தோஷங்களை நீக்கும் வாழைத்தண்டு திரி தீபம்.

deepam
- Advertisement -

ஒரு குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் ஏற்படுகிறது, ஒரு செயலை செய்யும் பொழுது அதில் தடைகள் ஏற்படுகிறது, தாமதங்கள் ஏற்படுகிறது, ஒரு பிரச்சனைக்கு அடுத்தடுத்தார் போல் பல பிரச்சனைகள் வந்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு ஏதாவது ஒரு தோஷமோ அல்லது தெய்வ குற்றமோ இருக்கும் என்று அர்த்தம். அப்படிப்பட்டவர்கள் வீட்டில் எந்த திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் குற்றங்களும் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நம்முடைய முன்னோர்களின் தோஷத்தால் குடும்பத்தில் நிம்மதி என்ற பேச்சிற்கே இடம் இருக்காது. சண்டை சச்சரவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதே போல் தெய்வ குற்றம் ஏதேனும் இருப்பினும் அவர்களால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு அற்புதமான எளிய பரிகார முறை தான் இது.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நாம் ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்ற போகிறோம். அவ்வளவுதான் இந்த பரிகாரம். இந்த தீபத்தை விடிய காலையில் அதாவது பிரம்ம முகூர்த்த வேளையில் ஏற்றினால் நல்ல பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக ஒரு அகல் விளக்கை வாங்க வேண்டும். பிறகு அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் அல்லது இலுப்பை எண்ணெய் இவை மூன்றில் ஏதாவது ஒன்றை ஊற்றி வாழைத்தண்டு திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

வாழைத்தண்டு திரி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அல்லது நாமே வீட்டில் தயார் செய்தும் கொள்ளலாம். வாழைத்தண்டை வாங்கி வந்து அதிலிருந்து நாரை எடுத்து திரியாக திரித்து தீபம் ஏற்றலாம். அவ்வாறு நாமே தயாரித்து தீபம் ஏற்றும் பொழுதும் அதன் பலன் அதிகமாகவே இருக்கும்.

- Advertisement -

இந்த தீபத்தை நாம் ஏற்றும் பொழுது முன்னோர்களால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும் அதோடு ஏதேனும் தெய்வ குற்றங்கள் இருந்தாலும் அவையும் நீங்கும். அது மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். குலதெய்வம் நம் வீடு தேடி வந்து நமக்கு நல்ல ஆசி புரிவார்கள். ஏதாவது ஒரு பிரச்சினையை நினைத்துக் கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து தீபம் ஏற்றி வழிபட்டால் அந்த பிரச்சனைகள் தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றாலும் இந்த முறையை பின்பற்றலாம். இந்த ஒரு திரியை பயன்படுத்தி இவ்வளவு நன்மைகளும் நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: பிரச்சனைகளை தீர்க்கும் பெருங்காய பரிகாரம்

முன்னோர்களின் சாபம் நீங்கி தெய்வ குற்றம் அகன்று தனவசியம் ஏற்பட்டு குடும்பத்துடன் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ இந்த ஒரு தீப வழிபாடு போதும்.

- Advertisement -