ஆஸ்திரேலிய தொடரை அடுத்து ஐ.பி.எல் போட்டிகளிலும் ஹார்டிக் பாண்டியா விளையாடுவது சந்தேகம் – இத்தனை வாரம் கண்டிப்பாக ட்ரீட்மென்ட் அவசியம் – இந்திய அணி மருத்துவர் தகவல்

Pandya
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக வரும் 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dinesh

இந்த ஆஸ்திரேலிய தொடருக்கான டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கோடரிலும் இந்திய அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்டிக் பாண்டியாவை பி.சி.சி.ஐ ஒருநாள் தொடர் மற்றும் டி20 என முழுத்தொடரிலிருந்தும் வெளியேற்றியது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இத காரணத்தினை பி.சி.சி.ஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி ஹார்டிக் பாண்டியாவிற்கு முதுகின் கீழ்ப்பகுதி தசைப்பிடிப்பு காரணமாக சில நாட்களாக அவர் அவதிப்பட்டு வருவதாலும், மேலும், வலியின் தன்மை அதிகரிக்க கூடாது என்பதற்காகவும் இந்த முழுத்தொடரில் இருந்தும் பாண்டியாவிற்கு ஓய்வினை தந்துள்ளது பி.சி.சி.ஐ. இதோ அந்த பதிவு :

- Advertisement -

தற்போது மருத்துவர் மேலும், இன்றிலிருந்து மூன்று வாரம் ட்ரீட்மென்ட் அவசியம் என்றும் முடிந்தால் ஐ.பி.எல் தொடரிலும் பாண்டியாவுக்கு ஓய்வு கிடைத்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் நாம் எதிர் வரும் உலககோப்பையினை கருத்தில் கொண்டு முடிவு செய்யவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

சர்வதேச சிக்ஸர்களின் மன்னனாக மாறிய யுனிவர்ஸ் பாஸ் கெயில். எத்தனை சிக்ஸர்கள் அடித்துள்ளார் தெரியுமா ? – சில ராட்சஸ சிக்ஸர்கள் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -