கடன் அடைய நீங்கள் செய்யும் எந்த பரிகாரமும் பலன் அளிக்க வில்லையா? அதற்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம். முதலில் இதை செய்த பிறகு பரிகாரத்தை செய்யுங்கள் விரைவில் கடன் அடைந்து விடும்.

- Advertisement -

இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் சொல்லும் முதல் வார்த்தை கடன் தான். எனக்கு இவ்வளவு கடன் பிரச்சனை இருக்கிறது, கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை, கடன் பிரச்சனையை சமாளிக்கவே முடியவில்லை என்று திரும்பிய பக்கம் எல்லாம் கடன் என்னும் வார்த்தை தான் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த கடனை அடைக்க எத்தனையோ வழிகள், பரிகாரங்கள் எல்லாம் இருந்தாலும், சிலருக்கு அதன் மூலம் எந்த பலனும் கிடைப்பதில்லை. அதற்கும் சில காரணங்கள் உண்டு என சாஸ்திரங்கள் சொல்கிறது. அது என்ன காரணம் என்று தெரிந்து கொண்டு அதை எப்படி சரி செய்வது என்பதை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

முதலில் இந்த கடனாது தேவைக்கு மட்டும் செலவு செய்து சிக்கனமாக வாழ்பவர்களுக்கு வாங்க வேண்டிய அவசியமே ஏற்படாது. அனாவசிய செலவுகள் செய்து ஆடம்பர வாழ்க்கைக்காக நாம் கடன் வாங்கி விட்டோம் என்றால், கண்டிப்பாக நீங்கள் என்ன செய்தாலும் அதிலிருந்து மீள முடியாது. என்ன தான் பரிகாரம் செய்தாலும், வருமானத்தை பெருக்க, பண வரவிற்கு என பூஜைகளையும் செய்தாலுமே கூட, தேவைக்கு மீறி செலவு செய்யும் பழக்கம் இருப்பவர்களிடம் எப்போதும் கடனும் இருந்து கொண்டே தான் இருக்கும். இதை தெளிவாக புரிந்து கொண்டு கடனை அடைக்க பரிகாரத்தை மேற் கொள்ளுங்கள்.

- Advertisement -

கடனை அடைக்க எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் அது நமக்கு பலன் அளிக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் நம் கர்ம வினைகளாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நம் கர்ம வினைகள் நம்முடன் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் போது நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் பலன் அளிக்காது. முதலில் அதை சரி செய்த பிறகு, நீங்கள் பரிகாரத்தை தொடர்ந்தால் பலன் அளிக்கும். இதில் குறிப்பிட்டு இருக்கும் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கர்ம வினையின் தாக்கம் குறைவதோடு, கடன் அடையவும் வழி பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு நமக்கு இரண்டு பொருட்கள் தேவை ஒன்று கல்லுப்பு. மற்றொன்று கற்றாழை ஜெல். இதை கற்றாழை ஜெலை கடையில் வாங்கி பயன்படுத்தக் கூடாது. கற்றாழை மடலை எடுத்து அதன் தோல் சீவி சுத்தப்படுத்திய ஜெல் தான் இதற்கு தேவை. இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் செய்தால் கூடுதல் பலன் உடனடியாக கிடைக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரதை வீட்டின் தலைவர் தான் செய்ய வேண்டும். அந்த வீட்டை மனைவி நிர்வாகிப்பவராக இருந்தால் மனைவி செய்ய வேண்டும். வீட்டு நிர்வாகிப்பவர் யாரோ அவர் வீட்டின் ஹாலில் நின்று கொண்டு, வலது கையில் கொஞ்சம் உப்பை எடுத்து இடது கையில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் கற்றாழை ஜெல்லையும் வலது கையில் எடுத்து இடது கையில் வைத்துக் கொள்ளுங்கள். இது இரண்டும் உங்கள் இடது கையில் தான் இருக்க வேண்டும்.

இப்போது கிழக்கு பார்த்த படி நின்று கையில் இருக்கும் உப்பையும், ஜல்லையும் வைத்து உங்களுக்கு நீங்களே சுற்றி போட வேண்டும். இது ஆன்டி கிளாக் வைசில் சுற்ற வேண்டும். அதாவது கடிகாரம் சுற்றுவதற்கு எதிர்ப்புறமாக சுற்ற வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் சுற்றி போடலாம் இல்லாத பட்சத்தில் நமக்கு நாமே சுற்றி போட்டுக் கொள்ளலாம். ஆனால் சிறியவர்கள் பெரியவருக்கு சுற்ற கூடாது. இப்படி சுற்றிய பிறகு கையில் இருக்கும் உப்பையும், கற்றாழை ஜெல்லையும் கால்படாத இடத்தில் போட்டு விட்டு கை கால்களை நன்றாக அலம்பி கொண்டு வீட்டிற்குள் வர வேண்டும்.

- Advertisement -

இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வர வேண்டும். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினால், தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து கொள்ளுங்கள். வேறு எந்த கிழமையில் தொடங்கினாலும் அதே கிழமையில் அடுத்த வாரங்களில் செய்து கொள்ளுங்கள். இதை செய்ய, செய்ய உங்களுக்கான கர்ம வினைகளின் தாக்கம் குறைவதோடு, திருஷ்டி போன்றவைகளும் இதன் மூலம் கழிந்து கடன் அடைவதற்கான வாய்ப்பையும் இந்த கல்லுப்பு, கற்றாழை பரிகாரம் உங்களுக்கு தேடித் தரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருளை தானம் செய்தால் செல்வம் அழியுமாம் தெரியுமா? தானம் செய்யக்கூடாத பொருட்கள்!

எந்த ஒரு பரிகாரமும் செய்வதற்கு முதலில் நமக்கு நம்பிக்கை வேண்டும். இந்த கல்லுப்பை வைத்து செய்யப்படும் பரிகாரங்கள் அனைத்துமே நல்ல பலன்களை கொடுக்கும். நீங்களும் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -