இந்த 2 தீபங்களை உங்களுடைய வீட்டில் ஏற்றினாலே போதும். உங்களைப் பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கண்திருஷ்டி, கருகிப் போய் விடும்.

suriyan
- Advertisement -

கண்திருஷ்டியானது நம்மேல் பட்டால் நம்முடைய வாழ்க்கை தான் கருகிப் போகும். அப்பேர்பட்ட கண்திருஷ்டியை நம் வீட்டில் இருந்து அடித்து விரட்டக் கூடிய ஒரு சக்தி வாய்ந்த தீபத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தீபத்தை ஏற்றினால், இந்த தீபச் சுடரின் ஒளியில் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும், கண் திருஷ்டியும் அக்கம் பக்கத்து வீட்டாரின் வயிற்றெரிச்சலும் பொசுங்கி விடும்.

gothumai-deepam

இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். இரண்டு தீபங்கள் தயார் செய்யும் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக சர்க்கரை அல்லது வெல்லத்தை கலந்து கொள்ள வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு கோதுமை மாவை கெட்டியாக பிசைந்து, அகல் தீபங்கள் போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய எச்சில் படாத தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டின் மேல் ஒரு வாழை இலையைப் போட்டுக் கொள்ளுங்கள். அந்த வாழை இலையின் மேல் இந்த இரண்டு கோதுமை தீபங்களையும் வைத்துவிட வேண்டும். கோதுமை தீபத்திற்கு உள்ளே நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

sigapu-thiri

கருப்பு திரிக்கு எங்கே செல்வது. கவலையே வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளை திரியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் லேசாக கண் மையை தடவி உலர வைத்து விடுங்கள். அவளவு தான். கருப்பு நிற திரி தயார். இந்த கருப்பு நிற திரியை இரண்டு கோதுமை விலங்குகளிலும் போட்டு தீபம் ஏற்றி விட வேண்டும். இந்த தீபத்தை நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் வைத்து தயார் செய்யலாம். பூஜை அறையில் வைத்து தயார் செய்து தீபத்தை ஏற்றி விட்டு, இந்த தீபச்சுடர் ஒளியை உங்கள் வீடு முழுவதும் கொண்டு போய் காண்பிக்க வேண்டும். (கோதுமை என்பது சூரிய பகவானுக்கு உரிய தானியம். சூரிய பகவானின் நெருப்பிலேயே உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி கருகி போய்விடும் என்பதே இந்த தீபத்தினுடைய அர்த்தம்.)

- Advertisement -

அதாவது கண் திருஷ்டி ஆக இருந்தாலும், அடுத்தவர்களுடைய வயிற்றெரிச்சலாக இருந்தாலும், எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும் வீடு முழுவதும் நிரம்பி இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் எல்லாம் இந்த தீபச் சுடரினுடைய பிரகாசம் விழ வேண்டும். வீட்டு வாசல் பகுதியில் இருந்து, உங்கள் வீட்டு பின்பக்கம் வரை எல்லா இடங்களிலும் இந்த தீபத்தை கொண்டுபோய் ஆரத்தி காண்பது போல காண்பித்து விட்டு, தீபத்தை கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலுக்கு வெளியில் வைத்து விட வேண்டும்.

deepam

அப்படி வீட்டு வாசலுக்கு வெளிப்பக்கத்தில் இடமில்லை என்றால், வீட்டு புறவாசல் அதாவது வீட்டிற்கு கொல்லைப் பக்கத்தில் வைத்துவிடலாம். வீட்டிற்கு வெளிப்பக்கத்தில் எங்குமே இடமில்லை எனும் பட்சத்தில், வீடு முழுவதும் இந்த தீபசுடரை காண்பித்த பிறகு, தீபத்தை குளிர வைத்து விட்டு, வீட்டிற்கு வெளியில் கொண்டுபோய் ஏதாவது ஒரு மரத்தடியில், ஏதாவது ஒரு காலி இடங்களில், இந்த தீபத்தை வைத்து விட்டு வர வேண்டும். அவ்வளவு தான்.

God Suriya bagavaan

இது கோதுமை மாவில் செய்த தீபம் அல்லவா. சிறிய எறும்புகள் பூச்சிகள் இதை சாப்பிட்டுக் கொள்ளும். இந்த தீபத்தினை மேல் சொன்ன முறைப்படி உங்களுடைய வீட்டில் ஏற்றினால் நிச்சயமாக கண்திருஷ்டியால் வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி விடும்.

vetrilai-deepam1

எப்போது கண் திருஷ்டியால் உங்களுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுகிறது என்று உணர்கிறீர்களோ அந்த சமயத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றலாம். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு என்று கழுத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -