கோவிலிலும், வீட்டிலும் தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! வேண்டிய வேண்டுதல்கள் எதுவுமே பலிக்காமல் போய்விடும்.

harathi
- Advertisement -

நாம் நம்முடைய கஷ்டங்களை தெரிவிக்கவே கோவிலுக்கு செல்கிறோம். எப்பொழுதும் நம் கஷ்டங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை விட கோவிலில் இருக்கும் தெய்வத்திடம் பகிர்ந்து கொள்வது நூறு மடங்கு மேலானது. மற்றவர்கள் நம் துன்பங்களை கண்டு வருத்தப்பட மட்டுமே செய்வார்கள். அதற்கான தீர்வை ஒருவரும் கொடுக்கப் போவது இல்லை. ஆனால் தெய்வத்திடம் முறையிட்டால் உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு உங்களுடனே இருப்பதை அவர் சுட்டிக் காட்டி விடுவார். அப்படியான வேண்டுதல்களை செய்யும் தீபாரதனை காண்பிக்கும் நேரத்தில் நாம் இந்தத் தவறைச் செய்கிறோம்! அது என்ன? அப்படி ஏன் செய்யக் கூடாது? அப்படி செய்தால் என்ன ஆகும்? என்பது போன்ற கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

aarathi1

ஒவ்வொரு கோவில்களிலும் வீற்றிருக்கும் இறைவனுக்கு தீபாராதனை காண்பிப்பது வழக்கம். தீபாராதனையின் ஒளியானது இறைவன் மேல் பிரகாசிக்கும் பொழுது நாம் எங்காவது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால் நம்முடைய வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்காது போய் விடும் என்கிறது சாஸ்திரம். பெரும்பாலான வேண்டுதல்கள் பலிக்காமல் போக இதுவும் ஒரு காரணம் தான். இறைவனிடம் தியானிக்கும் பொழுது நம் முழு கவனமும் இறைவன் மேல் இருக்க வேண்டும்.

- Advertisement -

கற்பூர தீபத்தின் ஒளியில் பிரகாசிக்கும் இறைவனின் திருமுகத்தையும், திருவடியையும் காண கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த நேரத்தில் கைப்பேசியில் யாரிடமோ பேசிக் கொண்டு இருப்பது, சுற்றி நடக்கும் விஷயங்களை வேடிக்கை பார்ப்பது, அல்லது எதை பற்றிய சிந்தனையிலோ மூழ்கி போயிருப்பது போன்ற செயல்களை செய்யும் பொழுது நம்முடைய வேண்டுதல்கள் எப்படி பலிக்கும்?

aarathi

தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது அதன் ஒளியை கடந்து தெரியும் இறைவனுடைய திருமுகத்தை மட்டுமே உன்னிப்பாக கவனித்து பார்க்க வேண்டும். இறைவன் நம் கண்முன்னே இருப்பதாக மனதில் நிறுத்தி கற்பனை செய்து கொள்ள வேண்டும். கோவில்களில் மட்டுமல்ல, வீட்டில் நாம் அன்றாட பூஜைகள் செய்யும் பொழுதும் கற்பூர ஆராதனை கட்டாயம் காண்பிக்க வேண்டும். அப்படி காண்பிக்கப்படும் கற்பூர ஆராதனையின் ஒளியானது இறைவனுடைய படங்களில் படும் பொழுது அதனை நாம் கண்குளிர தரிசனம் செய்ய வேண்டும்.

- Advertisement -

அந்த சமயத்தில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து மனதை ஒருமுகப்படுத்தி கொள்ள வேண்டும். ஜோதியில் தெரிவது இறைவனுடைய உண்மையான திருமுகம் என்று மனதில் எண்ணிக் கொள்ள வேண்டும். நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நமக்கு நடக்கிறது! எனவே இப்படி முறையாக வழிபாடு செய்தால் தான் இறைவன் நம்முடைய கண்முன்னே காட்சி அளிப்பார். கற்பூரத்தை காண்பிக்கும் பொழுது இறைவனுடைய திருமுகத்திலிருந்து, திருவடி வரை முழுவதுமாக காண்பிக்க வேண்டும். அப்போது நம் கண்கள் திருமுகத்திலிருந்து, திருவடி வரை சென்று மீண்டும் முகத்திற்கு நேரே கண்களைப் பார்த்து இறைவனை தியானிக்க வேண்டும்.

aarathi

இப்படி செய்து நீங்கள் வழிபடும் ஒவ்வொரு வேண்டுதல்களும் கட்டாயம் தடையில்லாமல் பலிக்கும். அதை விடுத்து தேவையற்ற விஷயங்களை பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தால் இறைவனுடைய அருளைப் பெற முடியாது. இறை தரிசனம் என்பது இறைவனை மனதில் கொண்டு வருவது தான் என்பது இதன் அர்த்தம். எனவே தீப ஒளியில் இறைவனைக் காணுங்கள்! உங்களுடைய வேண்டுதல்களை பலிக்க செய்யுங்கள்.

- Advertisement -