தலைமுடிக்கான அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் விளக்கெண்ணெய்! ஆனால் அதைப் பயன்படுத்துவதில் செய்யும் தவறுகள் என்ன? இது தெரிஞ்சா இனி வேறு எண்ணெயை தேடவே மாட்டீர்கள்!

amanakku-oil-for-hair
- Advertisement -

பொதுவாக தலைமுடி பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய எண்ணெய்களின் விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. அந்த அளவிற்கு தலைமுடி உதிரும் பிரச்சனை அதிகரித்து வருகிறது. தலைமுடி உதிர்வதற்கு முதலில் வேர்க்கால்கள் வலுவின்மை காரணமாக இருக்கிறது. சரியான ஊட்டச்சத்து கிடைக்காததால் வேர்க்கால்கள் வலுவிழந்து முடி கொட்ட துவங்குகிறது. நாளடைவில் இதனால் அதிகப்படியான முடிகளை இழந்து விடுகிறோம்.

அதுவரை முடியின் மீது கவனம் செலுத்தாதவர்கள் அப்போது தான் எல்லா எண்ணெய்களையும் வாங்கி உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். தலை முடி பிரச்சனைக்கு எப்பொழுதும் செயற்கையான தீர்வு காண்பது மிகவும் தவறு. அது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துமே தவிர சரி செய்வது இல்லை எனவே இயற்கையான வழியில் ரொம்பவே எளிதாக தீர்வு காண்பது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

பொதுவாக செடிகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றலை கொண்டுள்ளது. ஆமணக்கு செடியில் இருந்து பெறப்படும் இந்த ஆமணக்கு எண்ணெய் எனப்படும் விளக்கெண்ணெய் நல்ல அடர்த்தியுடன், பிசுபிசுப்பு தன்மையுடன் காணப்படுகிறது. இதனால் இதில் இருக்கும் சத்துக்களும் எண்ணற்றவை. நேரடியாக இதனை பயன்படுத்துவதன் மூலம் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் இதன் பிசுபிசுப்பு தன்மை மற்றும் வாடை பலருக்கு பிடிப்பதில்லை.

ஆனால் சரியான முறையில் விளக்கெண்ணையை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியில் இருக்கும் வேர் கால்களுக்கு நல்ல வலிமை கிடைக்கும். முடி உதிர்தல் பிரச்சனையை விரைவில் நின்று புதிதாக முடி வளர தொடங்கும். மேலும் முடி கரு கருவென கருமையாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் முடியின் நுனிகளில் இருக்கும் இரட்டை பிளவுகளை விரைவில் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவக்கூடிய இந்த விளக்கெண்ணையை கோல்ட்டு பிரஸ்டு(cold pressed) முறையில் தயாரிக்கப்படுவதை வாங்கி பயன்படுத்துவது மிகவும் நல்லது.

- Advertisement -

விளக்கெண்ணெயை கோல்ட்டு பிரஸ்டு முறையில் தயாரிப்பதன் மூலம் அது ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை. ரசாயன கலவைகள் அன்றி, சூடு ஏற்றாமல் குளிர்ச்சியான முறையில் தயாரிக்கப்படும் இந்த கோல்ட்டு பிரஸ்டு விளக்கெண்ணெய் தூய்மையானதாக இருக்கிறது. இந்த எண்ணெய் பல்வேறு தளங்களில் விற்பனைக்கு உள்ளன. கோல்ட்டு பிரஸ்டு செய்யப்படாத விளக்கெண்ணெயை காட்டிலும், இந்த கோல்ட்டு கம்பிரஸ்டு விளக்கெண்ணெய் தலை முடி உதிர்வதை விரைவாக தடுத்து நிறுத்துகிறது.

எனவே நீங்கள் விளக்கெண்ணை வாங்கும் பொழுது இதனை நினைவில் வைத்துக் கொண்டு வாங்குவது நல்லது. பின்னர் இதே முறையில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விளக்கெண்ணையை நேரடியாக பயன்படுத்த கூடாது என்பதால் எந்த அளவிற்கு விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்கிறோமோ, அதே அளவிற்கு சமமாக தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ளுங்கள். இந்த இரண்டையும் நன்கு கலந்த பின்பு கைகளில் எடுத்துக் கொண்டு உங்களுடைய தலை முடியின் வேர் கால்களுக்கு மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.

10 நிமிடம் தலைமுடியில் வேர்க்கால்களுக்கு நன்கு மசாஜ் செய்த பின்பு கஞ்சி சேர்க்கப்பட்ட சிகைக்காய் போட்டு தலைமுடியை அலசி கொள்ளலாம். அல்லது மைல்டான ஷாம்பு வகைகளைப் போட்டு அலசிக் கொள்ளுங்கள். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்ய தலைமுடி உதிர்தல் கண்டிப்பாக நின்றுவிடும். மேலும் இதன் வாசம் பொடுகு, பேன் போன்ற பிரச்சனைகளை ஒழித்துக் கட்டும். இதன் குளிர்ச்சி தன்மை சளி பிடிக்காமல் இருக்க செய்ய, இதனை நீண்ட நேரம் தலையில் வைத்திருக்க வேண்டாம். 10 நிமிடம் ஊற வைத்து தலையை அலசி காய வைத்து விடுங்கள். தொடர்ந்து வாரம் இருமுறை என்று இரண்டு மாதம் செய்து பாருங்கள், நிச்சயம் உங்கள் முடி பிரச்சனைகள் அனைத்தும் இயற்கையான வழியில் தீரும்.

- Advertisement -