Indian Air Force : விமானப்படை தாக்குதலை அடுத்து விண்ணில் பாய்ந்து அழிக்கும் ஏவுகணையை தாயார் செய்த இந்தியா – வீடியோ

Rocket
- Advertisement -

இந்தியா நேற்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி அவர்களை தாக்கியது. இந்த தாக்குதலில் பால்கோட் பகுதி முழுவதும் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. மேலும், இந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Pulwama

இதன் முன்னெச்சரிக்கையாக இந்தியா இரண்டு ஏவுகணைகளை விண்ணில் பாய்ச்சி அதிரடி சோதனை செய்துள்ளது. தற்செயலாக கூட பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் பறக்க நினைத்தால் இந்த ஏவுகணையை கொண்டு அதனை எளிதாக தகர்க்கவே இந்த சோதனை பயிற்சியினை செய்தது. அதில் 2 ஏவுகணைகளை சோதனையிட்டு வெற்றியும் கண்டுள்ளது.

- Advertisement -

நேற்று நடத்தப்பட்ட இந்த சோதனை ஏவுகணை தாக்குதலை பற்றிய வீடியோ தொகுப்பு உங்களுக்காக :

தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் இருப்பதால் முப்படை வீரர்களும் தயாராக உள்ளனர். இந்திய எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நம் ராணுவத்தின் பலம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பாகிஸ்தான் அரசு அச்சத்தில் உள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -