முகத்திலிருக்கும் எல்லா வகையான பிரச்சனைக்கும் 1/2 மணி நேரத்தில் நல்ல தீர்வு கிடைக்க, இந்த 2 பொருள் போதும். இதை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது?

jathikkai-face
- Advertisement -

நம்முடைய முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் என்று பட்டியலிட்டால் அந்த வரிசையில் நிறைய பிரச்சனைகள் அடங்கும். முகப்பரு கரும்புள்ளி, மங்கு, மரு, சூரிய ஒளியால் ஏற்படும் கருநிறம், சுருக்கம், கண்களை சுற்றி கருவளையம், இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இந்தப் பட்டியல் இன்னும் நீளமானது. இன்னும் சொல்ல முடியாத நிறைய பிரச்சனைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சருமத்தில் இருந்து வருகிறது. இந்த எல்லாவகையான பிரச்சனைக்கும் ஒரு சிறந்த தீர்வு இயற்கையாகவே நமக்குச் சொல்லப்பட்டு உள்ளது. அந்த தீர்வினைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த குறிப்புக்கு நமக்குத் தேவை படப்போவது இரண்டு பொருள். மகிழம் பூ, ஜாதிக்காய் பொடி, இந்த இரண்டு பொருட்களும் அவசியம் தேவை. இதனுடன் ஆலிவ் ஆயில் நமக்கு தேவைப்படும். உலர்ந்த மகிழம்பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. அதை வாங்கி வீட்டிலேயே நீங்கள் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடி செய்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

1 ஸ்பூன் ஜாதிக்காய் பவுடர், 1/2 ஸ்பூன் மகிழம்பூவை போட்டு அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி நன்றாக குழைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை உங்களுடைய முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். முகம் முழுவதும் போட்டுக் கொண்டாலும் தவறு கிடையாது. உங்களுடைய சருமத்தில் எந்த இடத்தில் எல்லாம் பிரச்சனை இருக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் போட்டுக் கொண்டாலும் சரிதான்.

1/2 மணி நேரம் கழித்து உங்கள் முகத்தில் போட்ட இந்த பேஸ்டை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். ஒருமுறை 1/2 மணி நேரம் போட்ட உடனேயே நிச்சயமாக உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். கரும்புள்ளியாக இருந்தாலோ, தழும்பாக இருந்தாலோ அது கொஞ்சமாக குறைந்திருப்பதை நிச்சயமாக உங்களால் கண்கூடாக கண்ணாடியில் பார்க்க முடியும்.

- Advertisement -

தினம்தோறும் இப்படி இந்த மகிழும் பூ பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்த கலவையை 1/2 மணி நேரம் முகத்தில் போட்டு வரும் போது முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் படிப்படியாக குறையத் தொடங்கும். தினமும் இதை முகத்தில் பயன்படுத்தி வருவதால் பக்கவிளைவுகள் வந்து விடுமோ என்று பயப்பட வேண்டாம். இந்த இரண்டு பொருட்களும் இயற்கையாக நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் என்பதால் பக்க விளைவுகள் எதுவும் வராது.

உங்களுக்கு ஆயில் ஸ்கின் ஆக இருக்கும் பட்சத்தில் ஆலிவ் ஆயில் பயன்படுத்தி இந்த இரண்டு பொருட்களையும் கலக்க வேண்டாம். பன்னீர் ஊற்றி கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். தினம் தோறும் இதை செய்ய முடியவில்லை என்றாலும் ஒரு நாள் விட்டு ஒருநாள் வாரத்தில் மூன்று நாட்கள் செய்து வந்தால் உங்களுடைய சருமம் பொலிவடையும். நம்பிக்கை உள்ளவர்கள் ட்ரை பண்ணி பாருங்க. ரிசல்ட் நிச்சயமா நல்லதாக இருக்கும்.

- Advertisement -