கடலை பருப்பு 1 கப் இருந்தால் போதும் ருசிக்க ருசிக்க பாயாசம் இப்படியும் செய்து அசத்தலமே! அருமையான கடலை பருப்பு பாயாசம் எளிதாக எப்படி வீட்டில் செய்வது?

kadalai-paruppu-payasam0
- Advertisement -

பல வகையான பாயாச வகைகளில் பருப்பு பாயாசமும் ஒன்று. இந்த பருப்பு பாயாசத்தில் ரொம்பவும் வித்தியாசமான பாயாசம் என்றால் அது கடலை பருப்பு பாயாசம் தான் ஆகும். இந்த கடலை பருப்பு வாயில் தட்டுப்படும் போது வரக்கூடிய சுவையின் ருசியோ அலாதியானதாக இருக்கும். நம்முடைய வீட்டிலேயே ரொம்பவும் எளிமையாக சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்துள்ள இந்த கடலை பருப்பு பாயாசம் எப்படி செய்வது? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

கடலை பருப்பு பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு – ஒரு கப், நெய் – தேவையான அளவு, தண்ணீர் – 3 கப், ஜவ்வரிசி – ரெண்டு ஸ்பூன், வெல்லம் – 100g, தேங்காய் பால் – ரெண்டு கப், ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன், தேங்காய் துண்டுகள் – அரை கைப்பிடி, முந்திரி பருப்பு – 10, உலர் திராட்சை – சிறிதளவு.

- Advertisement -

கடலை பருப்பு பாயாசம் செய்முறை விளக்கம்:
முதலில் அரை மூடி தேங்காயை நன்கு துருவி எடுத்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து இரண்டு கப் அளவிற்கு தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் பாலுக்கு தேவையான அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்தால் போதும். பின்னர் அரை கைப்பிடி அளவிற்கு வருமாறு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக மெல்லியதாக பாயாசத்திற்கு போடுவது போல் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஓரிரு கடலை பருப்பு மற்றும் இந்த தேங்காய் வாயில் தட்டப்படும் பொழுது பருப்பு பாயாசம் ரொம்பவும் சுவையாக இருக்கும். பின் ஒரு கப் அளவிற்கு கடலைப்பருப்பை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு நன்கு காய விடுங்கள். நெய் நன்கு காய்ந்ததும் நீங்கள் எடுத்து வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து ஒரு முறை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். கடலை பருப்பு நன்கு பொன்னிறமாக வறுபட்டதும் மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கப் கடலை பருப்புக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும். பின்னர் குக்கரை மூடி வைத்து ஐந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 100 கிராம் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்த்து அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொதிக்க விட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்து அதை வடிகட்டி பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்புடன் வெல்லப்பாகு சேர்ந்ததும் கொஞ்சம் ஏலக்காய் தூள் வாசனைக்கு தூவி கொள்ளுங்கள். பின்னர் இரண்டாவதாக எடுத்து வைத்த தேங்காய் பாலை ஒரு கப் அளவிற்கு ஊற்றி கொதிக்க விட வேண்டும். பருப்பு தேங்காய் பாலுடன் சேர்த்து நன்கு கொதித்து வரும் பொழுது, அடுப்பை அணைத்து விட வேண்டும். அடுப்பை அணைத்த பிறகு நீங்கள் முதலில் எடுத்த தேங்காய் பாலை ஒரு கப் அளவிற்கு சேர்க்க வேண்டும்.

முதல் பால் சேர்க்கும் பொழுது திரிவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே அடுப்பை அணைத்த பின்பு சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் விட்டு நங்கு காய விடுங்கள். நெய் காய்ந்ததும் அதில் நீங்கள் நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முந்திரி பருப்புகளையும், உலர் திராட்சைகளையும் பொடித்து பொன்னிறமாக சிவக்க வறுத்து பாயாசத்துடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க, சுவையான கடலைப்பருப்பு பாயாசம் இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -