இல்லாமல் போன இளமையைக் கூட 2 நாட்களில் மீட்டெடுக்க இந்த ஜெல் போதும். ஆன்ட்டி ஏஜிங் மேஜிக் கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?

face
- Advertisement -

உங்களுடைய இளமையை நீண்ட நாட்களுக்கு தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கிறதா. உங்களுக்கான பதிவு தான் இது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருக்க, கருமை நிறம் நீங்க, கருந்திட்டுக்கள் நீங்கவும், இந்த குறிப்பை பின்பற்றலாம். உங்களுக்கு வயது 30 தான் ஆகிறது. ஆனால் 40 வயதை கடந்த தோற்றம் இருக்கிறதா. இந்த குறிப்பை பின்பற்ற தொடங்கிய ஒரே வாரத்தில் நீங்கள் வித்தியாசத்தை பார்க்கலாம். அழகின் மேல் அதிக ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பை முழுமையாக படித்து பலன் பெறுங்கள்

முதல்ல ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கோங்க. அதில் 2 ஸ்பூன் காபித்தூள் போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, நன்றாக கட்டிகள் இல்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் போல இதை கொதிக்க வைத்து, அடுப்பை அணைத்து விடுங்கள். இதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி தனியாக டிக்காஷனை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த டிகாஷன் தண்ணீரோடன் 2 ஸ்பூன் கான்பிளவர் மாவு சேர்த்து, கட்டிகள் இல்லாமல் கரைத்து மீண்டும் இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். இது நமக்கு திக்காக ஒரு கிரீம் பக்குவத்திற்கு வரும்போது, அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த க்ரீம் நன்றாக ஆறிய பின்பு, இதில் 2 ஸ்பூன் ஆலுவேரா ஜெல்லை சேர்த்து கலந்தால் சூப்பரான ஆன்ட்டி ஏஜிங் கிரீம் நமக்கு தயாராகி இருக்கும்.

இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்தால் 7 நாட்கள் கெட்டுப் போகாது. தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தை சுத்தமாக கழுவி துடைத்துக் கொள்ளுங்கள். இந்த கிரீமை தொட்டு முகம் கழுத்து பகுதிகளில் நன்றாக தடவி ஒரு நிமிடம் போல மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். அதன் பின்பு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவி விடுங்கள். ஏழு நாட்கள் தொடர்ந்து இதை பின்பற்றும்போது முகத்தில் ஒரு வித்தியாசம் உங்களுக்கு தெரியும். அதாவது முகத்தில் இருக்கும் சுருக்கம் மறைந்து, ரிங்கில்ஸ் குறைந்து இளமையான தோற்றம் திரும்புவதை கண்ணாடியில் நிச்சயமாக நீங்க பாப்பீங்க.

- Advertisement -

அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான க்ரீம் தான் இது. உங்களுடைய கண்களுக்கு கீழே நிறைய கருவளையம் இருந்தாலும் வாயை சுற்றி கருவளையம், கழுத்து பகுதியில் அடர் கருப்பு இருந்தாலும் அந்த இடத்தில் கொஞ்சம் கான்சன்ட்ரேட் பண்ணி கிரீமை அப்ளை செய்து மசாஜ் செய்யும் போது அந்த இடங்களில் இருக்கக்கூடிய கருப்பு நிறமும் படிப்படியாக குறைவதை உணருவீர்கள்.

முகத்திற்கு மட்டுமல்ல உடம்பு முழுவதும் அதாவது கை, கால் பகுதிகளில் கூட இந்த கிரீமை நீங்கள் பயன்படுத்தலாம். கையில் இருக்கும் சுருக்கம் கால்களில் இருக்கும் சுருக்கம் கூட கூடிய சீக்கிரம் மறைந்துவிடும். தினமும் இந்த குறிப்பை பின்பற்றலாம். தவறு கிடையாது.

இந்த குறிப்போடு சேர்த்து வாரத்தில் ஒரு நாள் காபி பவுடரை வைத்து, ஸ்கிரப் செய்ய வேண்டும். ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் காபி பவுடர், 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி, நன்றாக கலந்து இதை முகம் கழுத்து கை கால்களில் நன்றாக ஸ்கிராப் செய்யுங்கள். நன்றாக ஸ்கிரப் செய்ய வேண்டும் என்றால் அழுத்தம் கொடுத்து தேய்க்க கூடாது. ஜென்டில் ஆக மசாஜ் செய்து ஸ்கரப் செய்து, அதன் பின்பு கழுவி விட வேண்டும். உங்கள் உடம்பில் முகத்தில் தங்கி இருக்கும் டெட் செல்சை நீக்க இந்த ஸ்க்ரப்பர் நன்றாக வேலை செய்யும். இந்த குறிப்புக்கு எந்த பிராண்ட் இன்ஸ்டன்ட் காப்பி தூளை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு மேல் சொன்ன குறிப்பு படிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய அழகு ஆபத்து இல்லாமல் மேலும் அழகாக மாறும்.

- Advertisement -