அரசு பணி கிடைக்க பரிகாரம்

- Advertisement -

தற்காலத்தில் பலரும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதற்காக பல அரசு பணி தகுதி தேர்வுகளையும் எழுதுகின்றனர். 1000 அரசு பணி காலியிடங்களுக்கு குறைந்தது 5 லட்சம் பேர் அரசு தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் அனைவருக்குமே அரசு பணி கிடைக்காது என்பது யதார்த்தமான உண்மை. இருப்பினும் தங்களுக்கு ஒரு அரசுப் பணி கிடைக்காதா? என்கிற ஏக்கம் அனைவருக்மே உள்ளது. ஒருவருக்கு ஜாதக ரீதியிலான அமைப்பு நன்றாக இல்லை என்றாலும் தங்களின் மன விரும்பும் பணியாக அரசுப் பணி இருக்கும் பட்சத்தில், அரசு பணி கிடைக்க செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

அரசு பணி பரிகாரம்

ஒருவருக்கு அரசு பணி கிடைக்க அவரது விதி மற்றும் ஜாதக ரீதியாக நல்ல அமைப்பு இருக்கும் பட்சத்தில் அவர் எந்தவித ஆன்மீக பரிகாரங்களை செய்யாமலேயே, அவருக்கு நிச்சயமாக அரசுப்பணி கிடைத்துவிடும். இங்கு அரசுப் பணி கிடைக்க விரும்பும் நபர்களுக்காக கூறப்பட்டுள்ள இந்த பரிகாரங்களை தங்களின் குலதெய்வத்தை வேண்டிய பின்பு நம்பிக்கையுடன் செய்து பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

- Advertisement -

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அல்லது இந்த இரு கிரகங்களும் சுப கிரகங்களின் பார்வை பெற்றாலும், அவருக்கு உரிய காலத்தில் அரசு பணி கிடைக்கும். ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களும் நல்ல நிலையில் இல்லாதவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவான் வழி பாடும், செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் வழிபாடும் செய்து வர வேண்டும். இந்த வழிபாடு செய்கின்ற தினங்களில் புலால் உண்ணுதல், மது அருந்துதல் , போதை வஸ்துக்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

அரசுப் பணி கிடைக்க முயற்சிப்பவர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஆஞ்சநேயர் கோயிலில், ஆஞ்சநேயருக்கு செந்தூரம் சாற்றி இருக்கும் சமயத்தில், அர்ச்சகரிடம் சொல்லி, ஆஞ்சநேயரின் வலது கால் கட்டை விரலில் இருக்கின்ற செந்தூரத்தை எடுத்து, அதை தங்களின் நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை அரசு பணி கிடைக்கின்ற வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

- Advertisement -

தங்களுக்கு நிச்சயமாக அரசு பணி கிடைக்க வேண்டும் என விரும்புபவர்கள் ஒரு செவ்வாய்க்கிழமையில் தூய்மையான வெள்ளை நிற துணியில் ஒரு கைப்பிடி அளவு கருப்பு கவுனி அரிசியை போட்டு, வெள்ளை நிற நூல் கொண்டு அதை முடிச்சாக கட்டி, உங்களுக்கு அருகாமையில் இருக்கின்ற காளியம்மன் கோயிலுக்கு சென்று காளியம்மன் பாதத்தில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கொடுமுடி பரிகாரம்

அரசு பணி கிடைக்க விரும்புபவர்கள் 1 ஒரு காரட் எடைக்கு மேல் உள்ள மாணிக்க கல்லை தங்கத்தில் பதித்து வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்வதால், சீக்கிரத்திலேயே அரசு பணி கிடைக்கும், ஏற்கனவே அரசு பணியில் இருப்பவர்களுக்கும் பல உயர்வுகளை இந்த மாணிக்க கல் கொடுக்கும்.

- Advertisement -