கலை இழந்த முகத்தை அழகாக மாற்ற ஃபேஸ் பேக்

dull face pack
- Advertisement -

கிராமப்புறங்களில் இன்றளவும் கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கிறாள் என்று கூறும் வழக்கம் இருக்கிறது. அழகாக இருப்பது என்பது நிறத்தைக் குறிப்பது மட்டும் அல்ல. அவர்களின் முகம் எந்த அளவிற்கு கலையாக இருக்கிறது என்பதையும் குறிப்பதுதான். அப்படி முகம் புத்துணர்ச்சியுடன் கலையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் எந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

முகம் என்றும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றால் நாம் அதிக அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் சத்தான பழங்களில் தினமும் ஏதாவது ஒரு பழத்தையாவது உண்டு வரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகம் என்றுமே பிரகாசத்துடனும் புத்துணர்ச்சியுடன் திகழும். அதோடு மட்டுமல்லாமல் முகத்திற்கு நாம் செய்யக்கூடிய இந்த மிகவும் எளிமையான பேஸ் பேக்கை செய்வதன் மூலமும் முகம் பிரகாசமாக இருக்கும்.

- Advertisement -

முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பவுலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை சேர்க்க வேண்டும். பிறகு அதில் கால் ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்த பிறகு இதை பேஸ்ட் பதத்திற்கு ஆக்குவதற்கு ஒரு ஸ்பூன் தயிரை இதனுடன் சேர்க்க வேண்டும். இதற்கு மேல் தேவைப்படும் பட்சத்தில் பன்னீரை இதனுடன் சேர்த்தும் கலந்து கொள்ளலாம்.

இப்படி தயார் செய்த இந்த பேஸ்ட்டை முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு முகத்தில் தடவ வேண்டும். தடவி ஒரு கால் மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். இந்த ஃபேஸ் பேக் லேசாக ஈரத்தன்மையுடன் இருக்கும் பொழுது தங்களுடைய இரண்டு கைகளையும் வைத்து முகத்திற்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி குறைந்தது இரண்டு நிமிடமாவது மசாஜ் செய்த பிறகு முகத்தை கழுவி விடலாம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக் நன்றாக உலர்ந்து விட்டது என்னும் பட்சத்தில் முகத்தில் சிறிது தண்ணீரையோ அல்லது பன்னீரையோ தெளித்து விட்டு அதை ஈரம் செய்த பிறகு மசாஜ் செய்து கழுவ வேண்டும். முடிந்த அளவிற்கு நன்றாக காய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே முகத்தில் இருக்கக்கூடிய மாசு மருக்களை நீக்கும் வல்லமை படைத்ததாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் அழுக்குகளையும் மொத்தமாக நீக்கி முகத்திற்கு ஒருவித பொலிவை தருகிறது.

இதில் சேர்த்துள்ள கஸ்தூரி மஞ்சள் தூள் முகத்திற்கு ஒரு வித பிரகாசத்தை உடனடியாக தரக்கூடிய ஆற்றல் மிக்கது. மேலும் இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் பருக்கள் எதுவும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். அடிக்கடி முகத்தில் நாம் பன்னீரை தடவுவதன் மூலம் முகத்தை என்றென்றும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியும்.

இதையும் படிக்கலாமே: பட்டுப் போன்ற கூந்தலை பெற பயன்படுத்த வேண்டிய ஹேர் மாஸ்க்

இந்த எளிமையான பேஸ் பேக்கை நாமும் நம் முகத்தில் தடவி கலை இழந்த டல்லான முகத்தை பிரகாசமாகவும் அழகாகவும் மாற்ற முடியும்.

- Advertisement -