செவ்வாய்க்கிழமை இந்தப் பொருளை, இப்படி தானமாகக் கொடுத்து வந்தால் வாழ்நாள் முழுவதும் செல்வந்தர்களாக வாழலாம்.

toor-dal
- Advertisement -

எந்த ஒரு பரிகாரத்தை செய்ய தொடங்குவதற்கு முன்பும் மனநிறைவோடு செய்ய வேண்டும். இதை செய்தால், இது நடந்து விடுமா என்ற சந்தேகம் ஒரு துளிகூட பரிகாரம் செய்பவர்களுடைய மனதில் எழக்கூடாது. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நாம் நன்றாக இருப்போம் என்று மனத் திருப்தியோடு முதலில் நினைக்க வேண்டும். அதன் பின்பு பரிகாரத்தை செய்ய வேண்டும். பரிகாரத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் பரிகாரத்தை செய்வதன் மூலம் கடுகளவும் பயன் இருக்காது என்ற கருத்தோடு இந்த பதிவினை தொடருவோம்.

murugan-vilakku

தீப வழிபாடு இறைவழிபாடு செய்ய வேண்டும் என்றாலே நம் நினைவிற்கு வருவது வெள்ளிக்கிழமை தான். ஆனால், இறைவழிபாட்டில் வெள்ளிக்கிழமைக்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவு செவ்வாய்க்கிழமை தீப வழிபாடிற்க்கும், இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். செவ்வாய் பகவானை, செவ்வாய்க்கிழமை தோறும் வழிபாடு செய்துவர நம்முடைய வாழ்க்கையில் செல்வவளம் நிச்சயம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சொத்து சேர்க்கை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வாழ்நாள் முழுவதும் செல்வந்தர்களாக வாழ செவ்வாய்க்கிழமை கட்டாயம் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பூஜை அறையில் 6 மண் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து, முருகப் பெருமானை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான வழிபாடாக சொல்லப்பட்டுள்ளது. இப்படி செவ்வாய்க்கிழமை வழிபாட்டை மனதார நம்பிக்கையோடு தொடர்ந்து செய்து வர, வீடு, நிலம், போன்ற அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் கட்டாயம் வரும்.

thuvaram-paruppu

இந்த தீப வழிபாட்டுடன் சேர்த்து, செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டிய தானம். துவரம் பருப்பு தானம். வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய்கிழமைகளில் உங்களால் எவ்வளவு முடியுமோ அதாவது ஒன்பது என்ற கணக்கில் அந்த துவரம்பருப்பை தானம் கொடுக்க வேண்டும். ஒரு கிலோ தானத்திற்காக துவரம்பருப்பை கடையிலிருந்து வாங்குகிறீர்கள் என்றால், அதிலிருந்து 100 கிராம் எடுத்து விடுங்கள். அப்போது 900 கிராம் என்ற கணக்கு வரும் அல்லவா? இப்படி 9 என்ற எண், தானம் கொடுக்கும் அளவில் வரவேண்டும்.

- Advertisement -

9 என்ற எண் நீங்கள் தானம் கொடுக்கப்படும் அந்த பொருளின் எடையில் இருக்க வேண்டும். இப்படி சூட்சுமமாக இந்த துவரம்பருப்பை தானம் கொடுத்து வரும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் பொருள் சேர்க்கை இருக்கும். நீங்கள் செல்வந்தர்களாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இப்படி இந்த துவரம்பருப்பை யாருக்கு தானமாக கொடுப்பது. இயலாதவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு, ஆசிரமத்திற்கு, இப்படி யாருக்கு வேண்டுமென்றாலும் இந்த துவரம்பருப்பை தானம் கொடுக்கலாம்.

cash

செல்வ செழிப்பு என்றால் உடனே கோடி கோடியாக கொட்டும் என்ற அர்த்தம் கிடையாது. வாழ்க்கையில் நிறைவாக 16 வகையான செல்வங்களையும் பெற்று, யார் மனநிறைவோடு வாழ்கிறார்களோ அவர்கள் தான் செல்வந்தர்கள். கோடி ரூபாயை கையில் வைத்திருந்தும் மற்ற செல்வங்கள் கையில் இல்லை என்றால் அதன் மூலம் நமக்கு எந்த ஒரு பயனும் இருக்காது அல்லவா?

praying-god

நோய் நொடி இல்லாத, மன நிறைவான, சந்தோஷமான வாழ்க்கை அமைந்து, அளவான பணத்தோடு சேர்ந்த மற்ற 16 வகையான செல்வங்களையும் நிறைவாகப் பெறுவதற்கு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள சுலபமான பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கையுள்ளவர்கள் செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -