தலைமுடி போஷாக்குடன் அடர்த்தியாக இருக்க முட்டையை இப்படித்தான் பயன்படுத்தனுமா? இது தெரிஞ்சா முட்டை ஓட்டை கூட இனி விட்டு வைக்க மாட்டீங்க!

egg-hair-pack
- Advertisement -

முட்டையில் இருக்கும் ஏராளமான சத்துக்கள், நம் தலைமுடிக்கு நல்ல ஊட்ட சத்துள்ள வளர்ச்சியை கொடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. முட்டையை தலைக்கு தடவினால் நாற்றம் அடிக்குமே என்று பலரும் இதை செய்ய மறுக்கின்றனர். ஆனால் காய்கறி, பழங்கள் போன்ற இயற்கை பொருட்களை விட, இந்த கோழி முட்டையில் இருக்கக்கூடிய சில மூலக்கூறுகள் நம் தலைமுடியின் வேர்க்கால்களில் இருந்து செயல்பட்டு முடியை விரைவான வளர்ச்சி அடைய செய்கிறது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக முட்டையை சாப்பிட்டாலே முடி நல்லா வளர துவங்கும். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் ஏராளமான சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கின்றன. அந்த முட்டையில் இருக்கும் வெள்ளை கரு மிகவும் முக்கியமானது. வெள்ளை கருவை கொண்டு தயாரிக்கப்படும் தலைமுடி பேக்குகள் ரொம்பவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இதை வாரம் ஒரு முறை தலையில் போட்டு வந்தாலே தலைமுடி சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையும் நம்மை அண்டாது.

- Advertisement -

முடி உதிர்வுதலை வேகமாக கட்டுப்படுத்துவதில் முட்டையின் வெள்ளை கரு ரொம்பவே உதவியாக இருக்கிறது. இதில் இருக்கும் சல்பர், பாஸ்பரஸ், செலினியம், அயோடின், சிங்க் மற்றும் ஏராளமான புரோட்டீன்கள் முடி வளர்ச்சியை தூண்டி விடக் கூடிய அபரிமிதமான சக்தியை கொண்டுள்ளது. முட்டையின் வெள்ளை கருவுடன் இந்த ஒரு எண்ணெயை சேர்த்து பேக் போல தயாரிக்க வேண்டும்.

முதலில் ஒரு முட்டையை உடைத்து அதில் இருக்கும் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் இருக்கும் வெள்ளை கருவுடன் ஆலிவ் எண்ணெய் ஒரு ஸ்பூன் கலந்து நன்கு பீட் செய்ய வேண்டும். முட்டை பீட்டர் கொண்டு பீட் செய்தால் ஒரு கிரீமி டெக்சர் உங்களுக்கு கிடைக்கும். இந்த கிரீமை தலையின் வேர் கால்கள் முதல் எல்லா இடங்களிலும் படும்படி முழுமையாக தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே உலர விட்டுவிட வேண்டும். பிறகு மைல்டான ஷாம்புவை கொண்டு குளிர்ந்த நீரினால் தலைக்கு அலசினால் உங்களுடைய தலைமுடியும் நீளமாக, அடர்த்தியாக வளர துவங்கும்.

- Advertisement -

தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துபவர்கள் அதை நேரடியாக தலையில் தடவக்கூடாது. அரை மக் அளவிற்கு தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் ஷாம்புவை கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை மட்டுமே தலைக்கு நீங்கள் பயன்படுத்த வேண்டும். இதனால் தலைமுடி செயற்கை மூலக்கூறுகளில் இருந்து பாதுகாக்கப்பட்டு, நல்ல வளர்ச்சியை விரைவாகவே எட்டும். சிலருக்கு சிகைக்காய் போட்டு குளித்தால் முடி ரஃப்பானது போல தோன்றும். கரடு முரடான இந்த சிகைக்காய் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய முடியின் தன்மையை கூட முட்டை பயன்படுத்துவதால் முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது.

முட்டை பேக் போட்டுவிட்டு நீங்கள் சிகைக்காய் போட்டு தலைக்கு குளித்தால் இது போல கரடு முரடாக உங்கள் தலைமுடியும் மாறாது, ரொம்பவும் சில்க்கியாக சாஃப்ட் ஆக இருக்கும். முடியை நன்கு காய வைத்து விட்டு தலைக்கு கடுகு எண்ணெய் போட்டு மசாஜ் செய்தால் இரண்டு வாரத்தில் தலைமுடியின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். கடுகு எண்ணெய் தலைமுடியின் வளர்ச்சிக்கு ரொம்பவே உந்துகோலாக இருக்கும் எனவே தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு கடுகெண்ணெய் சேர்த்து பயன்படுத்தி பாருங்கள், நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -