முகத்தை வெண்மையாக்கும் ஃபேஸ் க்ரீம்

potato face cream
- Advertisement -

முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று தான் ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அந்த முகத்தை பளிச்சென்று வைப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்கிறோமா என்று கேட்டால் பலரும் மேற்கொள்கிறார்கள் தான். ஆனால் அது இயற்கையான முறையில் அல்லாமல் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்கிறார்கள். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை மறந்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் மட்டும் முகம் வெண்மையாக இருந்தால் போதும் என்ற எண்ணம் வருகிறதே தவிர்த்து பிற்காலத்தில் இதன் பக்க விளைவால் என்ன ஏற்படும் என்பதை யாரும் யோசிப்பது கிடையாது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முகத்தை வெண்மையாக்கவும் கரும்புள்ளிகளை மறைய வைக்கவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான ஃபேஸ் க்ரீமை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பல பொருட்கள் நம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளையும் நம் முகத்தின் நிறத்தை மேன்மைப்படுத்தக்கூடிய ஆற்றலும் கொண்டதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பொருட்களை நாம் தேடி கண்டுபிடித்து அதற்கேற்றார் போல் நாம் பயன்படுத்தினோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய முகத்தின் நிறத்தை நம்மால் அதிகரித்துக் கொள்ள முடியும். இதோடு மட்டுமல்லாமல் இதில் இருக்கக்கூடிய பண்புகளால் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளும் பருக்களும் நீங்குவதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது.

- Advertisement -

இந்த க்ரீமை தயார் செய்வதற்கு நமக்கு மூன்றே மூன்று பொருட்கள் இருந்தால் போதும். அந்த பொருட்கள் என்ன என்றும் அதை எப்படி தயார் செய்வது என்றும் பார்ப்போம். முதலில் ஒரு நடுத்தரமான உருளைக்கிழங்கை எடுத்து சுத்தம் செய்து நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கி உருளைக்கிழங்கை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை தனியாக எடுத்து வேகவைத்த உருளைக்கிழங்குடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளையும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் வேகவைக்கும் போது உபயோகப்படுத்திய தண்ணீரில் இருந்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு மட்டும் உருளைக்கிழங்குடன் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் ஃபேஸ் கிரீம் தயாராகிவிட்டது.

- Advertisement -

இதில் இருக்கக்கூடிய உருளைக்கிழங்கு, எலுமிச்சை பழச்சாறு, கஸ்தூரி மஞ்சள் இவை மூன்றுமே நம்முடைய முகத்தின் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. எலுமிச்சம் பழமும், கஸ்தூரி மஞ்சளும் பருக்கள் ஏற்படாமலும் வேறு சரும பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்க உதவுகிறது. இந்த ஃபேஸ் க்ரீமை ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பாக முகத்தை சுத்தம் செய்துவிட்டு இந்த ஃபேஸ் க்ரீமை எடுத்து முகத்தில் தடவி இரண்டிலிருந்து மூன்று நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த கிரீம் நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை நன்றாக கழுவிட்டு படுத்து உறங்க வேண்டும். தினமும் இதே முறையில் இந்த ஃபேஸ் க்ரீமை பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய முகநிறத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த ஃபேஸ் க்ரீமை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கரும்புள்ளிகள் அற்ற அழகான முகத்தை பெற உதவும் வெந்தயம்

மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களையும் பயன்படுத்தி ஃபேஸ் க்ரீம் தயார் செய்து நம்முடைய முகத்தை இயற்கையிலேயே வெண்மையாகவும், அழகாகவும், பொலிவாகவும் மாற்றலாம்.

- Advertisement -