திடீரென்று இவ்வளவு பணம் உங்களுக்கு எப்படி வந்தது? என்று யார் கேட்டாலும் சொல்லாதீங்க! ஜாதிக்காயின் ரகசிய பரிகாரம் உங்களுக்காக.

jathikai
- Advertisement -

இந்த ஜாதிக்காய்க்கு என்று பொதுவாகவே ஒரு இயற்கையான குணம் உண்டு. ஜாதிக்காயை யார் பயன்படுத்தினாலும் சரி, அவர்கள் பொலிவாக மாறிவிடுவார்கள். அதாவது ஜாதிக்காயை இழைத்து பூசிக்கொண்டால் அழகு கூடும். வசீகரத்தை கொடுக்கக்கூடிய அழகை பல மடங்காகப் பெருக்க கூடிய சக்தி இந்த ஜாதிக்காய்க்கு உண்டு. அழகை கொடுக்கக்கூடிய எந்த ஒரு பொருளுக்கும் வசிய தன்மை உண்டு. அதே போல் இந்த ஒரு ஜாதி காயோடு நாம் எந்த ஒரு பொருளை சேர்த்து வைத்தாலும், அதை அழகாக பல மடங்காக பெருகி, அந்தப் பொருளை நம் கைக்கு வசியமாக்கி தரக் கூடிய சக்தியும் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

Jathikkai

இன்றைய சூழ்நிலையில் நிறைய பேர் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. நாம் செய்த கர்ம வினை, நம் தலையெழுத்து, வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றோம். இதையெல்லாம் முழுமையாக சரிசெய்து நம் தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது.  இருப்பினும் கஷ்டங்களில் இருந்து தப்பிக்க சில பரிகாரங்களை நாம் செய்து பார்ப்பதில் தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

அந்தக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் கல்லாப்  பெட்டியில் போட்டு வந்த ஒரு பொருள் தான் இந்த ஜாதிக்காய். அந்த ஜாதிக்காய் வைத்து ஒரு சுலபமான தாந்திரீக பரிகாரத்தை தெரிந்து கொள்ளப் போகின்றோம். மஞ்சள் நிற சதுர வடிவில் இருக்கும் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 3 ஜாதிக்காய் வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து மஞ்சள் நிற நூலால் முடிச்சு போட்டு பீரோவில் வைத்தால் எதிர்பாராத பணவரவு உங்கள் கைக்கு வந்து கொண்டே இருக்கும்.

manjal-mudichu

இதே முடிச்சில் ஒரு ரூபாய்க்கு பதிலாக தங்கத்தை வைத்து முடிச்சு போட்டு வைத்தால் தங்க நகைகள் வீட்டில் சேர்ந்துகொண்டே இருக்கும். இந்த மூன்று ஜாதி காய்களுடன் வெள்ளி நகை களை சேர்த்து வைத்தால் வீட்டில் வெள்ளி சம்பந்தப்பட்ட பொருட்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். சமையலறையில் ஜாதிக்காயோடு ஒரு பிடி அரிசி, ஒரு கைப்பிடி பருப்பு, ஏதோ ஒரு தானிய வகை, இந்த மூன்று பொருட்களையும் வைத்து, முடிச்சு போட்டு இந்த முடிச்சை சமையலறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் உங்கள் வீட்டு சமையல் அறையில் எப்போதும் தனதானியத்திற்கு பஞ்சம் வராது.

- Advertisement -

தொழில் செய்யும் இடத்தில் லாபம் அதிகமாக வரவில்லை என்றால் இதை செய்து பாருங்கள். மேலே சொன்னது போலவே சதுரவடிவில் மஞ்சள் துணி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மஞ்சள் துணியில் மூன்று ஜாதிக்காயை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய காகிதத்தில் லாபம் என்று எழுதி அந்த ஜாதிக்காயோடு வைத்து, அதில் ஒரு ரூபாயை வைத்து, முடிச்சு போட்டு தொழில் செய்யும் இடத்தில் வைத்து பாருங்கள். நஷ்டமாக இருக்கும் தொழில் கூட நல்ல லாபத்தை தரும். படிப்படியாக உங்களுடைய தொழிலில் முன்னேறி செல்வீர்கள்.

cash2

ஜாதிக்காயை எந்த இடத்தில் எதை நினைத்து நாம் வைக்கிறோமோ அது நமக்கு பல மடங்காக பெருகும். ஜாதிக்காய்க்கு அப்பேர்ப்பட்ட ஒரு வசிய தன்மை உண்டு. அழகில் வசியம் ஆகாதவர்கள் யாரேனும் உண்டா. அந்த அழகை கொடுக்கும் சக்தியே இந்த ஜாதிக்காயில் மறைந்திருக்கின்றது. அப்பேர்பட்ட ஜாதிக்காயை வைத்து சொல்லப்பட்டுள்ள சுலபமான சக்திவாய்ந்த பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கையோடு முயற்சி செய்து பார்த்தால். நல்ல பலனைப் பெறலாம். ஜாதிக்காயை வைத்து உங்களுக்கு பணவரவு வந்தால், இதன் மூலம் தான் எனக்கு பணம் வரவு வந்தது என்ற ரகசியத்தை மட்டும் வெளி ஆட்களுக்கு சொல்லவே கூடாது என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -