சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது சரியா? தவறா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

sani-el-deepam
- Advertisement -

சனி பகவானை போல ‘கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை’ என்பது ஜோதிட பழமொழி. சனிபகவான் ஒருவருடைய ஜாதகத்தில் திடீர் அதிர்ஷ்டங்களையும், திடீர் துரதிர்ஷ்டம்களையும் சட்டென ஏற்படுத்தி விடுவது உண்டு. அவர் உச்சம் பெறும் சமயங்களிலும் நீசம் பெறும் சமயங்களிலும் ஜாதகருடைய வாழ்க்கையில் நிறையவே மாற்றங்களை காணலாம்.

el deepam

சனி பகவானுக்கு தோஷ நிவர்த்தி செய்ய எள் தீபம் ஏற்றுவது காலம் காலமாக செய்து வரும் ஒரு சனிப் பரிகாரம் ஆகும். ஆனால் எள் தீபம் ஏற்றுவது முறை அல்ல என்று ஒரு தரப்பினரும், சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது தான் சரி என்று இன்னொரு தரப்பினரும் கூறுவது உண்டு. இதில் எது சரி? என பக்தர்களுக்கு இன்றும் குழப்பம் நீடிக்கிறது. இதனை நிவர்த்தி செய்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

- Advertisement -

சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதால் அவரால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் சனி பகவானுடைய குணாதிசயங்களை பெற்றிருக்கும் எள்ளை தீபமாக எரிப்பது எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் என்று திருநள்ளாறு கோவிலில் இருக்கும் அர்ச்சகர்கள் கூறியுள்ளனர்.

sani-baghavan

சண்டிகேஸ்வரரை கைதட்டி வழிபாடு செய்வது, நந்தி பகவானை பின்புறம் தட்டுவது போன்ற செயல்கள் ஆதாரமற்றவை. அதே போல சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது என்பது யாரோ ஒருவர் செய்தது! அதன் வழியே தொடரப்படும் ஒரு ஆன்மீக நிகழ்வாகும். எள் உடல் சூட்டை அதிகரிக்கும், ஆனால் எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மிகவும் குளிர்ச்சியானது. நெய், நல்லெண்ணெய் போன்றவற்றை கொண்டு தீபம் ஏற்றுவது குளிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருப்பதால் தான், அதன் மூலம் இறைவனை குளிர செய்து, நம் வேண்டுதல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆனால் எள் சூட்டைக் கொடுக்கக் கூடியது! இதனால் தீபமேற்றினால் எவ்விதத்திலும் நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

எள் எண்ணை கொண்டு ஏற்றப்படும் தீபத்திற்கு மிகுந்த சக்திகள் உண்டு. பஞ்ச தீப எண்ணெய் போல் அக்காலத்தில் முக்கூட்டு எண்ணெய் என்று ஆலயங்களில் ஏற்றப்படுவது பிரசித்தி பெற்று விளங்கியது. இந்த மூன்று எண்ணெய்களை கலந்து தீபம் ஏற்றினால் தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று முன்னோர்கள் கருதினர். அது எந்தெந்த எண்ணெய்கள் தெரியுமா? எள் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், பனை எண்ணெய் இந்த 3 எண்ணெய் சம அளவில் கலந்தால் தீபத்திற்கு ஏற்றது என்பது பழங்காலத்தில் நம் முன்னோர்களுடைய தீர்க்கமான நம்பிக்கை.

sani-temple-1

எப்பொழுதும் கூட்டு எண்ணெய்களை பயன்படுத்துவது கோவில்களில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பது நியதி. கூட்டு எண்ணெய்களை வீடுகளில் இருக்கும் பூஜை அறையில் ஏற்றினால்! எதிர்மறை எண்ணங்கள் பெருகும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது முறை அல்ல என்றாலும் பக்தர்களுடைய நீண்ட கால நம்பிக்கையாக இருந்து வரும் எள் தீபத்தை நம்பிக்கையோடு ஏற்றுபவர்களுக்கு நல்ல பலன்களே கிடைக்கும். இவற்றில் எது சரி? எது தவறு? என்பதை விட நம்முடைய நம்பிக்கையே நம் வேண்டுதலை நிறைவேற்றும். எனவே சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதும், எள் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவதும் அவர் அவர்களுடைய நம்பிக்கையை பொருத்தது. இதில் உங்களுக்கு எது விருப்பமோ அதனால் தீபமேற்றி சனிபகவான் உடைய பாதிப்புகளிலிருந்து விமோசனம் பெறலாம்.

- Advertisement -