இழந்ததை மீட்க முருகன் வழிபாடு

murugan7
- Advertisement -

வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்தை நாம் இழக்கும் போது, இழக்காமல் இருக்க வேண்டிய ஒரு விஷயம் மன தைரியம், தன்னம்பிக்கை. பொன் பொருள் சொத்து எல்லாம் இழந்து விட்டாலும் பரவாயில்லை. மன தைரியமும் நம்பிக்கையும் நம் உடனே இருந்தால் இழந்ததை எல்லாம் மீட்டெடுத்து விடலாம். ஆனால் இன்றைக்கு இருக்கும் மக்கள், பணத்தை இழந்த பிறகு, சொத்தை இழந்த பிறகு, முதலில் இழப்பது இந்த மன தைரியத்தை தான்.

மன தைரியத்தை வர வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அந்த முருகப்பெருமான் நீங்கள் இழந்ததை எல்லாம் திரும்பவும் மீட்டுக் கொண்டு வந்து உங்கள் கையிலே கொடுப்பார். இழந்ததை மீட்டெடுக்கக்கூடிய சக்தி வாய்ந்த முருகர் வழிபாட்டை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

இழந்ததை மீட்டு தரும் முருகர் வழிபாடு

27 செவ்வாய்க்கிழமை உங்களுடைய வீட்டில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் இழந்தது எதுவாக இருந்தாலும் அதை மீட்டுக் கொடு முருகா என்று சண்டை போட்டு முருகரிடம் கேட்கலாம். இந்த வழிபாட்டிற்கு திருச்செந்தூர் முருகரின் திரு உருவப்படம் பூஜை அறை இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. இல்லை என்பவர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் முருகர் படத்திற்கே இந்த வழிபாட்டை செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் முருகப் பெருமானுக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் அரளிப்பூ வாங்கி போட வேண்டும். செவ்வரளி பூக்கள் தான் தேவை. பிங்க் நிறத்தில் இருக்கும் பூக்களை இந்த வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம். சிரமம் பார்க்காமல் செவ்வரளி பூக்களை வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகருக்கு கல்கண்டு, உலர் திராட்சை, வாழைப்பழம் எது கிடைக்கிறதோ ஒரு நெய்வேத்தியம் வைக்கவும்.

- Advertisement -

முருகரின் முன்பு அமர்ந்து ‘ஓம் ஸ்ரீ சரவணபவ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். நீங்கள் இழந்த ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் அல்லவா. அந்த விஷயத்தை முருகனிடம் சொல்லுங்கள். இது எனக்கு திரும்பவும் வேண்டும் என்று. உதாரணத்திற்கு இழந்த சொத்து, இழந்த பணம், இழந்த நகை இப்படி எது வேண்டுமென்றாலும் கேட்கலாம். நீங்கள் சில உறவுகளை இழந்திருப்பீர்கள்.

கணவர் உங்களை விட்டு பிரிந்திருக்கலாம்‌. மனைவி உங்களை விட்டு பிரிந்திருக்கலாம். பெற்ற பிள்ளைகள் கூட உங்களை விட்டு பிரிந்து இருக்கலாம். அந்த உறவுகளை திரும்பவும் மீட்டு தரச் சொல்லியும் நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். 27 செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை தவற விடாதீங்க. பெண்கள் இந்த வழிபாட்டை செய்தால் மாதவிடாய் வாரத்தை மட்டும் தவிர்த்துவிட்டு, அடுத்த வாரம் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பர்சில் நிறைய பணம் சேர பரிகாரம்

உங்கள் இஷ்டத்திற்கு விட்டுவிட்டு இந்த வழிபாட்டை மேற்கொள்ளக்கூடாது. 27 வாரம் தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை செய்யும்போது முருகப்பெருமான் நீங்கள் இழுந்ததை மீட்டிக் கொண்டு வந்து உங்கள் கையிலே கொடுப்பார் என்பது நம்பிக்கை. ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெரலாம்.

- Advertisement -