத பொருட்களைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆற்றல், வீரம், வலிமை போன்றவற்றை தரக்கூடியவர் அங்காரகன் என்று சொல்லப்படும் செவ்வாய் ஆவார். ஆகவேதான் நவகிரகங்களில் முதன்மையானவராக செவ்வாய் கிரகத்தை அழைக்கின்றோம். அவ்வாறு செவ்வாய் கிரகத்திற்கு உரியவராகவும் இருப்பவர் முருகப்பெருமானாகவும் உள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபடுவதற்க்கு சிறந்த நாளாகவும் அமைகின்றது. உகந்த காரியங்கள் செய்வதற்கு செவ்வாய்க்கிழமை நல்ல நாளாக பார்க்கப்படுகிறது. ஆனால் பெரிய அளவில் மங்களகரமான காரியங்கள் செய்வதற்கும், ஆன்மீக வழிபாடு செய்வதற்கும் செவ்வாய்க்கிழமை ஏற்ற நாளாக அமைகிறது.

செவ்வாய்க்கிழமை கருப்பு நிற ஆடைகளை வாங்கவோ, கருப்பு நிற உடைகளை அணியவும் கூடாது. இந்த கிரகம் செம்மை நிறத்தில் இருப்பதால் செங்கோள் என அழைக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் சிவப்பு நிற உடைகளை அணிவது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆரஞ்சு நிறத்தினால் ஆன ஆடைகளை செவ்வாய் கிழமையில் அணிவதன் மூலம் செவ்வாய் தோஷத்தின் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட முடியும் என்பது ஐதீகமாகும்.

- Advertisement -

அடுத்ததாக செவ்வாய்க்கிழமையில் இரும்பும், இரும்பு சம்பந்தமான பொருட்களை வாங்குவதும் அசுப காரியமாக பார்க்கப்படுகிறது. அடுத்தபடியாக நிலம், வீடு வாங்குவதாக இருந்தால் செவ்வாய் கிழமையில் அதை செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த வீட்டில் வறுமை, நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

அதேபோல் கண்ணாடி சம்பந்தமான பொருட்களை வாங்குவதும், கண்ணாடி சம்பந்தப்பட்ட பொருட்களை மற்றவர்களுக்குக் பரிசளிப்பது உங்களுக்கு பண நஷ்டத்தை ஏற்படுத்தும். அதே போல் அழகு சாதன பொருட்கள், அசைவ உணவுகள் இவற்றை வாங்குவதும் நமது குடும்பத்திற்கு வீண் விரயத்தையும், பண கஷ்டத்தையும் கொடுத்து விடும். எனவே செவ்வாய்க்கிழமை இவற்றை செய்வதை தவிர்த்து விட வேண்டும். பிறகு முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமையில் தொடர்ந்து வழிபட்டு வர உங்கள் வீட்டில் செல்வம் செழித்து ஓங்கும்.

- Advertisement -