பிரிந்தவர்கள் ஒன்று சேர, எதிரிகளை தலைதெறிக்க ஓட விட செய்யக்கூடிய துர்கையின் அற்புத 9 விளக்குகள் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

durgai-vilakku-agal
- Advertisement -

அகல் விளக்குகளில் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் அர்த்தமும் விளக்கப்படுகிறது. வீட்டில் பூஜையறையில் ஒற்றை விளக்கு ஏற்றி வைக்கலாம். அது போல் வீட்டின் பிரதான வாசலில் இரட்டை விளக்குகள் இரண்டு புறமும் ஏற்றி வைக்கலாம். இவ்வாறாக ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான எண்ணிக்கையில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஒரு தெய்வத்திற்கு 9 அகல் விளக்குகள் ஏற்றி வைத்தால் பிரிந்தவர்கள் விரைவில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். உங்களை சுற்றி இருக்கும் எத்தகைய தெரிந்த மற்றும் மறைமுக எதிரிகள் யாவரும் தலைதெறிக்க ஓடி விடுவார்கள். அத்தகைய அற்புத சக்தி வாய்ந்த இந்த 9 விளக்குகளைப் பற்றிய ஆன்மீக தகவல்களை மேற்கொண்டு இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

agal-vilakku

நவகிரகங்களை குறிப்பது 9 விளக்குகள். நவகிரகங்களின் ஆதிக்கத்தில் தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது என்கிறது ஜோதிடம். காக்கும் மகா சக்தியாக விளங்கும் துர்க்கை அம்மனை வேண்டி வணங்கி இந்த விளக்குகள் ஏற்றி வைப்பது அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும் அற்புத வழிபாடு ஆகும். நம்மை சுற்றியிருக்கும் பகைவர்கள் தொல்லை ஒழியவும், நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் நம்மை வந்து இணையவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

உங்களுக்கு தொல்லை கொடுத்து வரும் எதிரிகளை நிரந்தரமாக உங்களை விட்டு விலகிச் செல்லுமாறு செய்யக்கூடிய இந்த அற்புத பரிகாரத்தை கோவில்களில் செய்வது தான் முறையாகும். ஆனால் அப்படி கோவில்களில் செய்ய முடியாதவர்கள் வீட்டில் செய்து வரலாம். உக்கிரமாக இருக்கும் தெய்வங்களின் படங்களை வீட்டில் வைப்பது முறையல்ல ஆனால் துர்க்கை அம்மன் சாந்தமாக இருக்கும் படத்தை வீட்டில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம்.

durga

உக்கிரமாக இருக்கும் துர்க்கை அம்மன் படத்தை தவிர்ப்பது நல்லது. சாந்தமாக இருக்கும் துர்க்கை அம்மன் படத்தை வைத்து வீட்டில் செவ்வாய் கிழமைகளில் ராகு கால வேளையில் 9 அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். மூன்று விளக்குகள் முதல் வரிசையில் அடுத்த மூன்று விளக்குகள் அடுத்த வரிசையில் இறுதியாக 3 விளக்குகளும் வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். எந்த ஒரு பரிகாரத்தை செய்யும் பொழுதும் நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் வேறு எந்த எண்ணெயும் உபயோகிக்கக் கூடாது.

- Advertisement -

நீல நிற திரி பகைவர்களின் தொல்லைகளிலிருந்து நம்மை விடுபடச் செய்யும். மஞ்சள் நிற திரியைப் போட்டு தீபம் ஏற்றும் பொழுது நமக்கு மிகவும் பிடித்தவர்கள், நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் நம்மை வந்து அடைய செய்யக் கூடிய அற்புத பலனை கொடுக்கும். கலர் திரிகள் பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கப் பெறும். அல்லது வெள்ளை நிற திரியை மஞ்சளில் தோய்த்து மஞ்சள் நிறத்தில் காய வைத்து ஏற்றலாம்.

durgai-amman-manthiram-1

துர்க்கை அம்மன் மந்திரங்களை உச்சரித்து இந்த தீபத்தை ராகு கால வேளையில் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் ஒன்பது வாரங்களில் நீங்கள் நினைத்தது நடக்கும். இதனை துர்க்கை அம்மன் சந்நிதிக்கு சென்று ஏற்ற முடிந்தால் இன்னும் சிறப்பு. அப்படி முடியாத பட்சத்தில் நீங்கள் வீட்டில் ஏற்றி வைத்து பயன் பெறலாம்.

- Advertisement -