வீட்டில் இருக்க கூடிய தரித்திரம் விலகி, செல்வம் சேர இந்த ஒரு அற்புத தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்தால் போதும்

theertham
- Advertisement -

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் போராட்டங்கள் என்பது தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு சிலரின் மனதில் எவ்வளவு தன்னம்பிக்கை இருந்தாலும் ஏதேனும் ஒரு நேரத்தில் அவர்கள் பலவீனமாக மாறிவிடுகிறார்கள். ஒருவருக்கு உழைக்காமல் எல்லாம் கிடைக்கிறது. நாம் எவ்வளவு உழைத்தாலும், நேர்மையாக இருந்தாலும் நமது கையில் எதுவும் நிற்கவில்லை என்று கடவுளிடம் முறையிடுவார்கள். பணம் இருப்பவர்களிடமே மீண்டும் பணம் சேர்ந்து கொண்டிருக்கிறது. கடின உழைப்பு இருக்கும் இடத்தில் பணம் என்பது வருவதும் போவதும் தெரியவில்லை. இதற்கு என்ன காரணம் என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இவை அனைத்தும் தீர நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இந்த ஒரு இலையை வைத்து செய்யக்கூடிய பரிகாரங்களை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

biriyani-ilai1

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருளான பிரியாணியை சமைப்பதற்கு தேவைப்படும் ஒரு முக்கியமான உணவு பொருள் தான் பிரியாணி இலை.இந்த இலைக்கு மருத்துவ குணங்களும், ஆன்மிக சத்திகளும் அதிக அளவில் இருக்கின்றது. ஆன்மீகத்தில் இதனை இரசப்பட்டை என்று அழைப்பார்கள். பல கலவைகள் கலந்த ஒரு பொருளுக்கு ரசம் என்று அர்த்தம். அவ்வாறு இந்த இலையில் பலவித அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன. இதற்கு வசிய தன்மை அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

பிரியாணி இலையை சிறிதளவு கைகளில் எடுத்துக்கொண்டு அதனை ஒரு மண் குடுவையில் சேர்த்து அந்த குடுவை முழுவதும் பன்னீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். இந்த கலவையை இரண்டு, மூன்று நாட்கள் பூஜை அறையில் வைத்து விட்டு, பின்னர் அந்த புனித தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் உள்ள தரித்திரம் அனைத்தும் விலகிவிடும். இந்த தீர்த்தத்தை குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு சேர்த்துக் கொண்டால் தேக வசீகரம் உண்டாகும்.

biriyani-ilai

அடுத்ததாக பிரியாணி இலையை சிறிதளவு எடுத்து அதனை சாம்பிராணி காட்டும் தட்டில் வைத்து, சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்றாக எரியவிட்டு அந்த புகையை வீடு முழுவதும் பரவவிட்டால் வீட்டிற்குள் உள்ள அனைத்து தரிதிரங்களும் வெளியேறிவிடும்.

- Advertisement -

வீட்டில் தீராத துன்பங்கள் நிறைந்திருந்தால் அந்தத் துன்பம் தீர பிரியாணி இலையை மாவிலை தோரணம் போன்று கட்டிக்கொண்டு, அதனை ஏதேனும் பாம்பு புற்றை சுற்றி கட்டி விடலாம். அல்லது அரச மரமும், வேப்ப மரமும் ஒன்றாக இருக்கும் மரத்தை சுற்றி கட்டிவிடலாம். இதன் மூலம் நமது கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடும்.

thayathu

இவ்வாறு பிரியாணி இலையை சிறிது அளவு எடுத்துக் கொண்டு அவற்றை பொடியாக செய்து, அந்த பொடியில் நெய் சேர்த்து கலந்து கொண்டு மை போன்று மாறியதும் அதனை தாயத்தில் அடைத்து கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். இதன் மூலம் நாம் எங்கு சென்றாலும், எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். இந்த தாயத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும்.

biriyani-ilai

ஒரு சிலஉறவினர்களும் அல்லது நமக்கு வேண்டாதவர்களும் வீட்டிற்கு வரும் போதெல்லாம் பிரச்சனை வருகிறதென்றால் அவர்களின் தீய எண்ணங்கள் நம்மை பாதிக்காமல் இருக்க, நமது வீட்டு வாசலில் பள்ளம் தோண்டி சிறிதளவு பிரியாணி இலைகளையும், கல் உப்பையும் சேர்த்து புதைத்து விட வேண்டும். இதனை மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். தீய எண்ணத்துடன் அவர்கள் நமது வீட்டிற்குள் நுழைந்தாலும் அந்த எண்ணங்கள் நம்மை பாதிக்காமல் இருக்கும்.

- Advertisement -