இயற்கை பூச்சி கொல்லி மருந்தான முட்டை அமினோ ஆசிட் பத்தி தெரியும்மா? வீட்டில் செடி வைத்து இருப்பவர்கள் இதை தெரிஞ்சி வைச்சிகிட்டா இனி காசு கொடுத்து பூச்சி கொல்லி மருந்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை.

- Advertisement -

வீட்டுத் தோட்டம் வைத்து செடி வளர்ப்பவர்களுக்கு பூச்சி கொல்லி மருந்துகளை வெளியில் இருந்து வாங்கி பயன்படுத்துவதை விட, நான் வீட்டில் அன்றாடம் உணவுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து இந்த மருந்துகளை தயாரித்து வைத்துக் கொண்டால், மருந்து வாங்கும் செலவும் குறையும். செடிகளுக்கும் நல்ல இயற்கை பூச்சி கொல்லி மருந்தை கொடுத்த திருப்தி இருக்கும். அந்த வகையில் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு கொடுக்க ஒரு பயனுள்ள உரத்தை எப்படி தயாரிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பூச்சி கொல்லி தயாரிக்க நமக்கு தேவையான பொருட்கள் ஒரு முட்டை இரண்டு எலுமிச்சை பழம் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம். ஒரு அகலமான பிளாஸ்டிக் பாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முட்டையை முழுதாக சேர்த்த பிறகு எலுமிச்சை பழத்தை நறுக்கி சாறு பிழிந்து ஊற்றி, தோலையும் அதில் சேர்த்து போட்டு பாட்டிலை இறுக்கமாக மூடி வைத்து விடுங்கள். எலுமிச்சை சாறில் முட்டை மூழ்கி இருக்க வேண்டும். இது 10 நாட்களுக்கு அப்படியே இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பத்து நாட்களுக்குள் முட்டையின் ஓட்டை எலுமிச்சை பழ சாற்றில் உள்ள அமிலம் நன்றாக அரித்து முட்டை உடைந்து அது இந்த கலவைகளுடன் கலந்து இருக்கும். இப்போது இந்த பாட்டிலை திறந்து இதில் இருக்கும் அமிலத்தின் (ஒரு முட்டை அளவு) அளவிற்கு வெல்லம் சேர்த்து ஒரு கரண்டி அல்லது குச்சி வைத்து முட்டை ஓடு ,வெல்லம், எலுமிச்சை சாறு எல்லாம் நன்றாக கலக்கும் படி கலந்து மறுபடியும் மூடி வைத்து விட வேண்டும் இது மேலும் 10 நாட்கள் அப்படியே இருக்க வேண்டும். அடுத்த பத்து நாள் கழித்து பார்த்தால் முட்டை அமினோ ஆசிட் தயாராகி இருக்கும். இது செடிகளுக்கு நல்ல இயற்கையான பூச்சிக் கொல்லியாக இது செயல்படும்.

இந்தக் கலவையை 2 ml மட்டும் எடுத்து அதை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டி ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி செடிகளுக்கு தெளித்து விடுங்கள். இது மாதத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த மருந்தை கொடுத்தால் போதும். நீங்கள் தயார் செய்து வைத்த கலவை மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

- Advertisement -

இந்த மருந்தை பயன்படுத்தும் போது செடிகளின் இலைகள் நல்ல பசுமை நிறத்தில் பெரியதாகவும் கிளைகள் அதிகம் வைத்து மொட்டுக்கள் அதிகம் காய்கறி செடிகளாக இருந்தால் காய்களும் அதிகமாக வைக்கும். இதில் இருக்கும் ஆசிட் செடிகளில் உள்ள பூச்சி, இலை அழுகளில், போன்ற நோய்களும் வராமல் பாதுகாக்கும்.

வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள் இந்த பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்தினால் செடிகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நன்றாக செழித்து வளரும். குறிப்பாக ரசாயனம் கலந்த எந்த மருந்தையும் போடாமல் நல்ல முறையில் செடிகளை வளர்க்க முடியும்.

- Advertisement -