இந்த சமையல் பொருட்களை இப்படி செய்தால் பழ ஈக்கள், கொசுக்கள், பல்லிகள், பூச்சிகள் தொந்தரவு உங்க வீட்டில் இனி இல்லை!

cockroach-house-fly-pepper
- Advertisement -

வீட்டை சுற்றிலும் பல்லி நடமாட்டம் இருந்தால் நமக்கு ஒரு மாதிரியான அருவருப்பாக இருக்கும். அதே போல கொசுக்கள், பூச்சிகள், பழ ஈக்கள் போன்ற தொந்தரவுகள் உங்கள் வீட்டில் அதிகம் காணப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது இது தான்! செயற்கை ரசாயனங்களை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை பயன்படுத்தி இப்படி செய்தால் ஒரு பூச்சி, பல்லி, ஈக்கள் கூட உங்கள் வீட்டை சுற்றாது. அதை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வீட்டில் ஈரப்பதம் இருந்தால் எறும்புகள், பூச்சிகள் தொந்தரவு அதிகமாக இருக்கும் எனவே வீட்டை முதலில் ஈரப்பதம் இல்லாமல் நல்ல காற்றோட்டமான, வெளிச்சம் தரும் படியான அமைப்புடன் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக சமையல் அறையில் இருக்கும் ஈரப்பதம் காய்கறிகள் மற்றும் பழங்கள் மீது ஈக்களை வந்து உட்கார செய்து விடும்.

- Advertisement -

சமையலறையில் பாதி வெட்டிய பழங்கள் அல்லது காய்கறிகளை எப்பொழுதும் நீண்ட நேரம் திறந்த நிலையில் வைத்திருக்கக் கூடாது. இப்படி செய்யும் பொழுது தான் இந்த பழ ஈக்கள் எனப்படும் குட்டி குட்டி ஈக்கள் மொய்க்க ஆரம்பிக்கும். அது போல வெட்டிய காய்கறிகள், பழங்களின் கழிவுகளை அவ்வப்போது சமையலறையில் இருந்து குப்பைக்கு அகற்றி விட வேண்டும். சமையல் அறையிலேயே அதை நீண்ட நேரம் போட்டு வைத்திருந்தால் அதிலிருந்து பூஞ்சைகள் உருவாக கூடும். இதனாலும் வீட்டில் பூச்சிகள் மற்றும் ஈக்களின் தொந்தரவு அதிகமாகும்.

திறந்த நிலையில் இருக்கும் சிங்க் அல்லது தண்ணீர் செல்லும் குழாய்கள் போன்றவற்றின் மூலமும் பூச்சிகளின் தொந்தரவு அதிகரிக்க கூடும் எனவே வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு ஒரு எளிய ஸ்ப்ரே ஒன்றை சமையல் பொருட்களை வைத்தே தயாரித்து வைத்துக் கொண்டால் அவ்வபோது தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரில் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்த்து நைஸ் ஆக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது மிளகு தூள் உங்களிடம் இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு மீடியம் சைஸ் ஸ்பிரே பாட்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அரைத்த இந்த மிளகு தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு பெரிய வெங்காயம், ஒரு முழு பூண்டை தோல் உரித்து சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைபட கொஞ்சமாக தண்ணீர் சேருங்கள் போதும், பிறகு அதை ஒரு துணியில் கட்டி பிழுந்தால் சாறு எடுத்து விடலாம். இந்த சாறையும் இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் ஸ்ப்ரே பாட்டிலை ஒருமுறை குலுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை பழ ஈக்கள் வந்து உட்காரும் இடங்கள், பல்லிகள் இருக்கும் இடங்கள், சிங்கில் இருக்கும் துளைகள் மற்றும் சிங்கிற்கு கீழ்பகுதியில் லேசாக இரவு நேரத்தில் ஸ்பிரே செய்து விட்டால் போதும், இதன் நாற்றத்திற்கு ஒரு பூச்சியும் உங்கள் வீட்டில் தங்காது. மேலும் ஈக்கள் தொந்தரவும் இருக்காது. கொசுக்கள், பல்லிகளும் வராது.

- Advertisement -