நிறைய காசு செலவு செய்து கடையிலிருந்து இனி எந்த ஷாம்புவும் வாங்காதீங்க. காடு போல முடி வளர பிரிட்ஜில் இருக்கும் இந்த 1 ஐஸ் கட்டி போதும்.

mudi valara
- Advertisement -

தலைமுடியை சூப்பராக வளரச் செய்ய நம்முடைய வீட்டிலேயே மிக மிக சுலபமான முறையில் ஷாம்பூ எப்படி தயார் செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பயந்துடாதீங்க, ரொம்ப கஷ்டம் இல்லை. 3 பொருளை ஒன்றாக சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றினால் ஷாம்பூ தயாராகிவிடும். இந்த ஷாம்புவை பயன்படுத்தி தலைக்குக் குளித்தால் முடி உதிராது. அதேசமயம் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். எந்த ஒரு கெமிக்கல் அதிகம் சேர்க்கப்படாத இந்த ஷாம்புவை நம் கையால் எப்படி தயார் செய்வது. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் 5 கொத்து கருவேப்பிலையை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த கருவேப்பிலையை தண்ணீரில் நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக கத்தரிக்கோலால் வெட்டி 1 டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் கூட இந்த கருவேப்பிலை தண்ணீரிலேயே ஊறட்டும். பின்பு வடிகட்டி கருவாபிலைகளை மட்டும் எடுத்து விட்டு, அந்த தண்ணீரை மட்டும் ஷாம்பு செய்ய பயன்படுத்த வேண்டும். (கருவேப்பிலை சத்து முழுவதும் அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும்.)

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில் கருவேப்பிலை ஊறவைத்த தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். இதோடு அலோ வேரா ஜெல் 1/4 கப் சேர்க்க வேண்டும். அதன் பின்பு 1/4 கப் அளவு பேபி ஷாம்பூ அல்லது Castile Soap Liquid இரண்டில் ஏதாவது ஒன்றை இதோடு சேர்த்து நன்றாக கலந்து வைத்தால் சூப்பரான ஹோம் மேட் ஷாம்பு தயார். இந்த ஷாம்புவை தேவைக்கு ஏற்ப அப்படியே கையில் ஊற்றி எப்போதும் போல தலையில் தேய்த்து குளித்து கொள்ளலாம்.

மீதம் இருக்கக்கூடிய ஷாம்புவை என்ன செய்வது. அப்படியே ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது ஒவ்வொரு ஷாம்பூ ஐஸ் கட்டிகளாக எடுத்து கொஞ்ச நேரம் வெளியில் வைத்து உருக விட்டு, தலையில் தேய்த்து குளித்தால் ஆரோக்கியமான முடி வளர்ச்சி இருக்கும். கருவேப்பிலையும் அலோவேரா ஜெல்லும் நம்முடைய முடி வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு தெரியும் அல்லவா.

- Advertisement -

பிரிட்ஜில் வைத்த ஐஸ் க்யூப் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு கிடையாது. இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு இந்த ஐஸ் கட்டிகளை எடுத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வெள்ளையாக இருக்கக்கூடிய முடி கருப்பாக மாறும். அதேசமயம் ட்ரையாக இருக்கும் முடி சாஃப்ட்டாக மாறும். வேரிலிருந்தே முடி வளர தொடங்கும்.

கருவேப்பிலை ஊறவைத்த தண்ணீர், அலோ வேரா ஜெல், பேபி ஷாம்பூ, 3 பொருளை ஒன்றாக கலந்து நீங்களே ஷாம்பு செய்யப் போறீங்க அவ்வளவு தான். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. செம்ம ரிசல்ட் தெரியும்.

- Advertisement -