வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் இத்தனை பயன் உள்ளதா?

water
- Advertisement -

தண்ணீர் என்பது தாகத்தை தணிப்பதற்கு மட்டும் குடிப்பது அல்ல. இந்த தண்ணீரை முறையாக குடித்துவந்தால் நம் உடலில் இருக்கும் பல பிரச்சினைகள் தீரும் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது. இந்த உலகத்தில் அதிக சுறுசுறுப்பை கொண்ட நாடு என்றால் அது ஜப்பான். ஜப்பானியர்கள் எப்படி சுறுசுறுப்பாக செயல்படுகிறார் என்ற ரகசியம் உங்களுக்கு தெரியுமா? தினந்தோறும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அவர்கள் குடிக்கும் 2 டம்ளர் தண்ணீர் தான் அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க காரணம் என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். தண்ணீரைக் குடித்து முடித்துவிட்டு ஒரு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பார்களாம். நீங்களும் தினம்தோறும் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டு வந்தால் மட்டுமே அதன் அருமை பெருமைகளை உங்களால் உணரமுடியும்.

water

குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று சொல்கிறது ஆரோக்கியம் பற்றிய ஒரு ஆராய்ச்சி. சரி. இந்த தண்ணீரை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் 10 வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா.

- Advertisement -

1. குடல் சுத்தம்:
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நம்முடைய குடல் சுத்தம் செய்யப்படுகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை காலை கடனில் வெளியேற்றி விட்டோமேயானால் உடல் ஆரோக்கியம் பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றப்படும் மலம் சிக்கலில்லாமல் வெளியேறினால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை குறிக்கும். உடல் உபாதை வரப்போகிறது என்பதை குறிக்கும் அறிகுறி தான் மலச்சிக்கல்.

kudal

2. உடல் நச்சுக்களை வெளியேற்றும்:
காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் தண்ணீரானது நம்முடைய குடலை மட்டும் சுத்தம் செய்வது இல்லை. நம்முடைய உடம்பில் இருக்கும் எல்லா வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்றும் தன்மை இந்த தண்ணீருக்கு உண்டு. உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் நச்சுப் பொருட்கள் எல்லாம் சிறுநீரின் வழியாக முழுமையாக வெளியேறிவிடும். தண்ணீரை எவ்வளவு அதிகமாக பருகுகின்றோமோ, அவ்வளவு சிறுநீர் கழிவு வெளியேறும். அந்த சிறுநீரில் உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்கள் வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

3. நன்றாக பசி எடுக்கும்:
உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி விட்டால் பசியின் தன்மை அதிகரிக்கும். நன்றாக உணவைச் சாப்பிடுவோம். உடல் ஆரோக்கியம் பெறும். இதோடு மட்டுமல்லாமல் நச்சுக்கள் இல்லாத உடம்பில் நாம் சாப்பிடும் உணவுப் பண்டங்களில் உள்ள சத்துக்கள் அனைத்தும் முழுமையாக சேரும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

head-ache

4. தலைவலி நீங்கும்:
இன்றைய சூழ்நிலையில் அன்றாட வாழ்வில் வரக்கூடிய ஒரு பிரச்சனை தலைவலி. இந்த தலைவலியானது உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவினால் தான் வரும் என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. அதிகாலை வேளையில் எழுந்தவுடன் தினந்தோறும் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடித்து பாருங்கள். உங்களுக்கு தலைவலி குறையும். காலப்போக்கில் தலைவலியே வராது என்பதும் உண்மையான ஒன்று. ஆனால் இந்த பழக்கத்தைத் தொடர்ந்து செய்து பார்த்தால்தான் உங்களால் பலனை அடைய முடியும்.

- Advertisement -

5. அல்சர்:
குடல்புண் என்று சொல்லப்படும் இந்த அல்சரை வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் மூலம் தடுக்கப்படுகிறது. காலையில் உணவு அருந்தாமல் இருப்பவர்களுக்கு கூட, வெறும் தண்ணீர் மட்டுமாவது குடித்துக் கொள்ளுங்கள். அல்சர் வராமல் தடுக்க முடியும்.

hot-water1

6. மெட்டபாலிசம் அதிகரிக்கிறது:
நாம் உண்ணும் உணவு விரைவாக ஜீரணம் ஆவதற்கு இந்த மெட்டபாலிசம் உதவியாக உள்ளது. இதன் மூலம் நாம் உண்ணும் உணவு விரைவாக ஜீரனிக்கப்பட்டு, உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் விரைவாக உடலில் சேர்ந்து ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது. (குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதன் மூலம் 24% மெட்டபாலிசம் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது)

7. ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கப்படும்:
தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை ஆக்சிஜன் அதிகப்படியாக கிடைப்பதன் மூலம் நம்முடைய உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்.

water drink

8. உடல் எடையை குறைக்கும்:
வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதால் உடல் எடை குறைக்கப்படுகிறது. உடலில் இருக்கும் மெட்டபாலிசம் அதிகரிக்க படுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகளை அது குறைத்துவிடும்.

9. முக அழகு கூடும்:
பொதுவாகவே குடல் சுத்தம் இல்லை என்றால் தான் முகத்தில் முகப்பரு ஏற்படும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. தினம்தோறும் தண்ணீரை குடித்து உடலை சுத்தமாக வைத்திருந்தால் முகத்தில் எந்த ஒரு முகப்பருவும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. அதிகப்படியான தண்ணீர் குடிப்பதன் மூலம் நம்முடைய தோலும் மென்மையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

pimple

10. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது:
நம்முடைய உடலுக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது நோய் எதிர்ப்பு சக்தி. இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மையும் இந்த தண்ணீருக்கு உண்டு.

முடிந்தவரை காலை எழுந்தவுடன், பல் தேய்த்து விட்டு வெறும் வயிற்றில், இரண்டு டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் பருகி பாருங்கள். அதிலும் வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பது என்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லாமல் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இப்படி ஒரு வைத்தியம் இருக்கிறது என்று தெரிந்தும் இதை கடைப்பிடிக்காமல் நாம் ஏன் இருக்கவேண்டும்? சற்று சிந்தித்துப் பார்த்தாலே போதும்!  மருத்துவச் செலவை குறைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
செயற்கையை தவிர்த்திடுங்கள், இரண்டே பொருளில் உங்கள் சருமம் சுத்தமாகி புது பொலிவுடன் ஜொலிக்கும் அதிசயம் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Drinking water empty stomach. Drinking warm water in the morning. Hot water benefits Tamil. Hot water uses Tamil. Thanneer kudikkum murai.

- Advertisement -