வாழ்க்கையே விரக்தியாய் இருக்கா? வாழும் வாழ்க்கையை தடுமாற்றம் இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த முத்திரை ஒன்றே போதும்.

sad1
- Advertisement -

சில பேர் வாழ்க்கையில் பெரிய போராட்டங்கள் இருக்காது. சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் போகும். வாழ்க்கையை சுமுகமாக நடத்தி செல்வார்கள். ஆனால் ஒரு சிலரோட வாழ்க்கை போராட்டத்தில் தான் இருக்கும். போராட்டமே வாழ்க்கையாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை இதற்கு மேல் எந்த கட்டத்தில் நகர்த்திச் செல்வது என்றே தெரியாது குழப்பத்தில் விரக்தியில் வெறுமையான மனதோடு வாழ்க்கையை வெறுத்து விடுவார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் சரி, அல்லது ஏதாவது ஒரு குழப்பமான தருணத்தில் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்பி போனாலும் சரி, அந்த சமயத்தில் உங்களை தெளிவுபடுத்த இந்த முத்திரை உங்களுக்கு வழிவகுக்கும். குறிப்பான மனம் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு உங்களைத் தேடி வரும்.

- Advertisement -

முதலில் நீங்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழித்துக் கொள்ள வேண்டும். முகம் கை கால்களை அலம்பிக்கொண்டு அமர்ந்து கொள்ள வேண்டும். நாற்காலியில் அமர்ந்து கொண்டாலும் சரி, தரையில் அமர்ந்து கொண்டாலும் சரி, கால் பாதங்கள் தரையில் பட வேண்டாம். தரையில் அமர்ந்தால் ஒரு பாய் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.

கிழக்கு பார்த்தபடி அமர்ந்து கொள்ளுங்கள். கையில் சின் முத்திரையை வைத்துக் கொள்ளுங்கள். முதுகு தண்டுவடம் நேராக இருக்கட்டும். சின்முத்திரை என்பது நம்முடைய கைகளில் கட்டை விரல், ஆள்காட்டிவிரல் இரண்டு விரல்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு, மற்ற மூன்று விரல்களை விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள்.

- Advertisement -

இந்த முத்திரையை இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு, அமர்ந்து கொண்டு மூச்சை உங்களால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் உள்வாங்கி, மூச்சை வெளி விட வேண்டும். இவ்வாறு ஒரு ஐந்து நிமிடங்கள் மனதை அமைதிப்படுத்தி கொண்டு தியானம் செய்யுங்கள். கையிலிருக்கும் சின்முத்திரை மாறக்கூடாது. ஆரம்பத்தில் மனதில் எதையும் நினைக்காமல் தியானம் செய்வது சிரமமாகத் தான் இருக்கும். போக போக பழகிவிடும். அதன்பிறகு நீங்கள் ஐந்து நிமிட நேரத்தை 10 நிமிடங்கள் 20 நிமிடங்கள் என்று அதிகரித்துக் கொள்ளலாம். இந்த முத்திரை உங்கள் மனம் சம்பந்தப்பட்ட குழப்பத்திற்கு ஒரு தீர்வை கொடுக்கும்.

அதன்பின்பு உங்களுடைய 2 இரு கைகளையும் கோர்த்து, இரண்டு கைகளையும் தேய்த்து ஒருமுறை உங்களுடைய கைவிரல்களை சரி செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு நீங்கள் குபேர முத்திரையை உங்களுடைய கைகளில் பிடிக்கவேண்டும். குபேர முத்திரை பிடித்து முதுகு தண்டு வடத்தை நேராக வைத்துக் கொண்டு, மனதை அமைதிப் படுத்தி கொண்டு மூச்சை உள் வாங்கி விட வேண்டும். ஆரம்பத்தில் இந்த முறையையும் 5 நிமிடங்கள் பிடித்தால் போதுமானது. போகப்போக உங்களுடைய தியான நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த முத்திரையை பிடித்துக்கொண்டு எந்த தேவைகளையும் நீங்கள் மனதார நினைக்க வேண்டாம். எந்த பிரச்சனையையும் மனதில் நினைக்க வேண்டாம். இது தேவை அது தேவை என்று எதையும் கேட்க வேண்டாம். மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் போதும். உங்களுக்கு என்ன தேவை எதைக் கொடுக்க வேண்டும் என்பது இந்த பிரபஞ்சத்திற்கு தெரியும்.

தியானத்தின் பொது இப்படிப்பட்ட முத்திரைகளை உங்கள் கையில் வைத்துக்கொண்டு சக்கரங்களை இயக்கும் போது உங்கள் ஆழ் மனதில் பதிந்திருக்கும், உங்களுடைய தேவைகளை இந்த பிரபஞ்சமே பூர்த்தி அடையச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். யோசிக்காதீர்கள் மேல் சொன்ன இரண்டு முத்திரைகளை தினம்தோறும் வைத்து தியானம் செய்யப் பழகி வாருங்கள். உங்கள் மனம் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சீக்கிரத்தில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -