இழந்ததை திரும்ப பெற வழிபாடு

narachimmar vennai panagam
- Advertisement -

இழந்ததை திரும்ப பெற என்றவுடன் அனைவரும் பணம் நகை போன்றவற்றை மட்டும் தான் கருத்தில் கொள்வார்கள். ஆனால் இழந்தவை என்று பொருள் கொள்ளும் போது அது பணமோ நகையோ மட்டும் அன்றி ஒரு சிலர் தங்களுடைய வாழ்க்கையை கூட இழந்து தவித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் வேலையை இழந்து தவித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சில கௌரவமாக வாழ்ந்து விட்டு ஏதோ ஒரு சூழ்நிலையில் இன்று துன்பப்பட்டு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

இவையெல்லாம் கூட நம் வாழ்க்கையில் தொலைத்த விஷயங்கள் தான். பொன் பொருளை இழந்திருந்தால் கூட எப்படியேனும் பாடுபட்டு சம்பாதித்து சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கௌரவம் மரியாதை அந்தஸ்து வாழ்க்கை இவற்றையெல்லாம் இழந்து விட்டால் அத்தனை எளிதில் அதை திரும்ப பெற முடியாது. இதையெல்லாம் கூட இழந்ததை விட பல மடங்காக நமக்கு திருப்பித் தரக்கூடிய அற்புதமான ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இழந்தவற்றை திரும்ப பெற வழிபாடு

இந்த வழிபாட்டை பிரதோஷ வேளையில் தான் செய்ய வேண்டும். பிரதோஷம் என்றாலே சிவபெருமானுக்கு தானே நரசிம்மருக்கு ஏன் என்று தோன்றலாம். நரசிம்மர் அவதரித்த நேரமே இந்த பிரதோஷ நேரம் தான். ஆகையால் இந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.

இந்த வழிபாட்டை துவங்கும் நாள் பிரதோஷம் இருக்கும் படியான நாளாக பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு சனி பிரதோஷத்தில் இதை தொடங்கினால் ஒன்பது சனிக்கிழமைகள் தொடர்ந்து பிரதோஷ நேரத்தில் இந்த வழிபாட்டை செய்யுங்கள். இதை 18 வாரங்கள் 34 வாரங்கள் எனத் தொடர்ந்து செய்யலாம் ஆனால் ஒன்பது வாரங்கள் செய்தாலே சிறப்பான பலனை பெற முடியும்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்ய அருகில் உள்ள நரசிம்மர் ஆலயத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டிலிருந்து செல்லும் போது நரசிம்மருக்கு வெண்ணையை எடுத்து அதில் சிறு சிறு உருண்டைகளாக 108 உருண்டைகள் செய்ய வேண்டும். அதே போல் பானகத்தை தயார் செய்து கொள்ளுங்கள். ஆலயத்திற்கு சென்று அர்ச்சகர் இடம் இந்த பானகத்தை நரசிம்மருக்கு நெய்வேத்தியமாக வைத்து விட்டு வெண்ணை உருண்டைகளால் அர்ச்சனை செய்ய சொல்லுங்கள்.

அர்ச்சனை செய்த பிறகு அந்த வெண்ணை உருண்டைகளையும் பானகத்தையும் கையில் எடுத்துக் கொண்டு நரசிம்மரை முதலில் வலம் இருந்து இடமாக ஒன்பது முறை சுற்றிவர வேண்டும். அதன் பிறகு இடமிருந்து வலமாக ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். இப்படி சுற்றி வந்த பிறகு கொடி மரத்திடம் இந்த வெண்ணெய் உருண்டைகளையும் பானகத்தையும் வைத்து விழுந்து வணங்க வேண்டும்.

- Advertisement -

இந்த முறையில் வணங்கிய பிறகு பானகத்தையும் வெண்ணெய் உருண்டைகளையும் ஆலயத்திற்கு வருபவருக்கு தானமாக கொடுக்க வேண்டும். இதே போல 9 வாரங்கள் பிரதோஷ வேளையில் தொடர்ந்து இந்த வழிபாடு செய்யும் பொழுது நீங்கள் இழந்த எதுவாயினும் அது உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக வளர்பிறை சஷ்டி

எந்த வழிப்பாடும் செய்வதற்கு முன்பு நம்பிக்கை மிகவும் அவசியம். நம்பிக்கை உடன் நரசிம்மரை இந்த முறையில் வழிபாடு செய்து உங்களுடைய முயற்சியை கை விடாமல் தொடருங்கள் நிச்சயம் உங்களை பலர் போற்றும் விதமாக நரசிம்மர் வாழ வைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -