அடகு கடைக்கு சென்ற நகை வீடு திரும்பவில்லையா? நம்பி கொடுத்த இடத்தில் இருந்து நகை வரவில்லையா? இந்த பரிகார முறையை செய்து பாருங்கள் இதற்குரிய பலனை கண்டிப்பாக உணர்வீர்கள்.

mahalakshmi gold
- Advertisement -

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்து நகைகளாக வாங்குவது பெண்களின் விருப்பமான செயலாக கருதப்படுகிறது. அவ்வாறு வாங்கும் நகைகளை கஷ்டம் ஏற்படும் நேரத்தில் அடகு வைக்கவும் கொடுக்க தயங்க மாட்டார்கள். அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு முயற்சிகளும் செய்வார்கள். இருப்பினும் சில நேரங்களில் அந்த முயற்சிகள் பலன் அளிப்பது இல்லை. முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் அடகு வைத்த நகையை திருப்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வீட்டு சூழ்நிலை காரணமாக அடகு கடைக்கு சென்ற நகைகளை திருப்புவதற்கும், உறவினர்களிடம் கொடுத்த நகைகளை திரும்ப வாங்குவதற்கும், நகைகளை திருப்பவே முடியாது என்ற சூழ்நிலையில் இருந்தாலும் இந்த தாந்திரீக முறைப்படி நாம் பரிகாரம் செய்தால் கண்டிப்பான முறையில் நம்முடைய நகைகள் நம்மை வந்து சேரும். மென்மேலும் நகைகள் அதிகரிக்கும்.

- Advertisement -

சுவர்ண தேவதைக்காக நாம் செய்யக் கூடிய இந்த தாந்திரீக பரிகாரத்தை நாம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும். மேலும் சுக்கிர ஓரை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு எலுமிச்சம் கனி தேவைப்படும். அந்த எலுமிச்சங்கனியில் எந்த வித புள்ளிகளும் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும் இதனுடன் அரகஜா, ஜவ்வாது, கோரசோனை போன்ற வாசனை திரவியங்கள் வேண்டும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சிறிது பச்சரிசி தேவைப்படும்.

தெய்வங்களை வசியம் செய்யக் கூடிய கனியாக கருதப்படும் எலுமிச்சம் கனியை நாம் ஒரு எந்திரத்தின் மீது வைக்க வேண்டும். அந்த எந்திரத்தை நாம் பேப்பரில் நம் கைப்பட வரைந்து அதில் மந்திரத்தை எழுதி அதன் நடுவில் வைக்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு வரைந்து மந்திரத்தை எழுதிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு தாம்பாளத்தை எடுத்து அதில் சிறிது பச்சரிசியை கொட்ட வேண்டும். அதன் மேல் இந்த எந்திரம் வரைந்த பேப்பரை வைக்க வேண்டும். அந்த எந்திரத்தின் நடுவில் எலுமிச்சம் கனியை வைக்க வேண்டும். அந்த எலுமிச்சம் கனிக்கும் மேல் நமது நடுவிரலை பயன்படுத்தி அரகஜாவை வைக்க வேண்டும். அதன் மேல் ஜவ்வாதை வைக்க வேண்டும். மறுபடியும் அரகஜாவை வைக்க வேண்டும். அதன்மேல் கோரசோனையை வைக்க வேண்டும். இவை அனைத்தையும் நடுவிரலால் தான் வைக்க வேண்டும்.

இவை அனைத்தையும் செய்து முடித்த பிறகு உங்கள் மனதிற்குள் “தீம் ஐயும் கிலியும் ஸ்ரீயும் சௌவும் றீம் கிலீம் ஓம்” என்ற மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சுவர்ண தேவதை நம் வசப்படுவாள். மேலும் ஸ்வர்ண தேவதை வசப்பட்ட இடத்தில் நகைகள் சேரும். அவை அடகு வைத்த நகையாக இருந்தாலும் சரி, புதிய நகையாக இருந்தாலும் சரி. இவற்றை மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம். அவ்வாறு மாற்றும் பொழுது பச்சரிசியையும், எலுமிச்சை கனியையும் கால்படாத இடத்தில் போடலாம். எந்திரம் வரைந்த பேப்பரை மறுபடியும் நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இரவு உறங்க செல்லும் முன் இந்த ஒரு வார்த்தையை உங்கள் உள்ளங்கையில் எழுதிய பிறகு உறங்கினால் உறங்க விடாமல் பாடாய்படுத்தும் பிரச்சனைகள் யாவும் விடியும் முன்பே உங்களை விட்டு விலகி விடும்.

மிகவும் எளிமையான இந்த ஸ்வர்ண ஆகர்ஷண பரிகாரத்தை நாமும் நம் வீட்டில் செய்து அடகு வைத்த நகைகள் அனைத்தையும் திருப்பி மகிழ்ச்சியுடன் வாழலாம்.

- Advertisement -