நீங்கள் இழந்த பணம், சொத்து, நகை, பெயர், புகழ், தொழில் இவை அனைத்தையும் திரும்பப் பெற செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டு வாருங்கள்

nellikai-deepam
- Advertisement -

அதிர்ஷ்டம் இருந்தால் ஆண்டியும் அரசனாவான். அதிர்ஷ்டம் இல்லை என்றால் அரசனும் ஆண்டியாவான். இந்தப் பழமொழிகள் அனைத்தும் வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. வழக்கத்தில் பலரும் தங்கள் வாழ்க்கையில் எப்படி தோல்விகளையும், வெற்றிகளையும் சந்தித்தார்கள் என்பதை பொறுத்து தான் இந்தப் பழமொழி உருவாகியுள்ளது. அவ்வாறு நன்றாக இருந்த குடும்பம் திடீரென இருந்த இடம் தெரியாமல் போய்விடும். குடும்பத்தில் பல பிரச்சினைகள், பண இழப்புகள், தொழிலில் நஷ்டம் இதுபோன்ற பிரச்சனைகளால் அந்த குடும்பம் தங்கள் சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஒருவர் தான் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறுவதற்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு வீட்டிலும் செல்வ கடாட்சம் நிறைந்திருக்க மகாலட்சுமி தேவி நிரந்தரமாக நமது இல்லங்களில் வாசம் செய்ய வேண்டும். எந்த இடத்தில் லட்சுமி கடாட்சம் இருக்கிறதோ அங்கு செல்வச் செழிப்பிற்கு குறைவிருக்காது. அந்த வீட்டில் எப்படி பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதே தெரியாது. அவ்வாறு நீங்கள் தொட்டது அனைத்தும் வெற்றியில் தான் முடியும். உங்கள் தொழில் சிறந்து நடைபெறும். உங்கள் இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

- Advertisement -

இவ்வாறு லட்சுமிதேவி ஒருவர் மட்டும் நமது வீட்டிற்குள் நுழைந்து விட்டால் நாம் நினைக்கும் அனைத்தும் நடந்துவிடும். அதற்காக எப்பொழுதும் உங்கள் இல்லம் சுபிட்சமாக இருக்க வேண்டும். வாரம் தோறும் தவறாமல் பூஜை செய்ய வேண்டும். தினமும் காலை மற்றும் மாலை வேளையில் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். உங்கள் வீடு மற்றும் பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பின்னர் தவறாமல் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் உங்கள் வீட்டின் பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றுவதுடன், இந்த நெல்லி தீபத்தையும் ஏற்ற வேண்டும். நெல்லிக்காய் மகாலட்சுமி வாசம் செய்யும் ஒரு பொருளாகும். இந்த நெல்லிகாய் எப்பொழுதும் நமது வீட்டில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். நெல்லிக்காய் ஊறுகாய் அல்லது நெல்லிக்காய் வற்றல் அல்லது நெல்லிக்காய் இவற்றில் ஏதாவது ஒன்று உங்களது இல்லங்களில் இருக்க வேண்டும்.

- Advertisement -

இழந்த சொத்து, பெயர், புகழ் இவற்றைத் திரும்பப் பெற இரண்டு நெல்லிக்காய்களை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் அவற்றை சுத்தமாக கழுவிக் கொண்டு, அவற்றின் மேற்புரத்தை சமமாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் அதில் ஒரு கத்தியை வைத்து சிறிய குழி போன்று செய்ய வேண்டும். பின்னர் அந்த நெல்லிக்காய்க்கு மஞ்சள், குங்கும பொட்டு வைக்க வேண்டும்.

பிறகு அவற்றை பூஜை அறையின் முன் ஒரு தாம்புல தட்டில் வைத்துவிட்டு, அந்த இரு நெல்லிக்காய்களிலும் சிறிதளவு நெய் ஊற்ற வேண்டும். பிறகு திரி போட்டு தீபம் ஏற்றி, கண்களை மூடி மகாலட்சுமி தேவியை மனதார வேண்டி வழிபட வேண்டும். நான் இழந்த அனைத்தும் திரும்பப் பெற வேண்டும். எனது குடும்பம் தழைத்தோங்க வேண்டும். இவ்வாறு மனமுருக தேவியை வழிபட, உங்கள் சொத்துக்கள் விரைவாக உங்களிடம் திரும்பி வரும்.

- Advertisement -