குடிசையில் இருப்பவனை கோபுரத்துக்கு எடுத்துச் செல்லும் குபேர வழிபாடு

guberan
- Advertisement -

ஏழையாக இருப்பவர்கள் எல்லோருக்குமே பணக்காரர்களாக மாற வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த குபேர யோகம் அடிக்கிறது. பணத்துக்கு அதிபதியான குபேரரை வசியம் செய்து விட வேண்டும். எப்படியாவது நாங்களும் பணக்காரராக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வழிபாட்டை வியாழக்கிழமை தோறும் வீட்டில் செய்து வாருங்கள். உங்களுக்கும் குபேர சம்பத்து கிடைக்கும். கோடி கோடியாக பணம் கொட்டும்.

குபேர வசிய வழிபாடு

வீட்டில் இருக்கும் தென்மேற்கு மூலையில் தான் குபேர மூலை என்று சொல்லுவார்கள். உங்களுடைய வீட்டில் எது குபேர மூலை என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அந்த இடத்தில் ஒரு மனப்பலகையோ அல்லது நாற்காலியோ போட்டு அதன் மேலே ஒரு குபேர சிலையை வைத்து விடுங்கள்.

- Advertisement -

குபேர சிலைக்கு பக்கத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில், ஒரு துண்டு பட்டை, கொஞ்சமாக குங்குமப்பூ, ஒரு எலுமிச்சம் பழம் இந்த மூன்று பொருட்களையும் போட்டு வைக்க வேண்டும். குபேர பொம்மைக்கு பக்கத்தில் இது இருக்கட்டும். குபேரருக்கு முன்பாக ஒரு விளக்கு. அது குபேர விளக்காக இருந்தாலும் சரி, சாதாரண மண் அகல் விளக்காக இருந்தாலும் சரி, அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

இவை அனைத்தும் குபேர மூலையில் இருக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இப்படி முறையாக குபேரரை, குபேர மூலையில் அமர வைத்துவிட்டு, இந்த குபேரரின் முன்பு அமர்ந்து மனமுரக வேண்டுதல் வையுங்கள். உங்கள் பண தேவை பூர்த்தியாக வேண்டும்.

- Advertisement -

வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால், உங்களுக்கு குபேர வசியம் ஏற்படும். குபேர சம்பத்து கிடைத்து கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் தேடி வரும். இந்த வழிபாட்டை மட்டும் செய்து முடித்துவிட்டு பணம் கூரையை பிச்சிக் கொண்டு கொட்டும் என்று நினைப்பது தவறு.

நல்ல வேலைக்குப் போக வேண்டும், நல்ல வியாபாரம் செய்ய வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று உங்களுடைய ஆழ்மனதிலும் எண்ணம் தோன்றி அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது வெற்றி மேல் வெற்றியைக் காணக்கூடிய வழியை இந்த குபேரன் உங்களுக்கு காட்டி கொடுப்பான். இது ஒரு எளிமையான வழிபாட்டு முறை.

- Advertisement -

குங்குமப்பூ விலை அதிகமாக இருக்கும் என்று கவலைப்படாதீங்க. சின்ன டப்பா வாங்கிக்கோங்க. வாரத்தில் ஒரு நாள் வியாழக்கிழமை தான் இந்த பரிகாரத்தை செய்யப் போறீங்க. இரண்டு குங்குமப்பூவே அந்த தண்ணீரில் போட்டால் போதும். வியாழக்கிழமை பரிகாரம் செய்துவிட்டு வழிபாட்டை நிறைவாக முடித்துவிட்டு, வெள்ளிக்கிழமை அந்த தண்ணீர் உங்க வீட்டில் இருக்கட்டும். சனிக்கிழமை அந்த தண்ணீரை எடுத்து கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தீராத கஷ்டம் தீர பரிகாரம்

எந்த ஒரு வீட்டில் வியாழக்கிழமை குபேர மூலையில் இப்படி ஒரு வேண்டுதல் வைக்கப்படுகிறதோ, அந்த வீட்டில் நிச்சயம் பணமழை பொழிவது உறுதி. உங்கள் வறுமையெல்லாம் நீங்கிவிடும் பணக்கஷ்டம் தீரும் நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். நீங்களும் குடிசையில் இருந்து கோபுரத்துக்கு மாறுவீர்கள் என்று தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -