வருமானம் பெருக செய்ய வேண்டியது

sivan turemic
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு மாத பிறப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது மாதத்திற்கு மட்டுமல்ல வருடத்திற்கும் பொருந்தும். ஆகையால் தான் தமிழ் வருடமாக இருந்தாலும் சரி ஆங்கில வருடமாக இருந்தாலும் சரி அந்த நாளை நம் ஆலயம் சென்று தெய்வ வழிபாடு செய்வது முதல் பல நல்ல காரியங்கள் செய்கிறோம். அப்படியாக நாளை பிறக்க இருக்கும் ஜூலை ஒன்றாம் தேதி இந்த செயலை எல்லாம் செய்தால் வருமானம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை ஒன்றாம் தேதி செய்ய வேண்டியது

பொதுவாகவே ஒரு நாளோ வருடமோ மாதமோ பிறக்கிறது என்றால் அந்த நாளை நாம் முதலில் வழிகாட்டில் தான் துவங்குவோம். அப்படி நாளை ஜூலை ஒன்றாம் தேதியானது திங்கட்கிழமை அன்று பிறக்கிறது. திங்கட்கிழமை சந்திர பகவானுக்குரியதாகவும் அந்த சந்திர பகவானுக்குரிய அதி தேவதையாக விளங்கக்கூடிய சிவபெருமானுக்கானதாகவும் கருதப்படுகிறது.

- Advertisement -

ஆகையால் நாளைய நாளில் சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்வது மிகவும் தருவதாக அமையும். அதே போன்று நாம் ஒரு நாளில் துவக்கத்தில் செய்யும் செயல் தான் அந்த நாளை நல்ல முறையில் நடத்தி செல்லும். அப்படியாக மாதத்தின் முதல் நாளான நாளை நாம் வாங்கும் சில பொருட்கள் நம்முடைய வீட்டை சுபிட்சமாக வைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி வாங்கக் கூடிய பொருள்களில் மங்களப் பொருளான மஞ்சளும் அரிசியும் உண்டு.

நாளைய தினத்தில் இவை இரண்டையும் வாங்கும் பொழுது குடும்பத்தில் மங்கல காரியங்கள் தொடர்ந்து நடப்பதோடு குடும்பத்திற்கு வறுமை என்ற துன்பம் வராமல் தடுக்கப்படும். மஞ்சள் பொதுவாகவே அனைத்து மங்கள காரியத்திற்கும் நல்ல காரியத்திற்கும் முன்னிலையில் இருக்கக் கூடிய பொருள் அத்துடன் அரிசியானது சந்திரனுக்குரிய பொருள் நாளை மாத பிறப்பு திங்கட்கிழமை வருவதால் இந்த பொருளை வாங்குவது குடும்பத்திற்கு நல்ல சுபிஷ்சத்தை ஏற்படுத்தும்.

- Advertisement -

இத்துடன் நாளைய தினம் அன்னதானம் செய்வதும் அன்னதானத்திற்கு ஏதேனும் உதவி செய்வதும் இந்த மாதம் முழுவதும் வருமானம் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. ஒருவருடைய கர்மா பாவம் அனைத்தையும் தீர்க்கக் கூடியது இந்த அன்னதானம். அதை நாளைய தினத்தில் செய்யும் போது இவற்றுடன் சேர்த்து வருமானமும் பெருகும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: உடம்பையும் மனதையும் சுறுசுறுப்பாகும் வார்த்தை

ஜூலை மாதத்தின் முதல் தேதியான நாளைய தினம் இவையெல்லாம் செய்வது நம்முடைய குடும்ப நலன் மட்டுமின்றி செல்வ நலனையும் அதிகரித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்யும் பொழுது நிச்சயம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை தயவு செய்து கொள்வோம்

- Advertisement -