மரண பயத்தில் இருந்து விடுபட செய்யும் காமிக ஏகாதசி விரதம்.

ekadhasi-pujai
- Advertisement -

ஆடி மாதம் தேய்பிறை கிருஷ்ண பக்ஷம் நாள் வரும் ஏகாதசி காமிக ஏகாதசி என்று அழைக்கப்படும். இந்த நாள் பற்றிய சுவையான தகவல் ஒன்று உண்டு. இந்த தகவலை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தர்மபுத்திரருக்கு கூறியதாகவும், நாரதருக்கு பிரம்மா விளக்கம் அளித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

நிலச்சுவான்தார் ஒருவர் இருந்தார். அவரிடம் நிலம் நிறையவே இருந்தது. ஆனால் அவர் முன்கோபக்காரர். எதையும் யோசிக்காமல் செய்யக்கூடியவர். ஒரு நாள் அவர் ஒரு ஏழை அந்தணரிடம் பேசிக்கொண்டிருந்தார். சாதாரண பேச்சு திடீரென்று வாக்கு வாதமாக மாறிவிட்டது. கைகலப்பில் முடிந்தது. எதேச்சையாக அவரை நிலச்சுவான்தார் தள்ளிவிட, அவர்கீழே விழுந்தார். அந்த அந்தணரின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்தது. நிலச்சுவான்தாரை ப்ருஹ்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. அவர் தன் தவறை உணர்ந்தார். பிறகு உணர்ந்து என்ன பயன்? கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

- Advertisement -

தன்னுடைய தவற்றுக்கு ப்ராயச்சித்தமாக அந்த அந்தணரின் உடலுக்கு தானே பெரும் பொருட்செலவு செய்து தகனம் செய்ய முற்படலானார். ஆனால், அக்கிராமவாசிகள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவறை தூற்ற ஆரம்பித்தனர். அவருடைய இல்லாளும் அவரை ஒதுக்கினார். பிறகு நிலச்சுவான்தார், சொத்து சுகங்களையும், இல்லறத்தையும் துறந்து கானகம் சென்றார். அங்கு ஒரு துறவியை அவர் சந்திக்க நேரிட்டது. அவரிடம் நிலச்சுவான்தார் தன் தவறை எடுத்துறைத்தார். அதை செவிமடுக்க கேட்ட துறவி, நிலச்சுவான்தாரை காமிக ஏகாதசி விரதம் இருக்க அறிவுரை கூறினார். திருமாலை உபாசனை செய்யவேண்டும் என்றும், இவ்விரதத்திற்கு ஈடு இணையில்லை என்றும் அவருக்கு புலனானது. நிறைய காலம் ஏகாதசி விரதத்திற்கு பிறகு, அவருடைய கனவில் திருமால் வந்து அவரை ஆட்டிப்படைத்த ப்ரும்மஹத்தி தோஷம் நீங்கிவிட்டதாக தெரிவித்தார்.

முறையாகவும், ஆத்மார்த்தமாகவும் காமிக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அனைத்து துன்பங்களிலிருந்தும், பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள். பசு கன்று தானம் செய்த பலன் . குருக்ஷேத்ராவில் கிரஹணம் போது ஸ்னானம் செய்த பலன் . அஸ்வமேத யாகம் செய்த பலன் காசியில் கங்கையில் ஸ்னாநம் செய்த பலன். பத்ரி கேதார யாத்திரை சென்ற பலன் . பூதானம் செய்த பலன் கிடைக்கும் . இந்த ஏகாதசி மிகச்சிறப்பு வாய்ந்தது இதைச் செய்ய யம பயம் அல்லது மரண பயம் ஏற்படாது . திரும்ப பிறவியும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இது மிகச்சிறந்த ஒன்று . பித்ரு தோஷங்கள் நீங்கும். நிலையான அமைதியான வாழ்வுக்கும், நோய் நொடிகள் இல்லாத பேரானந்த வாழ்க்கைக்கு ஏகாதசி விரதம் அனுஷ்டித்தல் இன்றியமையாதது. ஏதேனும் ஒரு காரணத்தால் சம்பூர்ணமாக விரதம் இருக்க முடியாதவர்கள், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்து பகவன் நாமாக்களை அவசியம் ஸ்மரணம் செய்யவேண்டும்.

- Advertisement -