எதிர்மறை சக்திகள் விலக மந்திரம்

negative energy manthiram
- Advertisement -

எதிர்மறை சக்திகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையை திருப்பிப் போடும் அளவிற்கு பாதிப்புகளை தரக்கூடியது தான் எதிர்மறை சக்திகள். எதிர்மறை சக்திகளில் பல வகைகள் இருந்தாலும் அனைத்தையுமே நாம் பொதுவாக எதிர்மறை சக்திகள் என்றுதான் கூறுகிறோம். நம்முடைய முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி மகிழ்ச்சியை குலையச் செய்து நிம்மதியற்ற நிலையை உண்டாக்கக்கூடிய ஒவ்வொரு சக்தியும் எதிர்மறை சக்தி தான். இந்த எதிர்மறை சக்திகள் நம் வீட்டில் இருந்து அகற்றுவதற்கு எந்த மந்திரத்தை கூறி வழிபட வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நாம் வணங்கக்கூடிய அனைத்து தெய்வங்களையும் நாம் மந்திர ரூபத்தில் வழிபடும் பொழுது அந்த மந்திரத்திற்கு உரிய பல நன்மைகள் ஏற்படும். அதனால் தான் சதா சர்வ காலமும் ஏதாவது ஒரு தெய்வத்தின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒருவரை பார்த்து பொறாமைப்படும் நபர் இவன் இப்படி ஆகக்கூடாது இது நடக்கக்கூடாது என்று மனதளவில் எண்ணிக்கொண்டு இருந்தாலே அதன் பாதிப்புகளை நாம் அனுபவிப்போம். எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்காக எதிர்மறையாக நாம் யோசித்தோம் என்றால் அதன் விளைவுகள் கண்டிப்பாக முறையில் எதிர்மறையாகவே தான் இருக்கும்.

- Advertisement -

யார் என்ன தீங்கு செய்தாலும் நாம் நன்மையை மட்டுமே நினைத்தோம் என்றால் அந்த தீங்கிலிருந்து நம்மை காப்பாற்ற கடவுள் மனித ரூபமாக வந்து உதவி செய்வார் என்பதால் தான் நல்லதை மட்டுமே நினைப்போம் என்று சொல்லப்படுகிறது. நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி, திட்டு முறை பாடுகள், தடைகள், தடங்கல்கள் இப்படி எதுவாக இருந்தாலும் அது அனைத்தையும் தீர்ப்பதற்கு லலிதா சகஸ்ர நாமத்தில் ஒரு வரி மந்திரம் இருக்கிறது.

இந்த மந்திரத்தை தொடர்ந்து 11 நாட்கள் 1008 முறை கூற வேண்டும். இப்படி கூறினோம் என்றால் நம்மிடமும், நம் வீட்டிலும் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை சக்திகளும் விலகி ஓடும் என்று என்பது உண்மை.

- Advertisement -

மந்திரம்

“ஓம் பரமந்த்ர விபேதின்யை நமஹ”

நம் வீட்டில் இருக்கும் நபர் யாருக்காவது இப்படி எதிர்மறை சக்திகளால் பிரச்சனை இருக்கிறது என்று நினைத்தால் அவர்களின் புகைப்படத்தை நம்முடைய வலது உள்ளங்கையில் வைத்து இடது கையால் மூடி இந்த மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும். ஒருவருக்கு மட்டும் அல்ல வீட்டிலேயே எதிர்மறை சக்திகள் நிறைந்து இருக்கிறது என்ற சந்தேகம் இருந்தால் ஒரு சுத்தமான டம்ளரை எடுத்து அதில் சுத்தமான குடிக்கும் தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு இந்த டம்ளரை உங்களுடைய வலது உள்ளங்கையில் வைத்து இடது உள்ளங்கையால் மூடி இந்த மந்திரத்தை 1008 முறை சொல்ல வேண்டும். பிறகு இதில் இருக்கும் தண்ணீரை வீட்டில் இருக்கும் நபர்கள் அனைவரும் சிறிதளவு குடித்துவிட்டு வீட்டிலும் தெளித்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து 11 நாட்கள் செய்தால் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி ஓடும்.

இதையும் படிக்கலாமே: 2024 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய சொல்ல வேண்டிய மந்திரம்

மிகவும் எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை நம்பிக்கையுடன் மனதார லலிதாம்பிகையை நினைத்துக் கொண்டு கூறினோம் என்றால் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி ஓடும்.

- Advertisement -