மண்டை தெரியும் அளவிற்கு முடி உதிர்கிறதா? அபரிமிதமான முடி வளர்ச்சிக்கு கற்பூர எண்ணெயை இந்த ஒரு பொருளுடன் சேர்த்து இப்படி பேக் போடுங்கள், 2 வாரத்தில் இழந்த இடத்தில் மீண்டும் வளரும்!

camphor-oil-egg-hair-mask
- Advertisement -

எல்லோருக்குமே தங்களுடைய முடி அடர்த்தியாகவும், நீளமாகவும், கருகரு என்றும் இருக்க வேண்டும் என்பது தான் விருப்பமாக இருக்கும். அப்படி இருப்பவர்களின் முடியை பார்க்கும் பொழுது நமக்கே ஆசையாக இருக்கும். ச்சே.. நமக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது? என்று. முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்து மீண்டும் முடியை வேகமாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர செய்யக்கூடிய அற்புதமான ஆற்றல் இந்த ரெண்டு பொருட்களுக்கு உண்டு. அதை வைத்து என்ன செய்யப் போகிறோம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்

கற்பூர எண்ணெய் மற்றும் முட்டையை பயன்படுத்த போகிறோம். பொதுவாக முட்டையில் இருக்கும் ஏராளமான சத்துக்கள் தலைமுடியின் வளர்ச்சிக்கு உந்துகோலாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் எனவே முட்டையை அடிக்கடி தலைக்கு பேக் போல போட்டு தலைக்கு குளித்தால் வேர்கால்களுக்கு உரிய போஷாக்கு கிடைத்து நீளமாக, நன்கு அடர்த்தியாக முடி வளர துவங்கும். மேலும் முடியின் வறண்ட தன்மை நீங்கி எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

- Advertisement -

முடி உதிர்வதற்கு மிக முக்கிய காரணம் உங்கள் உடல் உஷ்ணம் அடைவது தான். உஷ்ணம் ஏற்படும் பொழுது முடியின் வேர்கால்களுக்கு ஈரப்பதம் கிடைக்காமல் வறண்டு விடுகிறது. இதனால் உதிர துவங்குகிறது. மேலும் காற்றினால் பரவக்கூடிய மாசுக்கள் மற்றும் சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாமை இது போன்ற காரணங்களாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் தீராத நோய்களாலும் முடி உதிர்தல் ஏற்படுகிறது.

இப்படி எல்லா பிரச்சனைகளையும் சமன் செய்யக்கூடிய அற்புதமான ஆற்றல் முட்டைக்கு உண்டு. முட்டை மிருதுவாகவும், மென்மையாகவும், பட்டு போல கூந்தலை கொடுக்கக் கூடிய தன்மை பெற்றது. ஒரு முட்டையை முழுதாக உடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு பீட் செய்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் கற்பூர எண்ணெய் தேவையான அளவிற்கு ஊற்றி மீண்டும் நன்கு கலந்து விடுங்கள். இந்த கலவையை தலை முழுவதும் பேக் போல போட்டு தலையை கட்ட வேண்டும்.

- Advertisement -

முட்டையின் நாற்றம் பலருக்கு பிடிக்காமல் போகலாம் எனவே நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குளியுங்கள். இதனால் முட்டையினால் வரக்கூடிய இந்த நாற்றம் தடுக்கப்படும். மேலும் 15 ல் இருந்து 20 நிமிடங்கள் நன்கு ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு தலைக்கு ஷாம்பு போட்டு சாதாரணமாக குளிக்க வேண்டும். பொதுவாக ஷாம்பூவை நேரடியாக தலையில் அப்ளை செய்யக்கூடாது. குறிப்பாக சல்பேட் இல்லாத ஷாம்பு தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். சல்பேட் இல்லாத ஷாம்பூவை சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் ஒரு முறை தலையை அலசிய பின்பு இந்த ஷாம்புவை கொண்டு மீண்டும் தலையை நன்கு அலசுங்கள்.

முட்டையின் வாசம் போக எவ்வளவு முறை வேண்டுமானாலும் நீங்கள் உங்களுடைய தலையை இம்முறையில் அலசிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நன்கு உலர விட்டு விட வேண்டும். ஈரப்பதத்துடன் தலைமுடியில் எப்பொழுதும் சீப்பை கொண்டு வாரக்கூடாது. உலரவிட்ட பின்பு சீப்பை கொண்டு வாரி வாருங்கள். மென்மையாகவும், மிருதுவாகவும் உங்களுடைய கேஷம் நல்ல பட்டு போல ஜொலிக்கும். இப்படி தொடர்ந்து செய்து வரும் பொழுது முடியின் வேர்கால்களுக்கு ரத்த ஓட்டம் சீராகி, மீண்டும் முடி வளர துவங்கும். எப்பொழுதும் முடியின் வளர்ச்சிக்கு வெளிப்புறத்தில் மட்டும் அல்லாமல் உட்புறத்திலும் நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதையும் மறவாதீர்கள்.

- Advertisement -