எதிரி தொல்லை நீங்க வெள்ளி மோதிர பரிகாரம்

fight silver ring
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் தினம் தினம் நம்முடைய வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருப்தே பெரும் பிரச்சனையாக உள்ளது. இப்படியான சூழ்நிலையில் நம்மை சுற்றி இருப்பவர்கள் முதல் நம் பணியிடத்தில் உடன் பணி புரிபவர்கள் வரை அனைவரிடமும் ஏதேனும் ஒரு மன கசப்பு தோன்றி கொண்டே இருக்கிறது.

இது மனித இயல்பு தான் ஒருவர் நன்றாக இருந்தால் அதை பொறுத்துக் கொள்ளும் மனநிலை இன்று பலருக்கும் கிடையாது. அதனால் எப்போதும் ஒருவித எரிச்சல் பார்வைகள், சண்டை சச்சரவுகள், மனக்கசப்புகள் போன்றவை எழுந்த வண்ணம் உள்ளது. இது போன்ற பிரச்சனைகள் வீட்டின் அருகில் உள்ளவர்களுடன் தோன்றலாம் அல்லது பணியிடம் சொந்தங்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

- Advertisement -

இதை எல்லாம் நாம் சமாளித்து தான் ஆக வேண்டும். இதற்கெல்லாம் தீர்வே இல்லையா என்றால் அதற்கும் தீர்வு உள்ளது. இப்படி எந்நேரமும் நம் மீது பகை உணர்வுடன் இருப்பவர்கள் கூட பாசமாய் மாறக் கூடிய ஒரு எளிய பரிகார முறை உள்ளது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

பகைவர்களும் நண்பர்களாய் மாற பரிகாரம்

இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இந்த பரிகாரத்திற்கு ஒரு வெள்ளி மோதிரம் மட்டும் வேண்டும். இந்த மோதிரத்தில் கல், முத்து, பவளம் என எந்த விதமான பொருளும் பதித்திருக்கக் கூடாது. அப்படியான ஒரு மோதிரத்தை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை காலை தூங்கி எழுந்தவுடன் செய்ய வேண்டும். இதற்கு குளித்து முடித்த பிறகு தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பல் துலக்கி கை கால் முகம் அலம்பி விட்டு கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முதலில் பாலை காய்ச்ச வேண்டும். அந்த பாலை ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் நீங்கள் கொள்ளுங்கள்.

இந்தப் பாலில் இனிப்பிற்கு சர்க்கரை நாட்டு , சர்க்கரை, தேன் என எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் வெள்ளி மோதிரத்தை அதில் போடுங்கள். ஒரு வேளை உங்களிடம் ஏற்கனவே இது போன்ற வெள்ளி மோதிரம் இருந்தால் அதையும் பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம்.

- Advertisement -

பாலில் மோதிரத்தை போட்ட பிறகு ஐந்து நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு அந்த பாலை குடித்து விட்டு மோதிரத்தை சுத்தம் செய்து விரலில் அணிந்து கொள்ளுங்கள். இது போல தொடர்ந்து 12 நாட்கள் வரை செய்ய வேண்டும். இந்த பாலை குடிப்பதற்கு முன்பு தண்ணீர் கூட அருந்தக் கூடாது.

காலையில் முதன் முதலில் நீங்கள் அருந்துவது வெள்ளி மோதிரம் போட்ட இந்த பாலாக தான் இருக்க வேண்டும். இப்படி பன்னிரண்டு நாட்கள் செய்து முடிக்கும் போது உங்களுக்கு நல்ல மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. உங்களை எப்போதும் பகை உணர்வுடன் பார்த்தவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் மனநிலை கட்டாயமாக மாறி உங்களிடம் அன்பாய் பழகுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தீய சக்தி விலக வியாழக்கிழமை குருஹோரை பரிகாரம்

இந்த பரிகார முறை கேட்பதற்கு எளிமையாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும். ஆனால் நடைமுறைகள் நல்ல பலனை தரக்கூடியது என்று நம்பப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்து பலனை அடையலாம்.

- Advertisement -