இந்த தூபம் போட்டால், உங்கள் வீட்டில் இருக்கும் தெய்வ சக்தி மனம் மயங்கி, உங்கள் வீட்டிலேயே சந்தோஷமாக நிரந்தரமாக குடியிருக்கும். வேண்டிய வரங்களை வாரி வழங்கும்.

dhupam
- Advertisement -

சந்தோஷம் துக்கம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல தெய்வங்களுக்கும் உண்டு. வீட்டில் சண்டை சச்சரவு ஏற்பட்டால், பணக்கஷ்டம் வந்தால், வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், எப்படி மனிதப்பிறவி எடுத்திருக்கும் நமக்கு மன கஷ்டம் வருகிறதோ, அதே போல் தான் நம் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால், வீட்டில் தினமும் விளக்கு ஏற்றாமல் இருந்தால், பூஜை அறையை சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால், வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் சரிவர நடக்காமல் இருந்தாலும் நம் வீட்டில் தங்கி இருக்கும் இறைசக்திக்கு நிச்சயமாக மன கஷ்டம் வரத்தான் செய்யும்.

நம்முடனே இருந்து, நம் வீட்டில் தங்கி, நமக்குத் தேவையான நல்லதை செய்து கொடுக்கும் இறை சக்தியை வீட்டில் சந்தோஷமாக நிலைநிறுத்த வேண்டும் என்றால் நாம் எந்தெந்த விஷயங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவது, வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது, பூஜை அறையில் காலை மாலை இரண்டு நேரமும் குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி, வாசனை மிகுந்த ஊதுவத்தி ஏற்றி வைப்பது போன்ற அன்றாட வேலைகளில் எந்த ஒரு குறையும் வைக்கக் கூடாது.

- Advertisement -

கூடுமானவரை இந்த விஷயங்களை கடைப்பிடித்து வந்தாலே போதும் உங்களுடைய வீட்டில் இறைசக்தி நிரந்தரமாக நிம்மதியாக தங்கியிருக்கும். இதையும் தாண்டி நிறைய வீடுகளில் சொல்ல முடியாத பிரச்சனைகளும், சொல்ல முடியாத கஷ்டங்கள் இன்றளவும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் வருகிறது.

துன்பங்களும் துயரங்களும் அடுத்தடுத்து ஒரு குடும்பத்திற்கு வருகிறது என்றால், அந்த வீட்டில் வாழக்கூடிய தெய்வசக்திக்கு ஏதோ ஒரு மனக்குறை இருக்கிறது என்பதுதான் அர்த்தம். அந்த குறையை நிவர்த்தி செய்ய வீட்டில் இருக்கும் தெய்வ சக்தியை சந்தோஷப்படுத்த நாம் இதை மட்டும் நம் வீட்டில் செய்தாலே போதும்.

- Advertisement -

குங்குமப்பூ, மல்லிகைப்பூ, பன்னீர் ரோஜா, ஏலக்காய், அரகஜா, பச்சைக் கற்பூரம் இந்த எல்லா பொருட்களையும் வாங்கிக்கொள்ள வேண்டும். இந்தப் பொருட்கள் எல்லாம் நமக்கு தூபம் போட பொடியாக தேவை. அப்போது இதில் இருக்கும் மலர்களை மட்டும் நன்றாக உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி இல்லை என்றால் சில நாட்டுமருந்துக் கடைகளில் காய்ந்த மலர்களே நமக்கு கிடைக்கின்றன. அதை வாங்கியும் இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலே சொன்ன பொருட்கள் எல்லாவற்றையும் காயவைத்து வீட்டிலேயே மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் வீட்டில் இந்த பொடியை வைத்து சாம்பிராணி தூபம் போட வேண்டும். எப்போதும்போல நெருப்பு மூட்டி வாசம் மிகுந்த சாம்பிராணி பொடியை முதலில் போட்டு, அதன் பின்பு நீங்கள் தயார் செய்த இந்தப் பொடியில் இருந்து கொஞ்சம் எடுத்து அந்த சாம்பிராணியோடு சேர்த்துவிடுங்கள்.

இந்த தூரத்தில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் இறை சக்தியை வசிய படுத்தக் கூடியது. இந்த வாதத்திற்கு மயங்காத நல்ல சக்தியே கிடையாது என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது. பிரச்சினை உள்ள வீட்டில் கட்டாயம் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் இந்த வாசம் நிறைந்த தூபத்தை போட்டு, இந்த புகையை வீடு முழுவதும் காண்பித்து வர வேண்டும். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் விடிவு காலம் பிறக்க தொடங்கும். வாழ்நாள் முழுவதும் உங்கள் வீட்டில் இறை சக்தியானது மனநிறைவோடு தங்கி வரங்களை வாரி வழங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -