இந்த எண்ணெயை தலையில் தடவி ஆயில் பாத் எடுத்துக்கோங்க. உங்களுடைய வெள்ளை முடிகள் அனைத்தும் சட்டென கருப்பாக மாறும்.

hair2
- Advertisement -

வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இண்டிகோ பவுடர் பயன்படுத்துவோம். இண்டிகோ பவுடரை, அவுரி இலை பொடின்னு சொல்லுவாங்க. ஹேர் டை அடிப்பதற்காக இந்த பொடியை நாம் பயன்படுத்துவோம். இந்த அவுரி இலை பொடியை வழக்கமாக ஹென்னா பொடியோடு சேர்த்து, கலந்து ஹேர்பேக் போடுவார்கள். அது கொஞ்சம் சிரமமான விஷயம். அதற்கு கொஞ்சம் நேரமும் எடுக்கும். ஆனால் சட்டுனு ஆயில் பாத் எடுக்கும் நேரத்தில் உங்களுடைய நரைமுடியை வெள்ளையாக மாற்ற இந்த இண்டிகோ பவுடரை வைத்து ஒரு சுலபமான குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சாதாரணமாக நீங்கள் இண்டிகோ பவுடர் மற்றும் ஹென்னா பொடியை சேர்த்து கலந்து தலையில் டை போடலாம். தவறு கிடையாது. அது ஒரு தனி வேலை. அதை நீங்கள் வழக்கம் போல ஒரு நாள் செய்து கொள்ளலாம். வேறொரு நாள் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கூடவே இந்த ஆயில் பாத்தையும் ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய முடி இன்னும் இன்னும் சீக்கிரம் கருப்பாவதற்கு இந்த ஆயில் பாத் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்கள் முடிக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் இருக்கட்டும். அதில் 1 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் அவுரி இலை பொடிகளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். (ஒரு பங்கு நெல்லிக்காய் பொடி என்றால், 4 பங்கு அவுரி இலை பொடி.) இந்த பொடியை எண்ணெயில் போட்டதும் ஒரு பிரஷ் வைத்து வேக வேகமாக கலந்து விடுங்கள். அவுரி இலை பொடியை சீக்கிரமாக கலந்து சீக்கிரமாக தலையில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். எண்ணெயில் கலந்து நீண்ட நேரம் வைக்கக்கூடாது. தண்ணீரில் கலந்தாலும் அதை நீண்ட நேரம் ஊற வைக்க கூடாது.

நீங்கள் தயார் செய்த எண்ணெய் கருப்பு நிறமாக உங்களுக்கு கிடைத்திருக்கும். அதை உங்களுடைய தலைமுடியில் அப்படியே அப்ளை செய்ய வேண்டும். தலைமுடியை சிறிய சிறிய பாகங்களாக பிரித்து நன்றாக முடியின் எல்லா இடங்களிலும் படும்படி, குறிப்பாக வெள்ளை முடியில் இந்த ஆயில் படும்படி தடவி விட்டு ஒரு கொண்டை கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

20 இலிருந்து 30 நிமிடங்கள் இந்த ஆயில் உங்கள் தலையிலேயே நன்றாக ஊறட்டும். (45 நிமிடத்திற்கு மேல் இந்த ஹேர் ஆயிலை தலையில் விடக்கூடாது.) அதன் பின்பு ஜென்டில் ஆக மைல்டு ஷாம்பு போட்டு உங்களுடைய தலையை கசக்கிக் கொள்ளலாம். அவ்வளவு தான். இன்ஸ்டன்டாக உங்களுடைய வெள்ளை முடி கருப்பாக மாறி இருக்கும். ரூட்டில் நன்றாக இந்த எண்ணெய் ஊரும் போது உங்களுக்கு புதியதாக வளரக்கூடிய முடிகள் கூட கருப்பு முடியா வளருவதற்கு இந்த ஆயில் உதவி புரியும். ஆக கொஞ்சம் கான்சன்ட்ரேட் பண்ணி ஆயிலை தலையில் மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

வாரத்தில் ஒரு நாள் இப்படி ஆயில் பாத் எடுத்து வர உங்களுடைய முடி ஆரோக்கியமாகவும் வளரும். அதே சமயம் கருகருவென வளரும். இந்த ஆயிலை உங்களுடைய தலையில் அப்ளை செய்வதால் முடி உதிர்வு குறைவதற்கு கூட நிறைய வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு இந்த சிறிய குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -