இந்த சமையல் குறிப்புகள் உங்களுக்குத் தெரிந்தால் போதும். வீட்டின் செலவை சுலபமாக மிச்சப்படுத்தலாம்

brinjal
- Advertisement -

சின்ன சின்ன விஷயங்கள் என்று நாம் நினைக்கும் ஒவ்வொரு காரியமும் நமக்கு பெரிய நஷ்டத்தை கொடுக்கிறது. அவ்வாறு ஃபிரிட்ஜில் வாங்கி வைக்கும் காய்கறிகளை குறிப்பிட்ட நாட்களில் பயன்படுத்தாமல் விட்டு விட்டால் அவை வீணாகி அழுகிவிடும். பிறகு அவற்றை குப்பையில் தூக்கி எறிய வேண்டிய நிலைமை ஏற்படும். இதனால் பணம் தான் நமக்கு நஷ்டமாகும். அதுமட்டுமல்லாமல் சமைக்கும் பொழுது ஒரு சில உணவுகளை சமைப்பதற்கான சரியான பக்குவம் சிலருக்கு தெரியாது. இவற்றையும் சில எளிய குறிப்புகள் மூலம முறையாக கற்றுக் கொண்டால் அந்த உணவுப் பொருட்கள் வீணாவதை தவிர்க்க முடியும். வாருங்கள் அவ்வாறு உங்களுக்கு பயனுள்ள எளிய வீட்டுக் குறிப்புகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

cash

குறிப்பு: 1
வெண்டைக்காயை வாங்கி ஃபிரிட்ஜில் வைக்கும் போது அவை ஒரு சில நாட்களில் சுருங்கி விடும் அல்லது அழுகிவிடும். இவை அதிக நாட்கள் வீணாகாமல் இருக்க இவற்றை நன்றாக கழுவி வெயிலில் காயவைத்து, இவற்றின் தலை மற்றும் வால் பகுதியை நறுக்கிவிட்டு ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது துணிப்பையில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் போதும். ஒரு வாரம் வரையிலும் வீணாகாமல் நன்றாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு: 2
அதைப்போல் பீட்ரூட், முள்ளங்கி, கேரட் இவை அனைத்துமே சில நாட்களில் சுருங்கி வாடிவிடும். அவ்வாறு இருந்ததால் அவற்றை துருவம் பொழுதும், அறியும் பொழுது சற்று கடினமாக இருக்கும். இவற்றை மீண்டும் பிரஷ்ஷாக மாற்ற கை பொறுக்கும் அளவு சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து இந்த காய்கறிகளை அந்த தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் போதும். மீண்டும் அவை பிரஷ்ஷாக மாறிவிடும்.

மஞ்சள் முள்ளங்கி

குறிப்பு: 3
வேலையை சுலபமாக்குவதற்காக நாம் பூண்டினை தோலுரித்து ஃப்ரிட்ஜில் எடுத்து வைப்போம். ஆனால் அவை இரண்டு நாட்களில் மஞ்சள் நிறத்தில் பழுத்து போய்விடும். இதனை தவிர்ப்பதற்கு தோலுரித்த பூண்டினை ஒரு டப்பாவில் போட்டு அதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் பூண்டு பழுத்துப் போகாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு: 4
சமையல் செய்வதற்காக கத்தரிக்காயை அறிந்து வைத்தாலோ அல்லது தண்ணீரில் போட்டு வைத்தாலோ சமைப்பதற்கு அதிக நேரம் ஆகும் பொழுது அவை கறுத்து விடுகிறது. இதனை தவிர்ப்பதற்கு கத்தரிக்காயை போட்டு வைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் பால் கலந்து கொண்டால் போதும். எவ்வளவு நேரமானாலும் கத்தரிக்காய் கருத்துப் போகாமல் அப்படியே இருக்கும்.

vadai3

குறிப்பு :5
உளுத்தம் மாவு வடை செய்வதற்கு உளுத்தம்பருப்பை எப்படி சரியான பக்குவத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. சிலர் மிகவும் தண்ணியாக கரைத்து விடுவார்கள். அப்போது எண்ணெய் அதிகமாக இழுக்கும். சிலர் கெட்டியாக கரைத்து விடுவார்கள் அப்படி இருந்தால் வடை மிகவும் கடினமாக இருக்கும். வடை செய்வதற்கு சரியான பக்குவத்தை கண்டறிய ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு உளுத்தம் மாவினை கொஞ்சமாக கையில் எடுத்து தண்ணீரில் போடவேண்டும். உளுத்தமாவு தண்ணீருக்கு அடியில் சென்று விட்டால் மாவு கெட்டியாக இருக்கிறது என்றும், தண்ணீரில் கரைந்து விட்டால் மிகவும் தண்ணீராக இருக்கிறது என்றும் அல்லது மிதந்து கொண்டிருந்தால் சரியான பக்குவத்தில் இருக்கின்றது என்றும் அர்த்தமாகும்.

- Advertisement -