அரசாங்க வேலை தேடுபவர்களா நீங்கள். வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் வைத்து பரிகாரம் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் நினைத்த வேலை விரைவில் கிடைக்கும்

sun
- Advertisement -

ஆண்டுதோறும் பல லட்சம் மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்து வெளியில் வந்து அவர்களுக்குத் தகுதியான வேலையை தேடிக் கொள்கின்றனர். சென்னையில் வசிக்கும் மாணவர்கள் ஐடி நிறுவனம் மற்றும் தங்கள் படிப்பிற்கு ஏற்ற வகையில் இருக்கும் தனியார் நிறுவனங்களில் தங்களுக்கான வேலையை தேடிக் கொள்கின்றனர். ஆனால் கிராமப்புறங்களிலும், அதிக தொழில்நுட்ப வசதிகள் இல்லாத ஊரில் இருப்பவர்களும் தங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கு அரசாங்க வேலையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு அரசாங்க வேலை கிடைக்க பல தேர்வுகள் எழுதி மிகுந்த முயற்சிகள் செய்து கொண்டிருப்பார்கள். இவ்வாறானவர்களுக்கு விரைவில் அரசாங்க வேலை கிடைப்பதற்கான எளிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

job

சூரிய பகவான்:
சூரிய பகவான் வேலைக்கு அதிபதியான கடவுளாக பார்க்கப்படுகிறார். சூரிய பகவானை மனதார தொழுது வேண்டிக் கொள்ளும் பொழுது வேலை சம்பந்தமான பிரச்சனைகளாக இருந்தாலும், தொழில் சம்பந்தமான பிரச்சனைகளாக இருந்தாலும், அதனை தீர்த்து வைக்கும் வல்லமை பொருந்தியவராக இருக்கிறார். இவ்வாறு அரசாங்க வேலை கிடைப்பதற்காக கோதுமை மாவு பிரசாதம் செய்து படையலிட்டு சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜை செய்வதன் மூலம் விரைவில் நாம் நினைத்த காரியத்தை அடைய முடியும்.

- Advertisement -

அதிகாலை 5 மணி அளவில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜைக்கு தேவையான பொருட்களான பஞ்சபாத்திரம், இரண்டு அகல்விளக்கு, நல்லெண்ணெய், 2 பஞ்சுத் திரி, கற்பூரம், வாழை இலை, கோதுமைமாவு, நாட்டுச்சக்கரை, கற்பூரம் ஏற்றும் தாம்பூலத் தட்டு மற்றும் பூஜைக்கு தேவையான மலர்கள் இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விட வேண்டும்.

wheat

சூரியன் வரும் சிறிது நேரத்திற்கு முன்னரே பூஜைக்கு வேண்டியவற்றை தயார் செய்திட வேண்டும். அதற்கு முதலில் பூஜை பாத்திரங்கள் அனைத்திற்கும் மஞ்சள், குங்கும பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் மொட்டை மாடியின் ஒரு இடத்தில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து கொண்டு, அதன் மீது மஞ்சளைக் குழைத்து நன்றாக பூசி விடவேண்டும். பிறகு அரிசி மாவு வைத்து அந்த இடத்தில் கோலம் போட்டு அதன் நடுவில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைக்க வேண்டும்.

- Advertisement -

அதன்பின் கோலத்தின் மீது வாழை இலையை விரித்து இரண்டு கைப்பிடி கோதுமை மாவை அதில் வைத்து பரப்பி விட வேண்டும். அதன்மீது 2 அகல் விளக்குகளை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட வேண்டும். பின்னர் விலக்கிற்கு பின்னால் மலர்கள் வைத்துவிட்டு பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்.

Govt job

அதற்குப் பிறகு ஒரு சிறிய தட்டில் சிறிதளவு கோதுமை மாவுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து அகல் விளக்கிற்கு முன்னால் வைத்துவிட்டு, சரியாக சூரியன் வரும் நேரத்தில் தாம்பூல தட்டில் கற்பூரம் ஏற்றி சூரியனை நோக்கி காண்பித்து, சூரிய பகவானை மனதார நினைத்து, நான் முயற்சி செய்து கொண்டிருக்கும் அரசாங்க வேலை எனக்கு விரைவில் கிடைத்திட அருள் செய்திடுங்கள் இறைவா என்று மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் முயற்சி செய்யும் அரசாங்க வேலை உங்களுக்கு விரைவில் கிடைத்துவிடும்.

- Advertisement -