குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்தால் போதும் உங்கள் கனவு இல்லம் நினைவாகும்

house
- Advertisement -

மனிதனாய் பிறந்த அனைவருக்குமே கனவு என்ற ஒன்று இருக்கும். அதிலும் பெரும்பான்மையான மக்களுக்கு தனக்காக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே பெரிய கனவாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் ஒரு வீட்டிற்கு வாடகை கட்டி குடியிருப்பது என்பது எவ்வளவு சிரமமான விஷயமாக இருக்கிறது. சம்பாதிப்பதில் பாதி இந்த வீட்டிற்காகவே செலவாகி விடுகிறது. பிறகு எப்படி மீதி இருக்கும் தொகையை வைத்து சந்தோசமாக குடும்பம் நடத்துவது. இவ்வாறு அனைவரும் தங்கள் மனதுக்குள் ஆசைப்படும் சொந்த வீடு கனவு நினைவாக உங்கள் குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு கை பிடி மண் எடுத்து வந்து இந்த பூஜையை முறையாக செய்தால் போதும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் சொந்த வீடு வாங்கி விடுவீர்கள். வாருங்கள் இந்தப் பூஜையை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

house

ஒரு குடும்பம் நலமாகவும், வளமாகவும் வாழ குலதெய்வத்தின் அருள் முழுவதுமாக கிடைத்திட வேண்டும். எனவே மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டும். இவ்வாறு குலதெய்வ கோவிலுக்குச் சென்று வரும் பொழுது அங்கிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். இதற்காக கடவுளிடம் எனது கணவு இல்லம் வேண்டுதலுக்காக உன் சன்னதியில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துச் செல்கிறேன் என்று மனதார வேண்டி கொண்டு, இதற்கு தட்சணையாக சுவாமி உண்டியலில் 101 ரூபாயயை போட்டு விட்டு அங்கிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வர வேண்டும்.

- Advertisement -

இந்த மண்ணை வீட்டிற்கு எடுத்து வந்த பிறகு பூஜை அறையில் வைத்து விட்டு, விளக்கு ஏற்றுவதற்காக பஞ்சலோக எண்ணெயை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக சிறிதளவு நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்ற ஐந்து எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த பஞ்சலோக எண்ணெயில் விளக்கு ஏற்றுவது என்பது நமது வேண்டுதலுக்கு நல்ல சக்தியை கொடுக்கிறது.

ayyar-malai-kovil

பிறகு விளக்கு ஏற்றுவதற்காக மஞ்சள்திரி, பச்சை திரி மற்றும் வாழைத்தண்டு திரி இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரே திரியாக செய்து கொள்ள வேண்டும். பிறகு நமக்கு பிடித்தது போன்ற ஒரு வீட்டின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அதனை லேமினேசன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதற்குப் பிறகு இந்த வீட்டின் புகைப் படத்தை வடக்குநோக்கி வைத்து விட்டு, அதற்கு முன் தழை வாழை இலை விரித்து, அதில் ஒரு கைப்பிடி நெல், ஒரு கைப்பிடி குலதெய்வ கோவிலில் இருந்து எடுத்து வந்த மண், ஒரு கைப்பிடி சில்லறை நாணயங்கள் இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து பரப்பி வைக்க வேண்டும்.

kamatchi-vilakku

அதன் பிறகு வீட்டில் இருக்கும் காமாட்சி அம்மன் விளக்கில் இந்த பஞ்சலோக எண்ணையை ஊற்றி செய்து வைத்துள்ள திரியையும் போட்டு விளக்கு ஏற்றி, வாழை இலையின் மேல் இருக்கும் நாணயத்தின் மீது வைத்து விட வேண்டும். பிறகு கைகளை கூப்பி உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து என்னுடைய கனவாக இருக்கும் இந்த வீட்டை எனது வாழ்வில் கூடிய விரைவில் நான் வாங்கிட வேண்டும். என்று மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு 108 தினங்கள் இந்த விளக்கினை ஏற்றி வர மிக விரைவில் உங்கள் கனவு நினைவாகும்.

- Advertisement -