70 வயதிலும் 20 வயது போல சுறுசுறுப்பா இருக்கலாம். முதுகு வலி, மூட்டு வலி, கழுத்து வலி, போன்ற பிரச்சனைகள் ஆயுசுக்கும் உங்கள் பக்கம் கூட வராது. தினமும் 1 ஸ்பூன் இத சாப்பிடுங்க!

join-pain
- Advertisement -

இப்போது இருக்கும் தாத்தா பாட்டிகளை எல்லாம் பாருங்களேன், 80 வயதிலும் 20 வயது போல சுறுசுறுப்பாக, தங்களுடைய வேலையை தாங்களே செய்து கொள்கிறார்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர்களின் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. 20 வயதிலிருந்து 30 வயதிற்குள்ளாகவே எலும்பு தேய்மானம் கழுத்து வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். 30 வயதையே நம்மால் கடக்க முடியவில்லை. 40 வயதை தாண்டினால் கேட்கவே வேண்டியதில்லை. வாழ்வதற்கே சிரமமாகிவிடும்.

இந்த எலும்பு தேய்மானத்திலிருந்து தப்பித்துக்கொள்ள என்ன செய்வது? இயற்கையான முறையில், ஆரோக்கியமாக, பக்க விளைவுகளை ஏற்படுத்திடாமல், நம் உடலை பாதுகாக்க வேண்டும் என்றால், அவசியம் நீங்கள் இதை தெரிந்து கொண்டே தான் ஆக வேண்டும். இன்று நம் உடலில் பல பிரச்சனைகள் கால்சியம் குறைபாட்டால் தான் ஏற்படுகிறது. கால்சியம் குறைபாட்டை நீக்கி எப்போதுமே புத்துணர்ச்சியாக சுறுசுறுப்பாக இருப்பதற்கு எலும்புகளை வலுப்படுத்துவதற்கு என்ன செய்வது?

- Advertisement -

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 4 டேபிள் ஸ்பூன் அளவு கருப்பு எள்ளை போட்டு, பொரியும் அளவிற்கு வறுத்துக்கொள்ளுங்கள். (கடாய் நன்றாக சூடு ஆன பின்பு எள் போடவேண்டும். எல்லை போட்டோவுடன் படபடவென்று பொரியும்.) உடனடியாக அதை தனியாக ஒரு தட்டில் மாற்றி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இந்த எள்ளை மிக்ஸி ஜாரில் போட்டு, இதனோடு பாதாம் பருப்பு 10, முந்திரி பருப்பு 10, கல்கண்டு இரண்டு கட்டிகள், ஏலக்காய் வாசம் பிடித்தவர்கள் 4 ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம்.

ellu

(ஏலகாய்களையும் சூடான வாணலியில் போட்டு, சூடு படுத்திக் கொண்டு, பொடி செய்தால், தோல் திப்பி திப்பியாகமல் பொடியாகும். அடுப்பை அணைத்துவிட்டு சூடாக இருக்கும் கடாயில் ஏலக்காய்களை போட்டுக் கொள்ளுங்கள். ஏலக்காயின் மேல் இருக்கும் பச்சை தோலின் நிறம் மாறி விடக்கூடாது. ஏலக்காய் சூடு மட்டும் ஆக வேண்டும்.) எல்லாவற்றையும் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் அரைத்த உடனே இந்த பவுடர் கொஞ்சம் சூடாக இருக்கும்.

- Advertisement -

கொஞ்சம் ஈரமில்லாத தட்டில் கொட்டி ஆற வைத்த பின்பு, காற்றுப்புகாத கண்ணாடி டப்பாவில் இந்த பவுடரை சேகரித்து வைத்துக் கொண்டால், ஒரு மாதத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்கும். முடிந்தால் பசும்பால் கிடைத்தால் அதை வாங்கி சூடுபடுத்தி வெதுவெதுப்பாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவு இந்த பவுடரையும் சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். இனிப்பு சுவைக்கு கட்டாயம் வெள்ளை சர்க்கரை சேர்க்கக்கூடாது. நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். (பசும்பால் கிடைக்கவில்லை என்றால் பாக்கெட் பாலில் கலந்து கொடுக்கலாம்.) இந்த பாலைக் கொடுத்து விட்டு உடனடியாக தூங்க செல்ல வேண்டாம். முடிந்தவரை பகல் நேரத்தில் இந்த பாலை குடியுங்கள். பாலைக் குடித்து விட்டு 1 மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும்.

உங்களுக்கு உடல் சோர்வு, மூட்டுவலி, கழுத்துவலி, உடல் நடுக்கம், போன்ற பிரச்சனைகள் இருந்தால் தொடர்ந்து 40 நாட்கள், தொடர்ந்து 1 டம்ளர் பாலில், 1 ஸ்பூன் இந்த பவுடரைக் கலந்து குடித்து வரலாம். பிரச்சினைகள் எதுவும் இல்லை. கால்சியம் குறைபாடு இல்லை. எதிர்காலத்தில் கால்சியம் குறைபாடு வரவே கூடாது என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு 3 நாள் அல்லது 2 நாள் இந்த ஊட்டச்சத்து நிறைந்த பாலை குடிக்கலாம்.

- Advertisement -

milk

15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு தினம்தோறும் இந்த பாலை கொடுக்கக்கூடாது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இந்த பாலை குடிக்க கூடாது. காரணம் எள்ளில் எந்த அளவிற்கு கால்சியம் அதிகமாக இருக்கின்றதோ, அதே அளவிற்கு சூட்டு தன்மையும் அதிகம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய ஆரோக்கியத்தின் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்த பொடியை தயார் செய்து வைத்துக் கொண்டு சாப்பிடலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோமா?

இதையும் படிக்கலாமே
இந்த எண்ணெயை ஒரு சொட்டு இரவில் தூங்கும் போது தடவினாலே போதும். காலையில் எந்திரித்து கண்ணாடி பார்க்கும் போது, உங்களுடைய முகமா இது! என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அழகா மாறுவீங்க!

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -