சித்திரை மாத அமாவாசை சோடச கலை நேரம்

amavasai2
- Advertisement -

உழைத்தால் தான் காசு வரும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் அந்த உழைப்போடு சேர்த்து, கடவுளின் அனுக்கிரகமும் சேரும் போது நம்முடைய வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்கள் கூடிய சீக்கிரம் நடக்கும். அதற்காகத்தான் ஆன்மீகம் சார்ந்த சில பரிகாரங்களை செய்கின்றோம்.

அந்த வகையில் கோடீஸ்வர யோகத்தை தரும் கோட்சக் கலை நேர வழிபாட்டினை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சோடசக்கலை என்றால் என்ன, இந்த சித்திரை அமாவாசை திதியில் சோடசக்கலை நேரம் எப்போது வருகிறது, அந்த நேரத்தில் எப்படி வேண்டுதல் வைத்தால் அது பலிக்கும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவலை தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

அகத்திய முனிவரால் நமக்கு கொடுக்கப்பட்டது தான் இந்த அதி அற்புதம் வாய்ந்த சோடசக்கலை நேரம். அமாவாசை திதி முடியும் போதும், பௌர்ணமி திதி முடியும் போதும் இந்த சோடசகலை நேரம் வரும். சோடசக்கலை நேரம் என்பது மொத்தமாக 2 மணி நேரம் வரும். ஆனாலும் அந்த இரண்டு மணி நேரத்தில் வெறும் 5 வினாடிகள் மட்டுமே சோடசக்கலையின் சக்தி வாய்ந்த நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

அதாவது 5 சொடக்கு போடும் நேரம் மட்டுமே சோடச கலை நேரம். ஆனால் இந்த நேரம், அந்த இரண்டு மணி நேரத்திற்குள் எப்போது வரும் என்பது நமக்கு தெரியாது. ஆகவே அந்த இரண்டு மணி நேரத்தையும் நாம் சரியாக பயன்படுத்தி, இறைவனிடம் வரங்களை கேட்டால் வேண்டிய வரத்தை உடனடியாக பெற முடியும்.

- Advertisement -

சித்திரை அமாவாசை சோடச கலை நேரம்

இன்று 7-5-2024 செவ்வாய்க்கிழமை காலை 11:18 மணி முதல், புதன்கிழமை காலை 9:19 மணி வரை அமாவாசை திதியானது இருக்கின்றது. 8-5-2024 புதன்கிழமை காலை 8:19 மணியிலிருந்து 10:19 மணி வரை சோடசக்கலை நேரம் இருக்கிறது. இந்த சோடசகலை நேரத்தில் பூஜையறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, தரையில் ஒரு விரிப்பு விரித்து கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு வாழ்க்கையில் எந்த நல்லது நடக்க வேண்டுமோ, அந்த நல்லதை இறைவனிடம் வரமாக கேளுங்கள். உதாரணத்திற்கு குடும்ப சந்தோஷம், படிப்பு, வேலை, வருமானம் இப்படி எது தேவை என்றாலும் அதை கேட்கலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயம், கடன் சம்பந்தப்பட்ட விஷயம் தீரவும் இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்யலாம்.

- Advertisement -

மனதை ஒருநிலைப்படுத்தி முதுகு தண்டுவடத்தை நேராக வைத்து, ஏதாவது ஒரு வரத்தை மட்டும் கேட்க வேண்டும். அந்த ஒரு விஷயத்தை மட்டும் மீண்டும் மீண்டும் மனதில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கிறது என்றால், அந்தக் கடனை தீர்க்க எவ்வளவு பணம் தேவையோ, அவ்வளவு பணம் வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: சனி பகவானால் யோகம் பெரும் ராசிகள்

இந்த இரண்டு மணி நேரத்தில் நீங்கள் செய்யக்கூடிய பிரார்த்தனையானது நிச்சயம் கூடிய சீக்கிரத்தில் பலிக்கும் என்பதுதான் நம்பிக்கை. உங்களுக்கு கடனே இல்லையா. சீக்கிரம் லட்சாதிபதியாக, கோடிஸ்வரனாக வேண்டுதல் வைக்கலாம். நிச்சயம் அந்த கனவும் நினைவாகும். தேவைப்படுபவர்கள் இந்த பதிவில் படித்த ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -