பக்காவா பளபளன்னு முடி வளர பாதாம் ஆயில் வீட்டிலேயே ரொம்ப ரொம்ப ஈஸியா தயார் செய்வது எப்படி? அடிக்கிற வெயிலில் கூட உங்க முடி டிரை ஆகாது.

hair12
- Advertisement -

பொதுவாகவே பாதாம் ஆயில் என்றால் அதை கடையில் நிறைய காசு கொடுத்து வாங்குவோம். ஆனால் நம்முடைய வீட்டிலேயே தேங்காய் எண்ணெயோடு, பாதாமை சேர்த்து, எப்படி பாதாம் ஆயில் தயாரிப்பது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமாக குறைந்த செலவில், முடிக்குத் தேவையான ஊட்டச் சத்தைக் கொடுக்கும் இந்த பாதாம் ஆயில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் இந்த ரெமிடியை தெரிந்து கொள்வோம்.

முதலில் 1 கப் அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். 1/4 கப் அளவு பாதாம் பருப்பு தேவை. தேங்காய் எண்ணெய் – 250ml, பாதாம் பருப்பு – 50 கிராம், எடுத்துக் கொண்டாலும் போதுமானது.

- Advertisement -

பாதாம்பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் பாதாம் பருப்பை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, இந்த எண்ணெயை 7 லிருந்து 10 நிமிடங்கள் சிம்மில் காய வைக்க வேண்டும்.

எண்ணெயின் நிறம் லேசாக மாறிவரும். பாதாம்பருப்பு மெருன் கலர் மாறத் தொடங்கும். பாதாம்பருப்பை ரொம்பவும் கருக விட்டுவிட வேண்டாம். ஓரளவுக்கு பாதாமின் நிறம் மாறி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எண்ணெயை நன்றாக ஆற வைத்து விட்டு ஒரு பில்டரில் வடிகட்டி எண்ணெயை கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

நமக்கு தேவையான பாதாம் ஆயில் தயாராகிவிட்டது. இந்த எண்ணெயை உங்களுடைய ஸ்கால்ப்பில் மயிர்கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். முடியை ஒவ்வொரு பாகமாக பிரித்து ஒரு பஞ்சில் எண்ணெயை தொட்டு மயிர் கால்களில் படும்படி வைப்பது மிகவும் நல்லது. எண்ணெயை நன்றாக தலையில் வைத்து விட்டு 2 நிமிடம் உங்களுடைய கையை வைத்து மசாஜ் செய்யுங்கள். ரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு முடி வளர்ச்சி தூண்ட ஆயில் மசாஜ் உதவிபுரியும்.

தினமும் கூட இந்த எண்ணெயை தலையில் வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். தினமும் உங்களால் தலைக்கு எண்ணெய் வைக்க முடியாது என்றால் தலைக்கு குளிப்பதற்கு முந்தைய நாள் இரவு இந்த எண்ணெயை தலையில் வைத்து விட்டு தூங்கச் செல்லுங்கள். மறுநாள் காலை தலைக்கு குளித்து விடுங்கள். ட்ரையா இருக்கக்கூடிய ஹேர் கூட எப்போதுமே ஷைனிங்காக இருக்கும். மயிர்கால்கள் இரண்டு மடங்கு வலிமை பெறும். முடி சீக்கிரத்தில் அறு படாமலும் இருக்கும்.

குறிப்பாக இப்போது வெயில் காலம் என்பதால் வெயிலினால் முடி உதிர்வு நிறைய பேருக்கு அதிகமாக இருக்கும். அதை தடுப்பதற்கு இந்த எண்ணெய் நமக்கு உதவியாக இருக்கும். உங்களுக்கு இந்த சுலபமான சிறிய குறிப்பு பிடித்திருந்தால் உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க. முடி வளர்ப்பதில் மூன்றே மாதத்தில் நல்ல வித்தியாசத்தை பார்க்க முடியும்.

- Advertisement -