உடல் முழுவதும் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா, அப்படியானால் இதோ உங்களுக்காக கோல்டன் பாத் பவுடர்.

face1
- Advertisement -

சிலரை பார்த்த உடனே இவங்க தங்கம் போல ஜொலிக்கிறாங்களே, என்று கூறுவோம். தங்கம் அதிகம் போட்டுக் கொள்வதால் இந்த வார்த்தையை கூறுவதில்லை. அவர்களின் உடல் நிறமே அப்படி வெள்ளையாகவும் இல்லாமல் சிவப்பு நிறமாகவும் இல்லாமல் ஒரு வித மஞ்சள் நிறத்துடன் தங்கம் போல் பார்ப்பதற்கே வசீகரமான, அழகுடன் இருப்பார்கள். இதைப் போன்ற வசீகரிக்கும் அழகு பெற வேண்டுமானால், இந்த கோல்டன் பாத் பவுடரை தினமும் உபயோகித்து வாருங்கள். நீங்களும் தங்கம் போல் ஜொலிக்கலாம்.

தேவையான பொருள் : மைசூர் பருப்பு – 1/4 கப், ஆரஞ்சு பழ தோல் – 1 கப், கேரட் – 2, கஸ்தூரி மஞ்சள் – 1/4 ஸ்பூன்.

- Advertisement -

முதலில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது மைசூர் பருப்பு. சாம்பார் வைக்க பயன்படுத்தும் இந்த மைசூர் பருப்பு தான், நம் சருமத்தின் நிறத்தை மாற்றக்கூடிய தன்மை வாய்ந்தது. கால் கப் அளவுக்கு மைசூர் பருப்பை எடுத்து, நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இத்துடன் ஆரஞ்சு பழ தோல். இது நாட்டு ஆரஞ்சு அதாவது கமலா பழம் என்று கூறுவார்கள். அந்தப் பழத்தின் தோல் கிடைத்தால் மிகவும் நல்லது. இல்லை என்றால் சாதாரண ஆரஞ்சு கூட எடுத்துக் கொள்ளலாம். இதன் தோலை ஒரு கப் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள்.

இதை குறைந்தது இரண்டு நாளாவது வெயில் காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்து ஓடு போல மாறி வரும், அப்படி காய வைத்து எடுத்துக்கொண்ட ஆரஞ்சு தோல் ஒரு கப். இதில் நாம் சேர்க்கும் இன்னொரு முக்கியமான பொருள் கேரட். இரண்டு கேரட்டை எடுத்து நன்றாக தோல் நீக்கி சீவிய பின் இதை ஒரு நாள் வெயில் காய வைத்தாலே போதும். நன்றாக உலர்ந்து காய்ந்து விடும். இதையும் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவை மூன்றையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் போட்டு இத்துடன் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்து நல்ல பவுடர் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு காற்று புகாத ஏர்டெட் கண்டனரில் போட்டு ஸ்டோர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

இதை தினமும் குளிக்கும் முன் உங்கள் தேவைக்கேற்ப ஒன்றோ, இரண்டு ஸ்பூன்களோ, எடுத்து நன்றாக தண்ணீர் ஊற்றி குழைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டு குறைந்தது பத்து நிமிடமாவது அப்படியே இருங்கள். (தண்ணீருக்கு பதில் பால், தயிர், ரோஸ் வாட்டர், அப்படி இல்லை என்றால் உருளைக்கிழங்கு சாறு, பீட்ரூட் சாறு, கேரட் சாறு, வெள்ளரிக்காய் சாறு, என எந்த பொருளை ஊற்றி வேண்டும் என்றாலும் இதை நீங்கள் கலந்து கொள்ளலாம்.) இதை உபயோகிக்கும் போது சோப்பு போட தேவையில்லை, ஆனால் சிலருக்கு சோப்பு போட்டு குளித்தால் தான் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள் , அவர்கள் முதலில் சோப்பு போட்டு குளித்த பிறகு நன்றாக துடைத்து விட்டு, பின் இதை தேய்த்து ஒரு பத்து நிமிடம் கழித்து குளித்து விடுங்கள்.

இப்படி நீங்கள் தினமும் செய்து வந்தால் உங்கள் மேனி முழுவதும் தங்கம் போல் மாறுவதை நீங்களே உணர்வீர்கள். ஆண்களும் இதை உபயோகிக்கப்படுத்தலாம். ஆண்கள் இந்த பொடியை உபயோகப் படுத்தும் போது கஸ்தூரி மஞ்சள் மட்டும் தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -