எப்போதும் இளமையாக இருக்க அஞ்சரை பெட்டியில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதும். வயதான தோற்றத்தை தூக்கி தூரப் போட்டு விடலாம்.

sombu
- Advertisement -

வயது என்பது ஒரு நம்பர் தான். ‘அச்சச்சோ நமக்கு வயதாகிவிட்டது’ என்ற எண்ணத்தை மனதில் நினைக்காமல் இருந்தாலே போதும். நாம் என்றென்றும் இளமையாக இருக்கலாம். சந்தோஷமான மன நிலமையும், சுறுசுறுப்பாக வேலை செய்யும் திறனும் எவரிடத்தில் இருக்கின்றதோ, அவர்களுக்கு வயதான தோற்றம் சீக்கிரத்தில் வரவே வராது. அடுத்தவருடம் எனக்கு வயது 30, அடுத்த சில வருடத்தில் 35 வயதை தொட்டு விடுவோம். நமக்கு வயதாகி விடும் என்று மட்டும் யோசிச்சு கூட பாக்காதீங்க. இளமை உங்களுடனே இருக்கும். முதுமை பயந்து ஓடி விடும். என்னதான் நம்முடைய சருமத்தை அழகு படுத்திக்கொள்ள, முகத்திற்கு மேலே ஃபேஸ் பேக், க்ரீம், ஜெல் இப்படி நிறைய விஷயங்களை பயன்படுத்தி வந்தாலும், நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு சில விஷயங்களை நாம் உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சமையலறையில் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து இளமையை நீண்ட நாட்களுக்கு தக்க வைக்கக் கூடிய, ஒரு ட்ரிங்க் எப்படி தயாரிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நம்முடைய சமையலறையில் இருக்கும் சோம்பு, கிராம்பு, ஏலக்காய் இந்த மூன்று பொருட்களை வைத்து தான் இந்த ரெமிடி கொடுக்கப்பட்டுள்ளது. முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்க, முகப்பரு வராமல் தடுக்க, முகத்தை பளபளப்பாக மாற்ற, தேவையான சத்துக்கள் இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ளது. பெரும்பாலும் இதை அடிக்கடி நாம் சமையலில் சேர்த்துக் கொள்வது வழக்கம் தான். இருப்பினும் இதை வைத்து கஷாயம் தயார் செய்து குடித்து வந்தால் அதன் மூலம் நமக்கு ஒரு சில நாட்களிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீர் கொதித்து வரும்போது அதில் சோம்பு – 1/2 ஸ்பூன், கிராம்பு – 2, ஏலக்காய் – 2 தட்டி அந்த தண்ணீரில் போட்டு, நன்றாக கொதிக்க வையுங்கள். பத்து நிமிடம் போல தண்ணீர் நன்றாக கொதித்ததும் இந்த மூன்று பொருட்களில் இருக்கும் எசன்ஸ் அந்த தண்ணீரில் இறங்கியதும் அடுப்பை அணைத்து, விட்டு வடிகட்டி கொள்ளுங்கள்.

- Advertisement -

அவ்வளவு தான். நம்முடைய வயதான தோற்றத்தைத் தள்ளிப் போடப் போகும் டிரிக் தயார். இது வெதுவெதுப்பாக இருக்கும்போது குடித்துவிடுங்கள். தினம்தோறும் இதை குடித்து வர வேண்டும். காலை உணவிற்கு பிறகு 1 மணி நேரம் விட்டு இந்த தண்ணீரைக் குடித்தாலும் சரிதான். முடியாதவர்கள் மாலை நேரத்திலும் குடிக்கலாம். தினமும் பிரஷ்ஷாக தயாரித்து தான் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். காய்ச்சிய தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்து எல்லாம் பருகக் கூடாது. அது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.

இந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால், 30 நாட்களுக்குள் உங்களுடைய சருமத்தில் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. ஒருவேளை உங்களுடைய ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், நீங்கள் ஏதாவது மருந்து மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் ஆக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஒரு ஆலோசனையை பெற்றுக்கொண்ட அதன் பின்பு இந்த தண்ணீர் பருகுவது நல்லது.

- Advertisement -