குபேரருக்கு தினமும் இந்த 1 இலையை மட்டும் வைத்து அர்ச்சனை செய்தால், குன்றாத செல்வம் கோடி கோடியாக கொட்டும்.

guberan sivan
- Advertisement -

பொதுவாகவே குபேரருடைய வழிபாடு நமக்கு கோடி செல்வத்தை கொடுக்கும் என்று சொல்லுவார்கள். வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் நிறைய பேர் குபேரருக்கு பிரத்தியேகமாக வீட்டில் வழிபாடு செய்யக் கூடிய வழக்கங்கள் எல்லாம் உள்ளது. உதாரணத்திற்கு குபேர விளக்கு போடுவது, பச்சை திரியை கொண்டு விளக்கு போடுவது, பச்சை குங்கும அர்ச்சனை செய்வது, இப்படி பல வகையான குபேரரது வழிபாடுகள் நமக்கு தெரிந்திருக்கும். இன்று நாம் பார்க்கக் கூடிய வழிபாடு கொஞ்சம் வித்தியாசமானது. இந்த வழிபாட்டை செய்வதன் மூலமாகவும் அளவில்லா ஐஸ்வர்யங்களை பெற முடியும். அது என்ன வழிபாடு. நம்முடைய வீட்டில் முறையாக அதை எப்படி செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கோடி செல்வத்தைப் பெற குபேரர் பூஜை செய்வது எப்படி:
வாரத்தில் ஒரு நாள் தான் குபேரர் பூஜையை செய்ய முடியும் என்று நினைப்பவர்கள், வியாழக்கிழமை இந்த பூஜையை வீட்டில் செய்யலாம். தினமும் எங்களால் இந்த பூஜையை வீட்டில் செய்ய முடியும் என்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அது உங்களுடைய சகோதரியும். குபேரர் என்று சொன்னாலே பச்சை நிறம் சிறப்பு வாய்ந்தது. ஆகவே தினமும்  குபேரருக்கு பிடித்த இந்த பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய, அந்த ஈசனுக்கு சொந்தமான வில்வ இலையை வைத்து தான் இன்றைய வழிபாட்டை நாம் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

பூஜை அறையை சுத்தம் செய்து, குபேரருக்கு சிலை அல்லது படம் வைத்திருந்தால் அதற்கு வாசனை நிறைந்த பூக்களை போட வேண்டும். குபேரருக்கு முன்னால் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சிறிய தட்டில் வில்வ இலைகளை கொட்டிக் கொள்ளுங்கள். பூஜை அறையில்  குபேரரை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு, குபேரருக்கு உகந்த ஏதாவது மந்திரங்களை சொல்லி இந்த இலைகளை எடுத்து குபேரருக்கு அர்ச்சனை செய்யலாம்.

மந்திரங்கள் எதுவும் தெரியாது என்பவர்கள் ‘ஓம் குபேராய போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லி அந்த வில்வ இலைகளால் குபேரருக்கு அர்ச்சனை செய்து உங்களுடைய பண கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தினமும் புதியதாக தான் வில்வ இலைகளை வாங்கி வந்து குபேரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பழைய பூஜை செய்த இலை காய்ந்த பிறகு அதை எடுத்து செடி கொடிகள் இருக்கும் இடத்தில் கால் படாமல் போட்டு விடவும்.

- Advertisement -

நம்முடைய ஊர்களில் வில்வ இலைகள் எளிதாக சிவன் கோவில் வாசலில் கிடைக்கும். ஆனால் சில பேருக்கு இந்த வில்வ இலைகள் கிடைப்பதில் சில சிரமங்கள் இருக்கும். அப்படி இருந்தால் ஒரு பாக்கெட் வில்வ இலையை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு வெறும் ஒரு இலையை குபேரருக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு, வெறும் மந்திரத்தை சொல்லிக் கூட இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம் தவறு கிடையாது. ஒரு வில்வ இலையாக இருந்தாலும் அதற்கு கிடைக்க கூடிய பலன் நிறைவாகத்தான் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: எவ்வளவு உழைத்தாலும் வருமானம் அதிகரிக்கவில்லையா? உங்க வீடு இப்படி இருந்தால் பணம் பெருகாது தெரியுமா?

தினமும் குபேரரையும், ஐஸ்வர்ய ஈஸ்வரரையும் நினைத்து, வில்வ இலைகளால் இந்த அர்ச்சனையை செய்யும் வீட்டில் நிச்சயமாக வறுமை என்பதே இருக்காது. நீங்கள் கேட்கும் வரம், கேட்காத வரம் என்று செல்வ செழிப்பை அள்ளிக் கொடுக்கக்கூடிய எளிமையான வழிபாடுகளில் இதுவும் ஒன்று. இந்த பூஜையை செய்ய மிஞ்சிப் போனால் 15 நிமிடங்கள் கூட எடுக்காது. முந்தைய நாலே பூஜைக்கு தேவையான விஷயங்களை தயார் செய்து வைத்து விடுங்கள். வெறும் 27 முறை மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்தாலும் போதும். தொடர்ந்து இந்த பூஜையை 48 நாட்கள் செய்து விட்டு, பிறகு எப்போதெல்லாம் உங்களுக்கு நேரம் கிடைக்குதோ அப்போதெல்லாம் வீட்டில் செய்யலாம். தவறு ஒன்றும் கிடையாது. இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லக்கூடிய பரிகாரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -