பூண்டு பொடியை ஒருவாட்டி இப்படி அரைச்சு பாருங்க. ஜென்மத்துக்கும் காசு கொடுத்து கடையில இட்லி பொடி வாங்கவே மாட்டீங்க.

idli-podi4
- Advertisement -

இந்தப் பூண்டு பொடி அரைக்கும் போதே நமக்கு இட்லிக்கு தொட்டு சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அந்த அளவுக்கு வித்தியாசமான முறையில் ஒரு பூண்டு பொடி ரெசிபியை மிக மிக சுலபமாக எப்படி அரைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கீழே குறிப்பிட்டுள்ள அளவுகளில் இதேபோல் ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் இது நீங்க அரைத்த பூண்டு பொடியா அல்லது கடையில் வாங்கியதா என்று எல்லோரும் கேட்பாங்க. சரி நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Garlic(Poondu)

முதலில் இந்த பூண்டு பொடிக்கு தேவையான அளவுகளை பார்த்துவிடுவோம். பூண்டு – 200 கிராம், உளுந்து – 200 கிராம், வரமிளகாய் – 8, கருவேப்பிலை – 1 கைப்பிடி, தேங்காய் துருவல் – 2 கைப்பிடி, பெருங்காயம் – சிறிய துண்டு, தேவையான அளவு – கல் உப்பு.

- Advertisement -

முதலில் பூண்டை தோல் உரித்து நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டை நசுக்குவதிலும் ஒரு டிப்ஸ் உள்ளது. ஒரு பூண்டை எடுத்து ஒரு தட்டு தட்ட வேண்டும். அவ்வளவு தான் அந்த பூண்டு அதிகமாகவும் பொடிப்பொடியாக நசுக்கி விடக் கூடாது. எல்லா பூண்டும் சீராக தட்டி இருக்க வேண்டும். காரணம் இதை எண்ணெயில் போட்டு வறுக்கும் போது, ஒரு பூண்டு சிவந்தும் ஒரு பூண்டு சிவக்காமலும் இருந்தால் பூண்டு பொடி சரியான பக்குவத்தில் வராது. இது ஒரு குறிப்பு.

garlic-fry

சரி, எல்லா பொருட்களையும் தனித்தனியாக வறுக்கவேண்டும். முதலில் கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய் காய்ந்ததும் முதலில் தட்டி வைத்திருக்கும் பூண்டை போட்டு பக்குவமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுபட்ட பூண்டை எடுத்து கையில் உடைத்தால் அப்பளம் போல உடைய வேண்டும். அதே சமயம் பூண்டு கருதிவிடக்கூடாது. வறுத்த பூண்டினை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து தான் பூண்டு வறுக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக பெருங்காய கட்டியை எண்ணெயில் போட்டு பொரியவிட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்தபடியாக உளுந்தம் பருப்பை ஒரு ஸ்பூன் எண்ணெயில் பொன்னிறமாக சிவக்கும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக வரமிளகாயை வறுக்கவேண்டும். அடுத்தபடியாக ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையைப் போட்டு கறிவேப்பிலையையும் கையில் எடுத்து உடைத்தால் உடைய வேண்டும். அந்த பக்குவத்திற்கு வறுக்க வேண்டும்.

nalla-kara-podi1

இறுதியாக தேங்காய் வறுத்துக் கொள்ளலாம். தேங்காயில் எண்ணெய் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் போட்ட தேங்காய் அனைத்தும் பிரவுன் கலர் வரவேண்டும். அந்த அளவிற்கு வறுத்துக்கொள்ளுங்கள். இதையும் எடுத்து தனியாக தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

podi-idli2

கல் உப்பு சேர்க்கவேண்டும். கல்லுப்பில் ஈரப்பதம் இருக்கும் என்பதால் அதையும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு கடாயில் இருக்கும் சூட்டிலேயே கல் உப்பை வறுத்தால் கூட போதும்.

rasa-podi1

இப்போது எல்லா பொருட்களும் நன்றாக ஆரட்டும். ஆரிய இந்த பொருட்களை பக்குவமாக மிக்ஸி ஜாரில் எப்படி அரைப்பது என்பதை பார்ப்போம். முதலில் மிக்ஸி ஜாரில் உளுந்து, மிளகாய், பெருங்காயம், இந்த மூன்று பொருட்களையும் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக கருவேப்பிலை தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும். இறுதியாக பூண்டு, கல் உப்பையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் பூண்டு பொடி தயார். இதில் கொஞ்சமாக நல்லெண்ணெயை ஊற்றி அப்படியே இட்லியில் தொட்டு சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கே இதன் சுவை தெரியும்.

sambar-podi1

பின்குறிப்பு: பொடி செய்ய தேவையான பொருட்களை எல்லாம் நாம் எண்ணெய் சேர்த்து வறுத்து இருக்கின்றோம். ஒரு வாரம் வரை இந்த பூண்டுப்பொடி வெளியில் வைத்தால் நன்றாக இருக்கும். முடிந்தவரை இந்த பூண்டு பொடியை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால், 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். இந்த பொருட்களை எல்லாம் எண்ணெய் ஊற்றி வறுக்காமல், ட்ரையாக வருத்தும் பொடி செய்யலாம். இருப்பினும் அதனுடைய சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். எண்ணெய் ஊற்றாமல் மேல் சொன்ன பொருட்களை எல்லாம் வறுத்து பொடி செய்தால், பொடி நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -