உங்களைப் பிடித்திருக்கும் தரித்திரம் விலக, வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் வைத்து இவ்வாறு செய்து பாருங்கள்

sombu1
- Advertisement -

அதிர்ஷ்டம் என்பது மனிதர்களாகிய அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலரிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். ஒரு சிலர் எவ்வளவு உழைத்தாலும் பணம் என்பது சேர்வதே கிடையாது. இதனால் தான் அதிர்ஷ்டசாலி என்று ஒருவரைப் பார்த்து சொல்கிறோம். இவ்வாறு அதிர்ஷ்டம் என்பது ஏன் ஒருவரிடம் மட்டும் இருக்கிறது என்ற கேள்விக்கு, பதில் தேடினோம் என்றால் அவர்களின் முன்னோர்களும் சரி, இவர்களும் சரி வழக்கமாக பின்பற்றி வரும் பூஜை முறைகளும், அவர்களின் இல்லங்களிலும் செயல்படுத்தி வரும் பழக்க வழக்கங்களும் காரணமாக இருக்கலாம். இப்படி அதிர்ஷ்டம் பெற என்ன காரணம் இருக்க முடியும் என்ற யோசனைக்கு பதிலாகத்தான் இந்தப் பதிவில் அதற்கான காரணங்கள் என்னவென்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாருங்கள் அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

நன்றாக வியாபாரம் நடக்கும் தொழில் ஸ்தலங்களிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் சென்று பார்க்கும் பொழுது காலை நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக அனைவரும் தங்களது வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். அங்கு சென்றதும் நமக்கே ஒரு வேலையை விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அந்த அளவிற்கு அங்கு நேர்மறை அதிர்வலைகள் நிறைந்து காணப்படும்.

- Advertisement -

இவ்வாறு சுறுசுறுப்பாக இருக்கும் இடங்களில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். எனவே அங்கு பணத்திற்கு பஞ்சம் இருக்காது. பண வரவு அதிகமாக இருக்கும் ஆனால் ஒரு சிலர் எப்பொழுதும் இருக்கும் வேலையை நாளை செய்து கொள்ளலாம் என்று சோம்பேறித்தனத்துடன் இருப்பார்கள். அவர்களின் அதிகப்படியான வேலை சாப்பிடுவது, தூங்குவது என்று தான் இருக்கும். எந்த வேலையை கொடுத்தாலும் அதில் நாட்டம் இல்லாமல் சற்று தோய்வாகவே இருப்பார்கள்.

அதேபோல் ஒரு சில வீடுகளில் பெண்கள் காலையில் நேரத்தில் எழுந்திருக்காமல் அதிக நேரம் உறக்கம் கொள்வார்கள். எனவே அவர்களின் இல்லங்களில் அனைத்து வேலைகளும் தாமதமாகவே நடைபெறும். காலையில் சூரிய உதயத்தில் எழுந்து, வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் முடித்து, பூஜை செய்வது பலரது வீட்டில் பழக்கமாக இருக்கும். இது போன்ற வீடுகளில் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்.

- Advertisement -

எனவே சோம்பேறித்தனம் என்ற ஒன்று இருந்தால் அந்த வீட்டில் அசுப தேவதை குடியேறி விடுவாள். இதன் மூலம் நமக்கு நடக்கின்ற அனைத்தும் நல்லதாக இருக்காது. நன்மைகள் நடப்பதாக இருந்தாலும் அவை ஏதாவது ஒரு தடையின் காரணமாக நின்றுவிடும். எனவே முதலில் இந்த சோம்பலை நம்மிடமிருந்து அகற்ற வேண்டும். அதற்காக வீட்டில் நாம் சமைப்பதற்கு பயன்படுத்தும் சோம்பை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் இந்த சோம்பை சேர்த்து, அதனை அடுப்பின் மீது வைத்து, ஒரு கொதி வரும் வரை சூடுபடுத்த வேண்டும். பின்னர் இந்த தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரம், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் கை பொறுக்கும் சூடு வந்ததும் இதனை வீட்டில் உள்ள அனைவரின் முகத்திலும் தெளிக்க வேண்டும். இவ்வாறு மாதத்திற்கு ஒரு முறையாவது செய்து வருவதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் சோம்பல் விலகி அதிர்ஷ்ட தேவதை நமது வீடு தேடி வருவாள்.

- Advertisement -