சகல தோஷங்களையும் தவிடு பொடியாக்கி, ராஜ வாழ்க்கையை கொடுக்கும் குண்டு மஞ்சள்.

manjal
- Advertisement -

தோஷம் இல்லாத மனிதர்களே நிச்சயமாக இருக்க முடியாது. மனிதர்களாக பிறந்தவர்களுக்கு ஜாதக கட்டத்தில் ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு தோஷம் நிச்சயமாக இருக்கும். அந்த தோஷம் அவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கக்கூடிய தோஷத்தை தவிடுபொடி ஆக்குவது எப்படி, என்பதைப் பற்றிய சுலபமான ஆன்மீக ரீதியான ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

manjal-kizhangu

தோஷத்தை கண்டு முதலில் நாம் யாரும் பயப்படக்கூடாது. சில பேருக்கு திருமண தடை தோஷம் இருக்கும். சில பேருக்கு குழந்தை பாக்கியத்தில் தோஷம் இருக்கும். சில பேருக்கு பட்சி தோஷம் இருக்கும். சிறு குழந்தைகளுக்கு தோஷம் பிடிக்கும். அண்ட தோஷம் ஆகாய தோஷம் என்று தோஷங்களில் பல வகை உண்டு. அதைப்பற்றிய ஒட்டுமொத்தமாக ஒரு பதிவில் நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. இந்த தோஷ நிவர்த்திக்கான பரிகார மட்டும் இப்போது பார்க்கலாம். உங்களுடைய ஜாதகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் எந்த தோஷம் இருந்து, உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கஷ்டப்பட்டு வந்தாலும் சரி, இந்த தண்ணீரை உங்களுடைய வீட்டில் தெளித்து வந்தாலே போதும்.

- Advertisement -

ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம். தோஷம் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மனிதர்களாக பிறந்தவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாத தோஷத்தின் மூலம் நிச்சயம் பாதிப்பு இருக்கும்.

arasa-ilai

பொதுவாகவே அரச இலைக்கு இருக்கக்கூடிய மகத்துவத்தை நாம் எல்லோரும் அறிந்து இருப்போம் அல்லவா. அந்த அரச இலை 1, குண்டு மஞ்சள் ஒரு சிறிய துண்டு போதும். இந்த பரிகாரத்திற்கு. குண்டு மஞ்சளை வாங்கி நறுக்கி சிறு சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் ஒரே ஒரு அரசியலை, ஒரு குண்டு மஞ்சளை போட்டு இரவு முழுவதும் அப்படியே ஊற விட்டு விட வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்து நீங்கள் சுத்தபத்தமாக குளித்துவிட்டு உங்கள் வீட்டை சுத்தம் செய்து விடுங்கள். அதன் பின்பு ஊற வைத்திருக்கும் இந்த தண்ணீரிலிருந்து குண்டு மஞ்சளையும், அரசையும் எடுத்துவிட்டு இந்த தண்ணீரை தீர்த்தமாக நினைத்து குலதெய்வத்தை நினைத்து உங்கள் வீடு முழுவதும் மூலைமுடுக்குகளில் தெளித்து விட வேண்டும். உங்களுடைய தலையிலும் 3 முறை தீர்த்தம் போல நன்றாக தெளித்துவிட்டு கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு தோஷம் பிடித்தாலும் இந்த தண்ணீரைத் தெளித்தால் தோஷம் விலகிவிடும்.

sombu

இதை எப்போது எந்த நேரத்தில் செய்யலாம். எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாம். வாரத்தில் ஒருநாள் செய்தாலும் போதும், மாதத்தில் 1 நாள் செய்தாலும் போதும், அது உங்களுடைய விருப்பம் தான். ஆக மொத்தத்தில் இதை பரிகாரம் என்று பார்க்காமல், உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக செய்யக்கூடிய ஒரு வழிபாடு என்று நினைத்து வெள்ளிக்கிழமை வீட்டில் இறைவழிபாடு செய்வது போல இதை உங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வந்துகொண்டே இருந்தால், வாழ்க்கையில் ஜாதக கட்டத்தில் எந்த தோஷத்தினாலும், பெரிய பாதிப்புகள் வராது.

kamatchi-amman

வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பெரிய தடைகள் வராமல் தடுக்கக்கூடிய சக்தி, இந்த தீர்த்தத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -