மிகப் பெரிய முனிவரான விசுவாமித்திரர் ஆரம்பகாலத்தில் அரசனாகவே வாழ்ந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் முனிவராக மாறினார். அவர் இப்படி மாறியதற்கு பின் ஒரு வியப்பூட்டும் வரலாறு ஒளிந்துள்ளது. அதை ஒரு கதை போல விவரித்துள்ளார் வியாசர். இதோ அந்த கதை.
காதி என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு ஆண் குழந்தை ஏதும் இல்லை. ஆனால் ஒரு அழகிய மகள் இருந்தால். அவள் பெயர் சத்யவதி. காலங்கள் உருண்டோடின, சத்யவதி திருமண வயதை அடைந்தாள். நர்குணங்களையும் அழகையும் ஒருங்கே பெற்ற அவளை நல்ல வசதியான ஒரு இடத்தில் மணம் முடித்து தரவேண்டும் என்று விரும்பினான் காதி. அதற்கான வேலைகளிலும் அவன் தீவிரமாக இறங்கினான். அந்த சமயம் அரசனை தேடி ஒரு முனிவர் வந்தார். அவர் பெயர் ரிசீகர்.
அரண்மனைக்கு வந்த ரிசீகர் சத்யவதியின் அழகையும் நர்குணங்களையும் கண்டு வியந்தார். அவளை மனம் முடிக்கவேண்டும் என்று விரும்பினார். தன்னுடைய ஆசையை அவர் அரசனிடம் தெரிவித்தார். இதை கேட்ட அரசனுக்கு என்னசொல்வதென்றே தெரியவில்லை. முடியாது என்று சொன்னால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்பது அவனுக்கு நன்கு தெரியும். ஆனாலும் முனிவரை எப்படியாது தட்டி கழிக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.
ஒரு நாள் முனிவரை அழைத்து, ஐயா எனக்கு உங்களிடம் சிறிய வேண்டுகோள் ஒன்று உள்ளது. அதை நீங்கள் நிறைவேற்றினால் என் மகளை உங்களுக்கு மணம்முடித்து தருகிறேன் என்றான் அரசன். அது என்ன வேண்டுகோள் என்றார் முனிவர். ஒரு காது கருப்பாகவும் உடல் முழுவதும் வெள்ளையாகவும் உள்ள 1000 குதிரைகளை நீங்கள் எனக்கு தரவேண்டும் என்றான். அரசனின் வேண்டுகோளை ஏற்று குதிரைகளோடு வருவதாகக் கூறி சென்றார் முனிவர். இது போன்ற 1000 குதிரைகளை முனிவர் எங்கு தேடி கண்டுபிடிப்பார். அவரால் அதை தரவே முடியாது. ஆகையால் அவர் சத்தியவதியை மணக்கும் விருப்பத்தை விட்டுவிடுவார் என்று நினைத்தான் அரசன்.
ஒருநாள் சத்யவதி தன் தாய் வீட்டிற்கு சென்றாள். அங்கு தாயும் மகளும் அனைத்து விஷயங்களை பற்றியும் பேசினர். அப்போது சத்யவதி, தன் கணவர் தனக்களித்த வரம் குறித்து தன் தாயிடம் தெரிவித்தாள். என்ன வரம் கேட்க போகிறாய் என்றாள் அவள் தாய். எனக்கான ஆசைகள் இருக்கட்டும், உங்களுக்கு ஏதாவது ஆசை இருந்தால் கூறுங்கள் அம்மா நான் அதை என் கணவரிடம் கேட்கிறேன் என்றாள் சத்யவதி. உடனே அந்த தாய் வெட்கத்தோடு தனக்கொரு ஆண் மகம் பிறந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாள். சில மணி நேரங்களுக்கு பிறகு சத்யவதி தன் தாய் வீட்டில் இருந்து புறப்பட்டு தன் இல்லத்தை அடைந்தாள்.
சில நாட்களில் சத்யவதியும் அவள் தாயும் கர்பம் அடைந்தனர். சத்யவதியின் உருவ மாற்றத்தை கவனித்த முனிவர், பிரசாதம் உண்பதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்பதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். பெரும் தவறு செய்துவிட்டாயே சத்தியவதி, நான் ஒரு அந்தணன் என்பதால் உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாக இருக்கவேண்டும் என்றும், உன் தந்தை சத்ரியன் என்பதால் உன் தாய்க்கு பிறகும் குழந்தை சத்ரியனாக இருக்கவேண்டும் என்றல்லவா நான் பிரசாதம் அளித்தேன்.
இதையும் படிக்கலாமே:
கூலிக்காரன் குபேரனான சம்பவம் – ஒரு குட்டி கதை
மனம் மாறிய முனிவர், ஒரே ஒரு வழி இருக்கிறது. உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாக பிறப்பான். ஆனால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை சத்ரியனாக பிறந்தாலும் சில காலத்திற்கு பிறகு அவன் அந்தணன் போல மாறிவிடுவான் என்று கூறி அதற்கான வரத்தையும் அளித்தார். அதன்படி சத்யவதிக்கு பிறந்த குழந்தையே பிற்காலத்தில் ஜமதக்னி முனிவர் என்றழைக்கப்பட்டார். அவளின் தாய்க்கு பிறந்த குழந்தை தான், அரசனாக இருந்து பின் முனிவராக மாறிய விசுவாமித்திரர் ஆவார்.